தேவையானவை :
சீரக சம்பா அரிசி - 200 கிராம் பொடித்த முந்திரிப் பருப்பு - 100 கிராம் வெண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன் கிராம்பு - 2 பால் - 2 லிட்டர் குங்குமப்பூ - 5 இலை தேங்காய் துருவல் - 3 டேபிள்ஸ்பூன் சீனி - 150 கிராம்
செய்முறை:
1.கனமான பாத்திரத்தில் பாலை, குங்குமப்பூ சேர்த்துக் காய்ச்சவும். 2.ஒரு லிட்டர் பாலைத் தனியே எடுத்து வைக்கவும்.மீதம் இருக்கும் பாலை கொதிக்க வைக்கவும். 3.வானலியில் 2 டேபிள்ஸ்பூன் வெண்ணெயில் அரிசியை வறுக்கவும். 4.பொன் நிறத்தில் மாறிப் பொரிய ஆரம்பிக்கும் போது எடுத்து, கொதித்துக் கொண்டிருக்கிற பாலில் போட்டுக் கிண்டவும். 5.அரிசி உடைந்து வேக ஆரம்பிக்கும்போது முந்திரி விழுது சேர்க்கவும். 6.தனியே எடுத்து வைத்துள்ள ஒரு லிட்டர் பாலை,சிறிது சிறிதாக 5 நிமிட இடைவெளி விட்டுச் சேர்த்துக் கெட்டியாகக் கிளறவும். பிறகு சீனி, கிராம்பு சேர்க்கவும். 7.கலவை பஞ்சாமிர்தப் பதத்துக்கு வரும் வரை கிளறி, அடுப்பை அணைக்கவும். 8.2 டேபிள் ஸ்பூன் வெண்ணெயை அதில் சேர்க்கவும். மீதி 1 டேபிள்ஸ்பூன் வெண்ணெயில் தேங்காய் துருவலை பொன்னிறத்துக்கு வறுத்துச் சேர்க்கவும். 9.லேசான மஞ்சளும் பழுப்பும் கலந்த கலரில் இருக்கும். இந்தப் பாயசத்தை குளிர வைத்துப் பரிமாறவும்.
|