|
||||||||
சகர வருக்கம் |
||||||||
சம்பு வெனும்பெயர் சங்கரன் றிருமால்
நான்முக னாவன ரியுமோர் புல்லுஞ்
சூரியன் பெயருஞ் சொல்லப் பெறுமே. ....623
சத்தி யெனும்பெயர் வேலும் பெலமும்
உமையுந் துவசமுங் குடைமுற் காரமும். ....624
சமனெனும் பெயரே யியமனு நடுவுமாம். ....625
சதியெனும் பெயரே தாள வொத்துடன்
உரோகிணிப் பெயருங் கற்பாட் டியுமாம். ....626
சந்தி யெனும்பெய ரந்திப் பொழுது
மூங்கிலுஞ் சதுக்கமு மொழியப் பெறுமே. ....627
சரியெனும் பெயர்கை வளையும் வழியுமாம். ....628
சரண மெனும்பெயர் தாளுங் கரமுஞ்
சார்பு மெனவே சாற்றுவர் புலவர். ....629
சடையெனும் பெயர்கோ டீரமும் வேருமாம். ....630
சவியெனும் பெயரே யழகும் பெலமும்
மணிக்கோவை வடமு மொளியும் வழங்கும். ....631
சரமெனும் பெயரே தனிமணி வடமும்
அம்புஞ் சமரும் கொறுக்கச் சியுமாம். ....632
சலாகை யெனும்பெயர் சவளப் பெயரோடு
நாரா சமுநன் மணியு நவின்றனர். ....633
சகுனி யெனும்பெயர் நிமித்தம் பார்ப்பவனும்
பறவையின் பொதுவும் பகரப் பெறுமே. ....634
சத்திர மெனும்பெயர் அன்ன சாலையும்
கைவிடாப் படையுங் கவின்பெறு குடையும்
குடையின் திரும்பும் வேள்வியும் கூறுவர். ....635
சடமெனும் பெயரே பொய்யுஞ் சரீரமும்
கொடுமையு மெனவே கூறப் பெறுமே. ....636
சகுந்த மெனும்பெயர் புள்ளின் பொதுவும்
கழுகு மெனவே கருதுவர் புலவர். ....637
சகுன மெனும்பெயர் புட்பொதுப் பெயரும்
நிமித்தமும் கிழங்கு நிகழ்த்தப் பெறுமே. ....638
சடில மெனும்பெயர் சடையு நெருக்கமும் ....639
சக்கிரி யெனும்பெயர் தராபதி யரவுடன்
மிக்கசீர் முகுந்தன் செக்கான் குயவனாம். ....640
சசியெனும் பெயரே மதியும் கற்பூரமும்
இந்திரன் மனைவியும் வெண்மையு மியம்புவர். ....641
சங்க மெனும்பெய ரன்புஞ் சபையும்
வென்றியுங் கவிஞரு மோரெண் பெயரும்
கணைக்கால் சங்கின் பெயருங் கருதுவர். ....642
சண்டனெனும்பெயர் சூரியன் யமனுடன்
நபுஞ்சகன் பெயரு நவிலப் பெறுமே. ....643
சக்கர மெனும்பெயர் சுதரி சனமும்
சக்கர யூகமும் சகதலப் பெயரும்
தேரி னுருளும் பெருமையும் பிறப்பும்
நேமிப் புள்ளுங் கடலும் சகடமும்
வட்டமுந் திகிரி வரையுஞ் செப்புவர். ....644
சத்திய மெனும்பெயர் சபதமு மெய்யுமாம். ....645
சந்த மெனும்பெயர் நிறமும பிராமமுஞ்
சாந்தமு மினம்பெறு கவிதையுஞ் சாற்றுவர். ....646
சலமெனும் பெயரே பொய்யுங் கோபமும்
புள்ளின் பெயரு நடுக்கமும் புகலுவர். ....647
சயமெனும் பெயரே சருக்கரை வென்றியாம். ....648
சரப மெனும்பெயர் சிம்புள்வரை யாடுமாம். ....649
சராவ மெனும்பெயர் விளக்கின் தகளியும்
சலாகையு மெனவே சாற்றினர் புலவர். ....650
சமழ்த்த லெனும்பெய ரழித்தலு நாணமும் ....651
சயிந்தவ மெனும்பெயர் கலையும் குதிரையும்
இந்துப் பின்பெயர் தானு மியம்புவர். ....652
சகமெனும் பெயரே புள்ளின் சிறகும்
இலையுமோ ரிலக்கமு மியம்பப் பெறுமே. ....653
