இந்திய ரயில்வேயில் அசிஸ்டென்ட் லோகோ பைலட்(Assistant Loco Pilot) மற்றும் டெக்னிஷியன் (Technician) பணிகளுக்குரிய 26,502 காலியிடங்களை நிரப்ப கடந்த பிப்ரவரி மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டு, இதற்கான எழுத்து தேர்வு வரும்(ஆகஸ்ட் 09, 2018) 9ம் தேதி நடைபெற இருக்கிறது.
இந்நிலையில் மேலும் 33,458 ALP(Assistant Loco Pilot) மற்றும் Technician காலியிடங்களை நிரப்ப ரயில்வே தேர்வு வாரியம்(Railway Recruitment Board) முடிவு செய்துள்ளது. இதற்கான ஆயத்த பணிகளை ரயில்வே தேர்வு வாரியம் தொடங்கியுள்ளது. ஒட்டு மொத்தமாக இந்த ஆண்டு சுமார் 60,000 ALP மற்றும் Technician பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. இது தொடர்பான விரிவான அறிவிப்பு விரைவில் வெளிவரும்.
கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஏதாவதொரு தொழிற்பிரிவில் ITI படித்து NCVT-சான்று பெற்றிருப்பது இப்பணிக்கு விண்ணப்பிக்க அடிப்படை கல்வித்தகுதியாகும்.
வயது வரம்பு : வயது 18 முதல் 28-க்குள் இருக்கவேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை : தகுதியானவர்கள் RRB-ஆல் நடத்தப்படும் CBT-எனப்படும் கணினி வழி எழுத்துத்தேர்வு மற்றும் ALP-பணிக்குரிய APtitute Test-ன் அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.
இந்த பணிகுறித்த முழுமையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது.
|