ஆன்-லைன் ரயில் டிக்கெட் முன்பதிவின் மூலம் கடந்த ஆண்டில் பதினொரு கோடி டிக்கெட்டுகள் விற்கப்பட்டுஅதன் மூலம் 9,500 கோடி ருபாய் கிடத்துளதாக இந்திய ரயில்வேக்கு சொந்தமான ஐ.ஆர்.சி.டி.சி நிறுவனம் தெரிவித்துள்ளது.இரயில் பயணிகளின் சிரமத்தை குறைக்க இந்திய ரயில்வே ஐ.ஆர்.சி.டி.சி நிறுவனம் மூலம் ரயில்வே டிக்கெட்டுகளை ஆன்-லைனில் பதிவு செய்யும் முறையை கடந்த 2002 ஆம் ஆண்டு அறிமுகம் செய்ததது.இதற்கு ரயில்வே பயணிகளிடையே மிகுந்த வரவேற்பு காணப்படுகிறது.கடந்த 10 ஆண்டுகளில், அதிகபட்சமாக, 2011-12ம் ஆண்டில் தான், 11.61 கோடி டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஐ.ஆர்.சி.டி.சி நிறுவனம் தெரிவித்துள்ளத,மேலும் இந்த வருடம் ஆன்-லைன் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வோரின் எண்ணிக்கை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது
|