LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- வட மலை நிகண்டு

சகர வருக்கம்

 

சம்பு வெனும்பெயர் சங்கரன் றிருமால்
நான்முக னாவன ரியுமோர் புல்லுஞ்
சூரியன் பெயருஞ் சொல்லப் பெறுமே. ....623
சத்தி யெனும்பெயர் வேலும் பெலமும்
உமையுந் துவசமுங் குடைமுற் காரமும். ....624
சமனெனும் பெயரே யியமனு நடுவுமாம். ....625
சதியெனும் பெயரே தாள வொத்துடன் 
உரோகிணிப் பெயருங் கற்பாட் டியுமாம். ....626
சந்தி யெனும்பெய ரந்திப் பொழுது
மூங்கிலுஞ் சதுக்கமு மொழியப் பெறுமே. ....627
சரியெனும் பெயர்கை வளையும் வழியுமாம். ....628
சரண மெனும்பெயர் தாளுங் கரமுஞ்
சார்பு மெனவே சாற்றுவர் புலவர். ....629
சடையெனும் பெயர்கோ டீரமும் வேருமாம். ....630
சவியெனும் பெயரே யழகும் பெலமும்
மணிக்கோவை வடமு மொளியும் வழங்கும். ....631
சரமெனும் பெயரே தனிமணி வடமும்
அம்புஞ் சமரும் கொறுக்கச் சியுமாம். ....632
சலாகை யெனும்பெயர் சவளப் பெயரோடு
நாரா சமுநன் மணியு நவின்றனர். ....633
சகுனி யெனும்பெயர் நிமித்தம் பார்ப்பவனும்
பறவையின் பொதுவும் பகரப் பெறுமே. ....634
சத்திர மெனும்பெயர் அன்ன சாலையும்
கைவிடாப் படையுங் கவின்பெறு குடையும்
குடையின் திரும்பும் வேள்வியும் கூறுவர். ....635
சடமெனும் பெயரே பொய்யுஞ் சரீரமும்
கொடுமையு மெனவே கூறப் பெறுமே. ....636
சகுந்த மெனும்பெயர் புள்ளின் பொதுவும்
கழுகு மெனவே கருதுவர் புலவர். ....637
சகுன மெனும்பெயர் புட்பொதுப் பெயரும்
நிமித்தமும் கிழங்கு நிகழ்த்தப் பெறுமே. ....638
சடில மெனும்பெயர் சடையு நெருக்கமும் ....639
சக்கிரி யெனும்பெயர் தராபதி யரவுடன்
மிக்கசீர் முகுந்தன் செக்கான் குயவனாம். ....640
சசியெனும் பெயரே மதியும் கற்பூரமும்
இந்திரன் மனைவியும் வெண்மையு மியம்புவர். ....641
சங்க மெனும்பெய ரன்புஞ் சபையும்
வென்றியுங் கவிஞரு மோரெண் பெயரும்
கணைக்கால் சங்கின் பெயருங் கருதுவர். ....642
சண்டனெனும்பெயர் சூரியன் யமனுடன்
நபுஞ்சகன் பெயரு நவிலப் பெறுமே. ....643
சக்கர மெனும்பெயர் சுதரி சனமும்
சக்கர யூகமும் சகதலப் பெயரும் 
தேரி னுருளும் பெருமையும் பிறப்பும்
நேமிப் புள்ளுங் கடலும் சகடமும்
வட்டமுந் திகிரி வரையுஞ் செப்புவர். ....644
சத்திய மெனும்பெயர் சபதமு மெய்யுமாம். ....645
சந்த மெனும்பெயர் நிறமும பிராமமுஞ்
சாந்தமு மினம்பெறு கவிதையுஞ் சாற்றுவர். ....646
சலமெனும் பெயரே பொய்யுங் கோபமும்
புள்ளின் பெயரு நடுக்கமும் புகலுவர். ....647
சயமெனும் பெயரே சருக்கரை வென்றியாம். ....648
சரப மெனும்பெயர் சிம்புள்வரை யாடுமாம். ....649
சராவ மெனும்பெயர் விளக்கின் தகளியும்
சலாகையு மெனவே சாற்றினர் புலவர். ....650
சமழ்த்த லெனும்பெய ரழித்தலு நாணமும் ....651
சயிந்தவ மெனும்பெயர் கலையும் குதிரையும்
இந்துப் பின்பெயர் தானு மியம்புவர். ....652
சகமெனும் பெயரே புள்ளின் சிறகும்
இலையுமோ ரிலக்கமு மியம்பப் பெறுமே. ....653

 

