சபரிமலையின், 18-ம் படியின் இரண்டு பக்கங்களிலும், தேங்காய் உடைக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து, சபரிமலை ஐயப்பன் கோவில் நிர்வாக, வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சபரிமலை ஐயப்பன் கோவிலின் கல்சுவரில், 18-ம் படியின் இரண்டு புறங்களிலும், தேங்காய் உடைப்பது இந்த சீசனில் மாற்றப்படும். அதற்கு பதிலாக, பக்தர்கள், 18-ம் படியேற வரிசையில் நிற்கும் போது, பெரிய நடைப்பந்தல் அருகே தேங்காய் உடைக்க வசதி செய்யப்படும். சபரி மலையில் அமைக்கப்பட உள்ள, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கான டெண்டர், உறுதி செய்யப்பட்டு, அதற்கான வேலைகள் விரைவில் முடிக்கப்படும். சபரிமலையில், பாதுகாப்புக்காக தனித்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு, மாநில அரசும் அங்கீகாரம் வழங்கியுள்ளது என அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|