LOGO
  முதல் பக்கம்    மற்றவை    சிறப்புக்கட்டுரை Print Friendly and PDF

ரௌத்திரம் பழகு!

இன்றைய சூழலில் நாம் நிச்சயம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களுள் மிக முக்கியமான ஒன்று - `ரௌத்திரம் பழகு`. 


வாழ்க்கையோட்டத்தில் ஓடுவதை சிறிது மணித்துளிகள் நிறுத்திவிட்டு சற்றே சிந்தித்துப் பார்த்தால், நம் ஆசான் பாரதியின் கருத்துக்களை நாம் மறந்துவிட்டுப் பயணிப்பதாகத் தோன்றுதிறது. ஆசானின் கவிதைகளும், தத்துவங்களும் இன்றைக்கு மட்டுமல்ல, வாழ்வின் அனைத்து நிலைகளிலும். அனைத்துத் தலைமுறையினருக்கும் நிச்சயம் பயனளிக்கும்.

 முதலில்  `ரௌத்திரம்` என்றால் என்ன என்பதைப் பற்றிப் பார்ப்போம்;

  • ரௌத்திரம் என்பது ஒரு வகையான நியாயக் கோபம் அல்லது சினம் அல்லது ஆத்திரம்; அதாவது  தனக்கோ அல்லது பிறருக்கோ தவறு/அநீதி இழைக்கப்படும் போது  அதைத் துணிவுடன் எதிர்த்துத் தட்டிக் கேட்கும் ஆத்திரம்தான் ரௌத்திரம்.
  • இன்னும் சரியாகச் சொன்னால், கோபப்பட வேண்டிய இடத்தில் கோபம் கொள்ளாமல் கோழையாய் இல்லாமலிருப்பது ரௌத்திரம்.
  • இப்படி அநீதியை எதிர்த்துத் தவறை தட்டிக்கேட்பதே ரௌத்திரம்.

அன்று அவன் கூறிய கருத்துக்களை நாம் கடைபிடிக்காததினால் வந்த வினைதான் இன்று நம்மைச் சுற்றி நிகழும் கொலைகளும் கொடூரங்களும்! 

ஓடும் பஸ்ஸில் பயணிகளுக்கு மத்தியில் பெண்ணொருத்திக்கு இழைக்கப்படும் கேலியும் கிண்டலும், விஷ்ணுப்பிரியாவின் கொலையைக் கண்ணுக்கெதிரே பார்த்தும் ஒன்றும் செய்யாத ஈனத்தனம், வழிப்பறி நடப்பதைப் பார்த்தும் கண்டுகொள்ளாமல் இருப்பது, வாகன விபத்தில் யாரோ அடிபட்டுக்கிடப்பதைப் பார்த்து கண்மூடிச் செல்வது, பட்டப் பகலில் நம் கண்ணெதிரே வாலிபவனொருவன் ரவுடிகளின் அரிவாளால் வெட்டப்பட்டுச் சரிவதும் தினம் தினம் இங்கு நடக்கின்றது. இதுபோன்ற அநியாயச் செயல்களுக்கெதிராக மக்களாகிய நாம் ஏதாவது செய்திருக்கோமா?

இல்லை இதுவரை நாம் எதுவம் செய்யவில்லை, ஏனெனில் நாம் தான் கோழைகளாயிற்றே. இதுபோன்ற சம்பவங்கள் நம் வீட்டிற்குள் ம்ம்ம் இல்லையில்லை நம் மகளுக்கோ, நம் மனைவிக்கோ அல்லது நம் தம்பிக்கோ நடக்கவில்லையே, பின் நாம் எதற்கு இவ்வநீதிகளைத் தட்டிக் கேட்கவேண்டும். அது நடக்கும் பொழுது பார்த்துக் கொள்ளலாம் என்ற போக்கில்தான் இருக்கிறோம். இப்படித் தவறுகளைத் தட்டிக் கேட்காமல் மறைமுகமாக அவற்றை வளர்த்துவருகிறோம் என்ற பழியுணர்ச்சியுமின்றி வாழப் பழகியுள்ளோம். இப்படி கண்டும்காணாமல் இருந்துகொண்டு தினம் தினம் மனித நேயத்தை நாமே தூக்கிலேற்றிக் கொன்றுவருகிறோம். 

