இந்திய எல்லை பகுதிகளில் அண்டை நாடுகள் அத்துமீறி நடத்தும் தாக்குதல்களில், அடிக்கடி வீரர்கள் பலியாவதை தடுக்க ரோபோ வீரர்களை தயாரிக்கும் பணியில் இந்தியா ஈடுபடவுள்ளதாக ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மைய தலைவர் அவினாஷ் சந்தர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விரிவாக கூறியதாவது, வரும் காலங்களில் ஆளில்லா போர் முறைதான் பின்பற்றப்படும். அதற்காக ரோபோ வீரர்களை உருவாக்கும் பணியில் நாங்கள் ஈடுபட போகிறோம். மிகவும் திறமைசாலிகளாகவும், புத்திசாலித்தனமாகவும் செயல்படும் விதத்தில் ரோபோ வீரர்களை உருவாக்குவது பற்றி ஆய்வுகள் மேட்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக பல ஆய்வகங்கள் ஏற்கனவே பெரியளவில் இயங்கி வருகின்றன. தொடக்கத்தில் ரோபோ வீரர், மனித வீரருக்கு உதவியாக செயல்படுவார். எதிரியை அடையாளம் காணும் விதம் குறித்து ரோபோ வீரருக்கு, மனித வீரர் அறிவுறுத்துவார். பின் படிப்படியாக, எல்லையில் ரோபோ வீரரை நிறுத்தும் அளவுக்கு தொழில்நுட்பம் மேம்படுத்தப்படும்
|