மும்பையிலிருந்து ரயில்கள் மூலம் குஜராத்துக்கு கடத்தப்படவிருந்த கோடிக்கணக்கான ரூபாய் பணத்தையும், நகை மற்றும் விலை மதிப்புமிக்க கற்களையும் தேசிய புலனாய்வு அமைப்பும், வருமான வரித்துறையினரும் பறிமுதல் செய்துள்ளனர். கைப்பற்ற பணம் மற்றும் நகைகளின் மதிப்பு சுமார் 250 கோடி ரூபாய் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த பணம் யாருக்கு சொந்தமானது என விசாரணை நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக பணம் மற்றும் நகை இருந்த வண்டிகளை ஒட்டி வந்த டிரைவர், கிளீனர் உட்பட 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த பணம் ஹவாலா பணமாக இருக்குமோ என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்க்கொண்டுள்ளனர்.
|