இவையனைத்திற்கும் மூலகாரணம் நாம் ரௌத்திரம் பழகாதது தான். ரௌத்திரம் பழகாததால் தவறைத் தட்டிக் கேட்க அச்சம்; அவ்வச்சத்தைத் தவிர்க்கத் தவறியதால் வந்த இந்தக் கோழைத்தனம். 

தட்டிக்கேட்பதாலேயே பல தவறுகள் தடுக்கப்படும். 

நீங்க சொல்றது சரிதான், ஆனால் அவன் கையில் கத்தி, அரிவாள் போன்ற ஆயுதமிருக்கும் போது என்ன செய்வது? தானிருக்கும் இடத்திற்கும் நிலைக்கும் தகுந்தாற்போல் விவேகமாகச் செயல்பட வேண்டும். ஆம் இதுபோன்ற நிலைகளில் முன்னெச்சரிக்கையின்றி தனித்திருக்கும் போது செயல்படுவது சிரமம்தான். அதுவே ரௌத்திரம் பழகிய மக்களின் மத்தியில் இருக்கும்போது சிரமமல்ல. எனவே ரௌத்திரம் என்பது நாம் மட்டும் பழகினால் போதாது, இச்சமுதாயத்தில்  இருக்கும் அனைவரும் பழக வேண்டும். இன்று வீட்டிற்கு வெளியே நடப்பது நாளை வீட்டிற்குள் நடக்காதா? அந்நிலை வர எவ்வளவு நாளாகும்?

இப்படி ரௌத்திரம் பழகாமல், அனைத்தையும் விட்டுக்கொடுத்துவிட்டுப் போகும் மனப்பான்மைதான் இங்கு அதிகம் உள்ளது. சரி கத்தி அரிவாள் வேண்டாம், சாதாரணமாக பேங்குகளிலும், ரயில் நிலையங்களிலும் க்யூவில் நிற்பதைப் பற்றிப் பேசுவோம்.  அங்கு நம்மை முந்திக்கொண்டு வரிசையில் நிற்காமல் செல்பவனைக் கண்டு எதிர்த்துக் கேட்கத் திறனின்றி அவன் காதுகளுக்குக் கேட்காததுபோல் மெதுவாகச் சபிக்கிறோம். சரி அவன் தான் முன்னாடி போறான் – புத்திகெட்டவன், நாம வரிசையிலேயே நின்றுகொண்டிருந்தால் ஒன்றும் கெட்டுவிடப்போவதில்லை என்ற கோழைத்தனம் தான் நம்மிடம் மிஞ்சியிருக்கிறது. 
அதேபோல் தான் பேருந்திலும், ரயிலிலும் பயணிக்கும் போது அருகிலிருக்கும் பெண்களிடத்தில் வம்பு செய்பவர்களை எதிர்த்து எதுவும் பேசாமல், ஏதோ எருமை மாட்டு மேல மழை பெய்த்தைப் போன்று தலைகுனிந்து நிற்கிறோம். 


தவற்றைக் கண்டால் தட்டிக்கேட்க வேண்டுமென்பதை நம் பிள்ளைகளுக்காவது சொல்லிக் கொடுக்க வேண்டும். குறிப்பாக பெண் பிள்ளைகளிட்த்தில் நம்மைச் சுற்றி நிகழும் அநீதிகளைக்கெதிராக எப்படி செயல்பட வேண்டும் என்பதைக் குழந்தைப் பருவத்திலிருந்தே சொல்லிக் கொடுக்க வேண்டும். 


வெறுமையாக முதல் ரேங்க வாங்கு, நல்லா படி, எது நடந்தாலும் கண்ணைமூடி உட்கார் என்று பேடிகளை வளர்க்காமல்; தைரியாக இரு, தவறைத் தட்டிக்கேள், அச்சம் தவிர் என்று ஆத்திசூடியையும் சொல்லிக் கொடுத்து, அவர்களுக்கு முன் நாம் நடந்துகாட்ட வேண்டும். தவறைத் தட்டிக் கேட்காமல் இருப்பதுதான் தவறு என்பதை உணர்த்த வேண்டும். இப்படியே சொல்லிக் கொண்டிருந்தால் மட்டும் போதாது, மாறாக நாம் நம் அன்றாடச் செயல்களில் அதைக் கடைபிடித்துக்காட்ட வேண்டும். 


