ரயில்வே வாரிய உறுப்பினர் நியமன ஊழல் விவகாரத்தை தொடர்ந்து அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பன்சால் தனது சொந்த ஊரான சண்டீகர் நேற்று வந்தார். ராஜினாமா குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, அவர் கூறியதாவது, ரயில்வே வாரிய முறைகேடு விவகாரம் தொடர்பான வழக்குக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, இந்த வழக்கில் சிபிஐயின் விசாரணையை நான் முழு மனதுடன் வரவேற்கிறேன். விரைவில் நான் குற்ற மற்றவன் என்பதை நிரூபிப்பேன் என அவர்தெரிவித்தார்.
|