LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

ஒரே மேடையில் ஒபாமா மற்றும் ரோம்னி

அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரம் களைகட்டியுள்ள நிலையில் நேற்று ஒபாமா மற்றும் ரோம்னிக்கு இடையில் நேருக்கு நேர் விவாதத்தில் ஈடுபட்டனர். நேருக்கு நேர் விவாதத்தில் அதிபர் பராக் ஒபாமாவை குடியரசுக் கட்சி வேட்பாளர் மிட் ரோம்னி முந்தியுள்ளார். அமெரிக்காவில் 1960ஆம் ஆண்டு முதல் அதிபர் தேர்தல் நடக்கும் போது வேட்பாளர்கள் தொலைக்காட்சி விவாதத்தில் நேருக்கு நேர் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை கூறுவார்கள். மூன்று முறை இதுபோன்று விவாதம் நடத்தப்படும். இதில் சிறப்பாக கருத்துக்களை முன் வைக்கும் வேட்பாளருக்கு உடனடியாக மக்கள் ஆன்லைன் மற்றும் போனில் ஓட்டு போடுவார்கள் இதன் மூலம் அந்த வேட்பாளருக்கு உள்ள ஆதரவை தெரிந்து கொள்ளலாம். அதிக ஓட்டு வாங்குபவருக்கு அது பிரசாரத்துக்கு பெரிதும் பலம்சேர்க்கும். அடுத்த மாதம் நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளரும் அதிபருமான ஒபாமா மற்றும் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் மிட் ரோம்னி ஆகியோருக்கு இடையே பலத்த போட்டி உள்ளது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் மிட் ரோம்னி தற்போதைய அதிபர் ஒபாமாவை விட அதிக வாக்குகள் பெற்றுள்ளார். இது தேர்தலில் அவருக்கு பெரிதும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 7% பேரின் ஓட்டுகள் மிட் ரோம்னிக்கு கிடைத்தது. ஆனால், தற்போதைய அதிபர் ஒபாமாவுக்கு 25% ஓட்டுக்கள் மட்டுமே கிடைத்தது.

 

இப்படிப்பட்ட நிகழ்சிகள்தான் அமெரிக்காவை ஒரு வளர்ந்த நாடாகவும் மற்ற நாடுகள் அவர்களிடம் இருந்து இந்த தலைமைப் பண்புகளை கற்றுக்கொள்ளும் நிலையில் வைத்திருக்கிறது.  அமெரிக்காவில் மக்களிடம் நேர்மையாக வெளிப்படையாக தன் திறமையை வெளிப்படுத்தி அதன்மூலம் தலைமைப் பொறுப்பை ஏற்று, மக்களுக்கு பதில் சொல்லும் கடமையுடன் வேலைசெய்யும் தலைமை பணியாளராக நாட்டின் அதிபர் விளங்குகிறார்.  

இதை ஒவ்வொரு இந்தியனும் கட்டாயமாக பார்க்கவேண்டும்.  அப்போதுதான் நம் அரசியல் எவ்வளவு தரம் தாழ்ந்து உள்ளது என்பதை உணரமுடியும். ஒரு தலைவர் தான் சாகும்வரை தலைவராகவே விளங்கவேண்டும் என்ற நிலையும், தனக்குப் பிறகு தன் குழந்தைகள் மற்றும் பேரன்கள்தான் கட்சியின் அடுத்த தலைவர்கள் என்ற ஜமீன்தார் முறைஎன்ற நிலை, மாற்று சிந்தனை உள்ளவர்களை,எதிர் கட்சிகளை எதிராளியாக பார்க்கும் பண்பற்ற அரசியல் இவைகளே தமிழகத்தின், இந்தியாவின் சாபக்கேடான அரசியல்.

by Swathi   on 05 Oct 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு. 5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு.
உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள். உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள்.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள். சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள்.
சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்? சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்?
சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா. சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா.
நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்! நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!
செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை. செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை.
70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம். 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.