இனியாவது ஆட்டு மந்தைகள் போலில்லாமல், முன் நிற்பவன் கேள்வி கேட்காவிடிலும் நாம் தட்டிக் கேட்போம். தவறைத் தட்டிக் கேட்பதுதான் சரி, அதைதான் நம் பாரதியும் கூறியுள்ளான் என்பதை நினைவில் கொள்வோம்.


அதற்காக எப்பொழுதுமே கோபப்பட வேண்டுமென்று நான் இங்கு குறிப்பிடவில்லை. தேவையான நேரங்களில் நிச்சியம் கோபப்பட வேண்டும். (நியாயக்) கோபங்களைக் கட்டுபடுத்த நாமொன்றும் இயேசுவோ புத்தனோ அல்ல, சாதாரண மனிதன் தான் ஆனால் கோழையல்ல!

by varun   on 18 Jul 2016  53 Comments
Tags: Rowthiram   Rowthiram Katturai   Rowthiram Palagu   ரௌத்திரம் பழகு   ரௌத்திரம்   ரௌத்திரம் கட்டுரை     
 தொடர்புடையவை-Related Articles
ரௌத்திரம் பழகு! ரௌத்திரம் பழகு!
கருத்துகள்
14-Feb-2021 14:31:49 ப.அருள்நிதி✌️ ரௌத்திரம் said : Report Abuse
நான் தமிழன் என்று சொல்வதில் நெஞ்சை நிமிர்ந்து மீசையை முறுக்கி பெருமை கொள்கிறேன் என் பெயர் அருள்நிதி வயது 24 ✌️காவேரி நதி பாயும் தஞ்சை தமிழன் 💪 நான் எங்கு தவறு நடந்தாலும் எவ்ளோ பெரிய ஆளாக இருந்தாலும் எதிர்த்து நின்று கேட்டுவிடுவேன் ஆனால் இங்கு உள்ள மக்கள் புரிந்துகொள்ள மாற்றங்க தப்ப கேட்டா கோவர்மெண்ட் ஜாப்னு பயப்புடுவாங்க ஆனால் நமக்கு அப்படி இல்ல தப்புன்னா யாராக இருந்தாலும் தப்புதான் 💪எங்கும் அஞ்சோம் எதற்கும் அஞ்சோம் 💪✌️ இதான் எப்பவும் நம்மளோட ரௌத்திரம் என்னால முடிந்த உதவிகளை நான் பார்க்கும் எல்லோருக்கும் என்னால முடியுறத உதவி செய்வேன் காசு பணம் இல்லாட்டியும் நல்லது பண்ணணுங்கிற மனசு இருக்கு இப்ப இல்ல எப்பவும் இப்படிதான் என்னை சுற்றி உள்ளவர்கள் கஷ்டப்படக்கூடாது இருக்கிறது வைத்து சந்தோசமாக வாழ வேண்டும் வரும்பொழுது என்ன கொண்டு வந்தோம் போகும்போது கொண்டு செல்ல நல்ல மனிதன் என்ற பேர் போதும் நாம் இல்லாவிட்டலும் நம் பேர் வாழவேண்டும் எனக்கு தெரிந்து என்னிடம் உதவி என்று வந்தவர்களுக்கு உதவி செய்யாமல் இருந்ததில்லை அப்படி என்னால முடியாலட்டியும் அதற்கான வழியை சொல்வேன் எதோ என்னால முடிந்தது
 
09-Jan-2021 05:49:14 Mark herbian said : Report Abuse
எனக்கும் ரௌத்திரம் என்றால் என்னவென்று தெரியாது. ஆனால் இப்போது தெரிந்து விட்டது . பாரதியின் இந்த வரிகள் எண்ணகுள் பற்றி எரிந்து விட்டது நானும் ரௌதிரம் பழகி விட்டேன்.நீங்கள் இந்த பதிவை பதிவிட்டது எனக்கு மிக மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றி வணக்கம் 🙏
 
