|
||||||||
சகர ஈகார வருக்கம் |
||||||||
சீதம் எனும்பெயர் மேகமும் பாலும்
குளிர்ச்சியும் புனலுங் கூறுவர் புலவர். ....714
சீவ னெனும்பெயர் வியாழமு முயிரும். ....715
சீரு ளெனும்பெயர் செல்வமுஞ் செம்பும்
ஈயமு மெனவே இயம்பப் பெறுமே. ....716
சீவனி யெனும்பெயர் செவ்வழி யாழ்த்திறத்
தோரிசைப் பெயரு முயிர்தரு மருந்துமாம். ....717
சீரெனும் பெயரே செல்வமுங் கீர்த்தியும்
பாரமு மழகும் பகர்ந்திடு சீர்மையும்
தாள வொத்துந் தடியுங் காத்தண்டுஞ்
சொற்சீர் எனவுஞ் சொல்லுவர் புலவர். ....718
சீப்பெனும் பெயரே கதவின் றாழும்
மயிர்வார் சீப்பும் வழங்கப் பெறுமே. ....719
சீகர மெனும்பெயர் திரையுந் திவலையும்
கவரி மாவுங் கருதுவர் புலவர். ....720
சீல மெனும்பெய ரொழுக்கமுங் குணமும்
தருமமு மெனவே சாற்றுவர் புலவர். ....721
சீதை யெனும்பெயர் உழுபடைச் சாலும்
இராமன் றேவியு மியம்பப் பெறுமே. ....722
சீதம் எனும்பெயர் மேகமும் பாலும் குளிர்ச்சியும் புனலுங் கூறுவர் புலவர். ....714
சீவ னெனும்பெயர் வியாழமு முயிரும். ....715
சீரு ளெனும்பெயர் செல்வமுஞ் செம்பும் ஈயமு மெனவே இயம்பப் பெறுமே. ....716
சீவனி யெனும்பெயர் செவ்வழி யாழ்த்திறத் தோரிசைப் பெயரு முயிர்தரு மருந்துமாம். ....717
சீரெனும் பெயரே செல்வமுங் கீர்த்தியும் பாரமு மழகும் பகர்ந்திடு சீர்மையும் தாள வொத்துந் தடியுங் காத்தண்டுஞ் சொற்சீர் எனவுஞ் சொல்லுவர் புலவர். ....718
சீப்பெனும் பெயரே கதவின் றாழும் மயிர்வார் சீப்பும் வழங்கப் பெறுமே. ....719
சீகர மெனும்பெயர் திரையுந் திவலையும் கவரி மாவுங் கருதுவர் புலவர். ....720
சீல மெனும்பெய ரொழுக்கமுங் குணமும் தருமமு மெனவே சாற்றுவர் புலவர். ....721
சீதை யெனும்பெயர் உழுபடைச் சாலும் இராமன் றேவியு மியம்பப் பெறுமே. ....722
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|