அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரம் களைகட்டியுள்ள நிலையில் நேற்று ஒபாமா மற்றும் ரோம்னிக்கு இடையில் நேருக்கு நேர் விவாதத்தில் ஈடுபட்டனர். நேருக்கு நேர் விவாதத்தில் அதிபர் பராக் ஒபாமாவை குடியரசுக் கட்சி வேட்பாளர் மிட் ரோம்னி முந்தியுள்ளார். அமெரிக்காவில் 1960ஆம் ஆண்டு முதல் அதிபர் தேர்தல் நடக்கும் போது வேட்பாளர்கள் தொலைக்காட்சி விவாதத்தில் நேருக்கு நேர் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை கூறுவார்கள். மூன்று முறை இதுபோன்று விவாதம் நடத்தப்படும். இதில் சிறப்பாக கருத்துக்களை முன் வைக்கும் வேட்பாளருக்கு உடனடியாக மக்கள் ஆன்லைன் மற்றும் போனில் ஓட்டு போடுவார்கள் இதன் மூலம் அந்த வேட்பாளருக்கு உள்ள ஆதரவை தெரிந்து கொள்ளலாம். அதிக ஓட்டு வாங்குபவருக்கு அது பிரசாரத்துக்கு பெரிதும் பலம்சேர்க்கும். அடுத்த மாதம் நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளரும் அதிபருமான ஒபாமா மற்றும் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் மிட் ரோம்னி ஆகியோருக்கு இடையே பலத்த போட்டி உள்ளது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் மிட் ரோம்னி தற்போதைய அதிபர் ஒபாமாவை விட அதிக வாக்குகள் பெற்றுள்ளார். இது தேர்தலில் அவருக்கு பெரிதும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 7% பேரின் ஓட்டுகள் மிட் ரோம்னிக்கு கிடைத்தது. ஆனால், தற்போதைய அதிபர் ஒபாமாவுக்கு 25% ஓட்டுக்கள் மட்டுமே கிடைத்தது.
இப்படிப்பட்ட நிகழ்சிகள்தான் அமெரிக்காவை ஒரு வளர்ந்த நாடாகவும் மற்ற நாடுகள் அவர்களிடம் இருந்து இந்த தலைமைப் பண்புகளை கற்றுக்கொள்ளும் நிலையில் வைத்திருக்கிறது. அமெரிக்காவில் மக்களிடம் நேர்மையாக வெளிப்படையாக தன் திறமையை வெளிப்படுத்தி அதன்மூலம் தலைமைப் பொறுப்பை ஏற்று, மக்களுக்கு பதில் சொல்லும் கடமையுடன் வேலைசெய்யும் தலைமை பணியாளராக நாட்டின் அதிபர் விளங்குகிறார்.
இதை ஒவ்வொரு இந்தியனும் கட்டாயமாக பார்க்கவேண்டும். அப்போதுதான் நம் அரசியல் எவ்வளவு தரம் தாழ்ந்து உள்ளது என்பதை உணரமுடியும். ஒரு தலைவர் தான் சாகும்வரை தலைவராகவே விளங்கவேண்டும் என்ற நிலையும், தனக்குப் பிறகு தன் குழந்தைகள் மற்றும் பேரன்கள்தான் கட்சியின் அடுத்த தலைவர்கள் என்ற ஜமீன்தார் முறைஎன்ற நிலை, மாற்று சிந்தனை உள்ளவர்களை,எதிர் கட்சிகளை எதிராளியாக பார்க்கும் பண்பற்ற அரசியல் இவைகளே தமிழகத்தின், இந்தியாவின் சாபக்கேடான அரசியல்.
|