18-Sep-2020 05:13:52 sankar said : Report Abuse
thanks bro
 
22-Aug-2020 15:58:47 Pragannayaki said : Report Abuse
நான் ஒரு பெண் அதிலும் ரௌத்திரம் பழகிய பெண் என்பதில் மிகவும் கர்வம் கொள்கிறேன். எனக்கு எதற்கும் பயம் இல்லை என் கண் முன்னாள் நடக்கும் அசம்பாவிதத்தை நான் கண்டிப்பாக தட்டி கேட்ப்பேன்.
 
16-Jun-2020 15:55:33 செந்தில் குமாா் said : Report Abuse
நானும் நானும் நீங்க சொன்ன மாதிரி இப்படி தான் இருந்தேன் யாரையும் பார்க்காமல் எதுவும் இல்லாததும் போல எல்லா விஷயத்துக்கும் பயந்து பயந்து பாரதியாரின் இந்த ரௌத்திரம் பழகு எனக்குள்ளயும் இருக்குன்னு நான் புரிஞ்சிக்கிட்டேன் தெரிஞ்சுகிட்டேன்
 
30-May-2020 15:13:15 ஆகாஷ் said : Report Abuse
எனக்கு ரௌத்திரம் இருந்ததது.. சமூகத்தில் நடக்கும் அநீதி பார்த்தால் ரௌத்திரம் வரும். ஆனால் "நிமிர்த்து நில் " படம் போல தான் எனக்கும் நடக்கும்.
 
21-Apr-2020 06:36:38 க. சரவணன் said : Report Abuse
பாரதியின் வழி நடப்போம்
 
01-Apr-2020 04:10:18 அருண் மொழி said : Report Abuse
மிகவும் சிறப்பான பதிவு......... எனக்கு ரௌத்திரம் என்றால் என்ன வென்றே தெரியாது ஆனால் உங்கள் பதிவை படித்த பிறகு என் அறியாமை அகன்றது ...............
 
22-Feb-2020 09:19:55 சந்தியா.ப said : Report Abuse
Ipo irukra pasangala enga rowthiram palaguranga...avangalukella love pannave time pathathu🤦....but extradinory explanation bro...innum neraya edhirpakurom...
 
31-Jan-2020 15:46:21 ARUN PANDIAN said : Report Abuse
Use full u r definition
 
22-Jan-2020 05:06:02 Karthikeyan said : Report Abuse
மிகச்சிறப்பாக விளக்கம் கொடுத்தீர்கள் #வருண் சகோ நன்றி...
 
22-Jan-2020 02:48:58 Sweet said : Report Abuse
Extraordinary thoughts.Its a eye opener for me. I loved it very much. Keep up the good work.
 
30-Nov-2019 14:43:33 Mohan rajan said : Report Abuse
அனைவரும்ரௌத்திரம் பழகவேண்டும்
 
26-Nov-2019 10:02:46 பொன்ராஜாகண்ணன் said : Report Abuse
அருமையான கருத்துக்கள். எனது சந்தேகம் தீர்ந்தது. அனைவரும் ரௌத்திரம் பழகுவோம். வாழ்க தமிழ்💪💪💪💪💪💪
 
19-Oct-2019 15:31:50 பி.ராஜ் குமார் said : Report Abuse
ரௌத்திரம் பழகு (இந்த சமூகத்தில் எனக்கு நானே நீதிபதி) நாம் செய்யும் தவறை மற்றவர்கள் கேட்டால் அவரை எதிரிப்போல் பார்க்கும் அவர் ஏன் என்னை பார்த்து கேட்டார் என்று நினைத்திருந்தால் அந்த தவறு மறுபடியும் நிகழ்திருக்காது
 
27-Jul-2019 01:41:58 அருள்மொழிவர்மன் (வருண்) said : Report Abuse
பின்னூட்டமாளித்த அனைத்து தமிழ் நண்பர்களுக்கும் நன்றிகள் ! நம்மைச் சுற்றி நிகழும் சிறு சிறு தவறுகள் அனைத்தையும் தட்டிக் கேட்பது அவசியம். மூதின் வழிவரும் தமிழ்ப் பிறப்புகளுக்கு அது இயல்பாகவே இருக்கும்.
 
