அனைத்திந்திய சேவை விதிகளின் இறப்பு மற்றம் ஓய்வு பலன்கள் தொடர்பான பிரிவில் திருத்தங்களை கொண்டு வர மத்திய பணியாளர் நலவாரியத்துறை முடிவு செய்துள்ளது. இதன்படி அனைத்திந்திய சேவை துறைகளைச் சேர்ந்த 80 வயதிற்கு மேற்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கு அவர்களின் அடிப்படை ஓய்வூதிய தொகையை விட கூடுதலாக 20 சதவீதம் ஓய்வூதிய தொகையாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் ஓய்வூதிய தொகை ஒவ்வொரு ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை அதிகரிக்கப்பட்டு 100 வயதை எட்டும் போது அவருக்கு வழங்கப்படும் கூடுதல் ஓய்வூதிய தொகை, அடிப்படை ஓய்வூதிய தொகையின்படி 100 சதவீதமாக்கப்படும். குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் இந்த சலுகை வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
|