மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை திறக்கப்பட்டது. மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி ஐயப்பன் கோவில் நடையை திறந்து வைத்தார்.
கடந்த ஐப்பசி மாத பூஜைகள், சித்திரை ஆட்டத்திருநாள் பூஜை, மண்டல காலம் மற்றும் மகரவிளக்கு கால பூஜைகளின் போது இளம் பெண்கள் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடந்ததால் சபரிமலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
3 மாதங்களுக்கு மேலாக சபரிமலையில் தொடர்ந்து போலீஸ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. சபரிமலை செல்ல பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன.
நிலக்கல்-பம்பை இடையே எந்த தனியார் வாகனமும் அனுமதிக்கப் படவில்லை. மாசி மாத பூஜைக்கு நடை திறக்கும் போது இளம்பெண்கள் வரலாம் என எதிர்பார்க்கப்படுவதால் மீண்டும் சபரிமலையில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. 3 எஸ்.பி.க்கள் தலைமையில் 3 ஆயிரம் போலீசார் குவிக்கப்படுகின்றனர். நிலக்கல் பகுதியில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். சபரிமலை நடை திறக்கப்பட்ட நிலையில் வரும் 17-ஆம் தேதி வரை கலசாபிஷேகம், சகஸ்ர கலசம், லட்சார்ச்சனை உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்ற உள்ளன.
பின்பு 17- ந் தேதி இரவு 10 மணிக்கு அரிவராசனம் இசைக்கப்பட்டு நடை அடைக்கப்படும் என கூறப்படுகிறது.
|