16-Jul-2019 23:17:19 செந்தமிழோன் முபாசெல்வா24 said : Report Abuse
சிறப்பான பதிவு. ஒவ்வொரு தமிழனும் ரௌத்திரம் கொண்டு தமிழ்மொழிக்கும் தமிழனுக்கும் ஏற்படும் சிக்கல்களையும் அநியாயங்களையும் தட்டிக்கேட்கத் துணிந்தானென்றால் எவனும் நமக்கு இன்னல் செய்யமாட்டான். டேய் தமிழா... ரௌத்திரம் கொண்டு துணிந்துவாடா...
 
20-May-2019 15:29:07 நிவேதா said : Report Abuse
ரௌத்திரம் பழகுவேன்
 
06-Mar-2019 20:35:28 ஹரவிந்த் said : Report Abuse
ரெளத்திரம் பழகுவேன் இணிமேல் மிக்க நன்றி இந்த பதிவை போட்டவருக்கு
 
06-Mar-2019 20:35:07 ஹரவிந்த் said : Report Abuse
ரெளத்திரம் பழகுவேன் இணிமேல் மிக்க நன்றி இந்த பதிவை போட்டவருக்கு
 
15-Feb-2019 14:22:09 பாரதிதாசன் said : Report Abuse
நானும் ரௌதிரம் பழகுவேன், வாழும் வரையும் மற்றும் முடிவு வரையும்.
 
09-Feb-2019 19:36:14 Thisainathan r said : Report Abuse
Anaivarum therinthu kolla ventiya வீசியும்
 
09-Feb-2019 19:35:58 Thisainathan r said : Report Abuse
Anaivarum therinthu kolla ventiya வீசியும்
 
09-Feb-2019 19:35:37 Thisainathan r said : Report Abuse
Anaivarum therinthu kolla ventiya வீசியும்
 
28-Sep-2018 02:07:15 Kanagaraj said : Report Abuse
ரௌத்திரம் பற்றிய அருமையான பதிவு
 
02-Sep-2018 19:08:31 மா.சுப்பையா said : Report Abuse
நல்ல தொடக்கம் வாழ்க தமிழ் ....
 
01-Sep-2018 12:14:11 வினோத் said : Report Abuse
ரெளத்திரம் பற்றி பலர் இடம் பகிற்வேன், நல்ல கருத்து.
 
21-Aug-2018 13:31:05 சிவராஜ் said : Report Abuse
இனி ரௌத்திரம் தொடர்வேன்
 
25-Jul-2018 08:00:47 சிவா said : Report Abuse
அருமையான விளக்கம் தோழா, நானும் பழகிக்கொள்கிரென்
 
24-Jun-2018 11:41:48 சூர்யா said : Report Abuse
அனைவருக்குல்லும் இருக்கும் இன்னொரு முகத்தை சீண்டும் படியான விளக்கம்... நன்றிகள் பல
 
12-Jun-2018 15:09:33 லோகா said : Report Abuse
What a inspiration Wordings. Very Nice.
 
06-Jun-2018 12:00:40 பத்ருதீன் said : Report Abuse
தற்போது உள்ள தமிழக இந்திய அரசியல் மற்றும் சமுதாய சூழலில் பெண்களுக்கு தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் சிறு பான்மையினறுக்கு இழைக்கப்பட்ட அநீதி ஆட்சி யாளர்கள் செய்யும் அராஜகத்தை ஒடுக்க தேர்தல் வரும் முன்னாள் மக்கள் அனைவரும் ரௌத்திரம் பழகு என்று இருந்தால் மட்டுமே நல்ல முடிவு கிடைக்கும் சமூக நீதியை நிலை நாட்ட முடியும் நல்லாட்சியும் அமையும்.
 
16-May-2018 03:54:50 subramani said : Report Abuse
Migavum arumai bharathiyar namaku sonnathu ekkalamum porunthum
 
01-Apr-2018 13:17:09 தினேஷ்.ந said : Report Abuse
நான் என் பாட்டன் பாரதின் வழியில் இருப்பேன்...நான் ஒரு ரொளத்திரன்....
 