சம்பு வெனும்பெயர் சங்கரன் றிருமால்

நான்முக னாவன ரியுமோர் புல்லுஞ்

சூரியன் பெயருஞ் சொல்லப் பெறுமே. ....623

 

சத்தி யெனும்பெயர் வேலும் பெலமும்

உமையுந் துவசமுங் குடைமுற் காரமும். ....624

 

சமனெனும் பெயரே யியமனு நடுவுமாம். ....625

 

சதியெனும் பெயரே தாள வொத்துடன் 

உரோகிணிப் பெயருங் கற்பாட் டியுமாம். ....626

 

சந்தி யெனும்பெய ரந்திப் பொழுது

மூங்கிலுஞ் சதுக்கமு மொழியப் பெறுமே. ....627

 

சரியெனும் பெயர்கை வளையும் வழியுமாம். ....628

 

சரண மெனும்பெயர் தாளுங் கரமுஞ்

சார்பு மெனவே சாற்றுவர் புலவர். ....629

 

சடையெனும் பெயர்கோ டீரமும் வேருமாம். ....630

 

சவியெனும் பெயரே யழகும் பெலமும்

மணிக்கோவை வடமு மொளியும் வழங்கும். ....631

 

சரமெனும் பெயரே தனிமணி வடமும்

அம்புஞ் சமரும் கொறுக்கச் சியுமாம். ....632

 

சலாகை யெனும்பெயர் சவளப் பெயரோடு

நாரா சமுநன் மணியு நவின்றனர். ....633

 

சகுனி யெனும்பெயர் நிமித்தம் பார்ப்பவனும்

பறவையின் பொதுவும் பகரப் பெறுமே. ....634

 

சத்திர மெனும்பெயர் அன்ன சாலையும்

கைவிடாப் படையுங் கவின்பெறு குடையும்

குடையின் திரும்பும் வேள்வியும் கூறுவர். ....635

 

சடமெனும் பெயரே பொய்யுஞ் சரீரமும்

கொடுமையு மெனவே கூறப் பெறுமே. ....636

 

சகுந்த மெனும்பெயர் புள்ளின் பொதுவும்

கழுகு மெனவே கருதுவர் புலவர். ....637

 

சகுன மெனும்பெயர் புட்பொதுப் பெயரும்

நிமித்தமும் கிழங்கு நிகழ்த்தப் பெறுமே. ....638

 

சடில மெனும்பெயர் சடையு நெருக்கமும் ....639

 

சக்கிரி யெனும்பெயர் தராபதி யரவுடன்

மிக்கசீர் முகுந்தன் செக்கான் குயவனாம். ....640

 

சசியெனும் பெயரே மதியும் கற்பூரமும்

இந்திரன் மனைவியும் வெண்மையு மியம்புவர். ....641

 

சங்க மெனும்பெய ரன்புஞ் சபையும்

வென்றியுங் கவிஞரு மோரெண் பெயரும்

கணைக்கால் சங்கின் பெயருங் கருதுவர். ....642

 

சண்டனெனும்பெயர் சூரியன் யமனுடன்

நபுஞ்சகன் பெயரு நவிலப் பெறுமே. ....643

 

சக்கர மெனும்பெயர் சுதரி சனமும்

சக்கர யூகமும் சகதலப் பெயரும் 

தேரி னுருளும் பெருமையும் பிறப்பும்

நேமிப் புள்ளுங் கடலும் சகடமும்

வட்டமுந் திகிரி வரையுஞ் செப்புவர். ....644

 

சத்திய மெனும்பெயர் சபதமு மெய்யுமாம். ....645

 

சந்த மெனும்பெயர் நிறமும பிராமமுஞ்

சாந்தமு மினம்பெறு கவிதையுஞ் சாற்றுவர். ....646

 

சலமெனும் பெயரே பொய்யுங் கோபமும்

புள்ளின் பெயரு நடுக்கமும் புகலுவர். ....647

 

சயமெனும் பெயரே சருக்கரை வென்றியாம். ....648

 

சரப மெனும்பெயர் சிம்புள்வரை யாடுமாம். ....649

 

சராவ மெனும்பெயர் விளக்கின் தகளியும்

சலாகையு மெனவே சாற்றினர் புலவர். ....650

 

சமழ்த்த லெனும்பெய ரழித்தலு நாணமும் ....651

 

சயிந்தவ மெனும்பெயர் கலையும் குதிரையும்

இந்துப் பின்பெயர் தானு மியம்புவர். ....652

 

சகமெனும் பெயரே புள்ளின் சிறகும்

இலையுமோ ரிலக்கமு மியம்பப் பெறுமே. ....653

 

by Swathi   on 20 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.