தேவையானவை :
புரோக்கலி- இரண்டு
தேங்காய்ப்பூ - அரை கப்
காய்ந்தமிளகாய்- நான்கு
துவரம்ப்பருப்பு- ஒரு மேசைக்கரண்டி
கடுகு சீரகம்- ஒரு தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு- ஒரு தேக்கரண்டி
மஞ்சததுள்- கால் தேக்கரண்டி
உப்பு-அரைத் தேக்கரண்டி
எண்ணெய்- ஒரு மேசைக்கரண்டி
செய்முறை :
1.புரோக்கலியை சிறிதாக நறுக்கி வைக்கவும்.
2.வாணலியில் கடுகு சீரகத்தைப் போட்டு அவை பொரிந்ததும் உளுத்தம் பருப்பு மற்றும் காய்ந்த மிளகாயைப் போடவும்.
3.பின்பு அதில் புரோக்கலியைப் போட்டு வதக்கவும்.
4.பிறகு மஞ்சதூள் மற்றும் உப்பைப் போட்டு கிளறி சிறிது நீரை தெளித்து வேகவிட்டு தேங்காயைப் போட்டு கிளறவும்.
5.காய் நன்கு வெந்தவுடன் வேகவைத்த துவரம் பருப்பைப் போட்டு அரைத்தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை பிழிந்து விட்டு கிளறி இறக்கவும்
6.சுவையான சத்து மிகுந்த பொரியல் தயார்.
|