LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

ஆயிரம் ரூபாய் டிக்கெட்... வருடம் முழுவதும் சினிமா !!

இன்றைய சூழ்நிலையில், மக்களை தியேட்டர்களுக்கு வரவழைப்பது பெரிய விஷயமாக மாறிவிட்டது. இதனால், நல்ல படங்கள் கூட ஒரு வார படங்களாகவே மாறி வருகிறது. இந்த ஒரு வார படங்களிலும் பார்வையாளர்கள் இல்லாமல் தியேட்டர்கள் வெறிச்சோடி காணப்படுகின்றது. இதற்கு காரணம் திருட்டி வி.சி.டி புழக்கம் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

இதற்க்கெல்லாம் முடிவு கட்டும் விதமாக, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள சண்முகா திரையரங்க நிர்வாகம் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

அதன்படி ஒரு முறை ரூ.1000 கொடுத்து டிக்கெட் வாங்கினால், அந்த ஒரு வருடம் முழுவதும் அத்தியேட்டரில் ரிலீஸாகும் 40 படங்களை ஒரு முறை பார்க்கலாம். பார்க்க விரும்பவில்லை என்றால் அந்த டிக்கெட்டை வேறொருவருக்குக்  கொடுத்து அந்தப் படத்தை ஒருமுறை பார்க்க சொல்லலாம். இந்தப் புதிய திட்டம் ஏப்ரல் முதல் அமலுக்கு வருகிறதாம்..இதன்மூலம் இதுவரை 2000 த்திற்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளதாக தெரிவிக்கிறது தியேட்டர் நிர்வாகம். இதில் கிடைக்கும் தொகையிலிருந்து புதிய படங்களை வாங்கி திரையிடவும்,இந்த முன்பதிவு திட்டத்தைப் பரவலாக்கவும் தியேட்டர் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

திருட்டு வி.சி.டி. களை ஒழிக்கவும், அதிக அளவில் ரசிகர்களை ஈர்க்கவும் திரையரங்கு தரப்பினர் இந்த நடைமுறையைக்  கொண்டு வந்துள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு தியேட்டரில் பெண்களுக்கு 33 சதவிகிதம் கட்டணத்தில் குறைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. இவ்வாறு தியேட்டர் உரிமையாளர்கள் வாடிக்கையாளர்களை கவரும் வண்ணம் புதுமையை புகுத்த திட்டமிட்டு வருகின்றனர்.  

by Swathi   on 12 Mar 2015  0 Comments
Tags: Movie Ticket   Shanmuga Theatre   Kovilpatti Shanmuga Theater   கோவில்பட்டி   ஷண்முகா தியேட்டர்   ஆயிரம் ரூபாய் டிக்கெட்     
 தொடர்புடையவை-Related Articles
ஆயிரம் ரூபாய் டிக்கெட்... வருடம் முழுவதும் சினிமா !! ஆயிரம் ரூபாய் டிக்கெட்... வருடம் முழுவதும் சினிமா !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.