22-Mar-2018 13:32:28 சரவணன் said : Report Abuse
ரெளத்ரம் பழகுவேன்
 
06-Feb-2018 07:14:33 pugaz said : Report Abuse
rowthiram pazagu
 
01-Feb-2018 09:32:54 Suganya said : Report Abuse
ரௌத்ரம் செய்வேன்...
 
28-Jan-2018 09:05:00 முத்து mari said : Report Abuse
நன்றி நான் கண்டிப்பாக ரௌத்ரம் பழகுவேன்.
 
28-Jan-2018 08:57:38 muthu மாரி said : Report Abuse
நன்றி நான் கண்டிப்பாக ரௌத்ரம் பழகுவேன்
 
30-Dec-2017 10:44:31 logesh said : Report Abuse
Very nice
 
29-Nov-2017 13:45:15 Aakash said : Report Abuse
ரௌத்திரம் பழக வேண்டும்
 
05-Nov-2017 11:59:33 அருண் குமார் said : Report Abuse
இனி நானும் ஒரு ரெளத்திரன்"தான்
 
01-Nov-2017 12:33:51 பரசுராமன் said : Report Abuse
நாம் ஒவ்வொருவரும் கட்டாயம் கடை பிடிக்க வேண்டிய விஷயம் கோபம் நியாயமான கோபம் ' கோபம் ' தமிழன் என்று சொல்லடா ' தலை நிமிர்ந்து நில்லடா '
 
23-Oct-2017 15:11:32 chithiraiselvam said : Report Abuse
இனி ரௌத்திரம் பழகுகிறேன்
 
02-Oct-2017 10:12:49 பிரசன்ன வெங்கடேசன் said : Report Abuse
பாரதியின் கவிதையின் தாக்கம் எல்லா காலத்திற்கும் பொருந்தும் !
 
21-Sep-2017 06:30:33 Kogulesh said : Report Abuse
ரௌத்திரம் பழக வேண்டும். பெண்களை மதிக்க தெரிந்தவன் தான் ஒரு உண்மையான தமிழ்மகன். தமிழன் என்பது பெருமை ......
 
27-Jul-2017 07:51:54 loga said : Report Abuse
நல்ல அருமையான விரிவுரை. அனைவருக்கும் பொருந்தக்கூடிய, வாழ்க்கையில் பின்பற்றவேண்டிய வாழ்வின் நெறிமுறை. நன்றி.
 
12-Jun-2017 17:00:19 ganesh said : Report Abuse
நல்ல தொடக்கம் தொடரவும் உங்கள் பதிவை ரௌத்திரம் என்பது ஆண் மகன் வீரம் நீனேவில் இருக்கட்டும்
 
12-Apr-2017 01:21:43 ஆசீர் ஜினோ.ஆ said : Report Abuse
இன்றய சூழல் இதை எல்லோரும் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம் ......
 
17-Mar-2017 02:45:13 செ. ஜெயச்சந்திரன் said : Report Abuse
அருமையான கட்டுரை. வாழ்த்துக்கள். ஒரு சிறிய விஷயம். இயேசுவும் புத்தனும் கூட, நியாயமான நேரங்களில் கோபபட்டுள்ளனர் என்பதுதான் வரலாறு.
 
24-Jan-2017 20:01:31 AMARNATH said : Report Abuse
Well Written.... Im gng to do that.....Request all to do the same...
 
13-Dec-2016 09:17:15 K.Arulvel said : Report Abuse
In each an every parents should be like to teach. BARATHI,VIVEKANANTHAR,THIRUVALLUR, ETC BOOKS TO TEACH PERSONAL BECAUSE IN PRACTICAL LIFE THIS WORDS ONLY MOTIVATION EACH AND EVER LIFE .... It brings THANI MANITHA OZHUCKAM . PLEASE APOLOGISE ME FOR MISTAKEN ENGLISH WORDS
 
09-Nov-2016 23:56:41 மூர்த்தி said : Report Abuse
திஸ் ஐஸ் குட்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.