சம்பு வெனும்பெயர் சங்கரன் றிருமால் நான்முக னாவன ரியுமோர் புல்லுஞ் சூரியன் பெயருஞ் சொல்லப் பெறுமே. ....623
சத்தி யெனும்பெயர் வேலும் பெலமும் உமையுந் துவசமுங் குடைமுற் காரமும். ....624
சமனெனும் பெயரே யியமனு நடுவுமாம். ....625
சதியெனும் பெயரே தாள வொத்துடன் உரோகிணிப் பெயருங் கற்பாட் டியுமாம். ....626
சந்தி யெனும்பெய ரந்திப் பொழுது மூங்கிலுஞ் சதுக்கமு மொழியப் பெறுமே. ....627
சரியெனும் பெயர்கை வளையும் வழியுமாம். ....628
சரண மெனும்பெயர் தாளுங் கரமுஞ் சார்பு மெனவே சாற்றுவர் புலவர். ....629
சடையெனும் பெயர்கோ டீரமும் வேருமாம். ....630
சவியெனும் பெயரே யழகும் பெலமும் மணிக்கோவை வடமு மொளியும் வழங்கும். ....631
சரமெனும் பெயரே தனிமணி வடமும் அம்புஞ் சமரும் கொறுக்கச் சியுமாம். ....632
சலாகை யெனும்பெயர் சவளப் பெயரோடு நாரா சமுநன் மணியு நவின்றனர். ....633
சகுனி யெனும்பெயர் நிமித்தம் பார்ப்பவனும் பறவையின் பொதுவும் பகரப் பெறுமே. ....634
சத்திர மெனும்பெயர் அன்ன சாலையும் கைவிடாப் படையுங் கவின்பெறு குடையும் குடையின் திரும்பும் வேள்வியும் கூறுவர். ....635
சடமெனும் பெயரே பொய்யுஞ் சரீரமும் கொடுமையு மெனவே கூறப் பெறுமே. ....636
சகுந்த மெனும்பெயர் புள்ளின் பொதுவும் கழுகு மெனவே கருதுவர் புலவர். ....637
சகுன மெனும்பெயர் புட்பொதுப் பெயரும் நிமித்தமும் கிழங்கு நிகழ்த்தப் பெறுமே. ....638
சடில மெனும்பெயர் சடையு நெருக்கமும் ....639
சக்கிரி யெனும்பெயர் தராபதி யரவுடன் மிக்கசீர் முகுந்தன் செக்கான் குயவனாம். ....640
சசியெனும் பெயரே மதியும் கற்பூரமும் இந்திரன் மனைவியும் வெண்மையு மியம்புவர். ....641
சங்க மெனும்பெய ரன்புஞ் சபையும் வென்றியுங் கவிஞரு மோரெண் பெயரும் கணைக்கால் சங்கின் பெயருங் கருதுவர். ....642
சண்டனெனும்பெயர் சூரியன் யமனுடன் நபுஞ்சகன் பெயரு நவிலப் பெறுமே. ....643
சக்கர மெனும்பெயர் சுதரி சனமும் சக்கர யூகமும் சகதலப் பெயரும் தேரி னுருளும் பெருமையும் பிறப்பும் நேமிப் புள்ளுங் கடலும் சகடமும் வட்டமுந் திகிரி வரையுஞ் செப்புவர். ....644
சத்திய மெனும்பெயர் சபதமு மெய்யுமாம். ....645
சந்த மெனும்பெயர் நிறமும பிராமமுஞ் சாந்தமு மினம்பெறு கவிதையுஞ் சாற்றுவர். ....646
சலமெனும் பெயரே பொய்யுங் கோபமும் புள்ளின் பெயரு நடுக்கமும் புகலுவர். ....647
சயமெனும் பெயரே சருக்கரை வென்றியாம். ....648
சரப மெனும்பெயர் சிம்புள்வரை யாடுமாம். ....649
சராவ மெனும்பெயர் விளக்கின் தகளியும் சலாகையு மெனவே சாற்றினர் புலவர். ....650
சமழ்த்த லெனும்பெய ரழித்தலு நாணமும் ....651
சயிந்தவ மெனும்பெயர் கலையும் குதிரையும் இந்துப் பின்பெயர் தானு மியம்புவர். ....652
சகமெனும் பெயரே புள்ளின் சிறகும் இலையுமோ ரிலக்கமு மியம்பப் பெறுமே. ....653
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|