LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- வட மலை நிகண்டு

சகர உகர வருக்கம்

 

சுந்தரி யெனும்பெயர் உமையுந் துர்க்கையும்
சூரனு மெனவே சொல்லுவர் புலவர். ....723
சுக்கை யெனும்பெ யர்வான் மீனொடு
மாலையு மெனவே வகுத்தனர் புலவர். ....724
சுசியெனும் பெயரே கோடைக் காலமும்
சுத்தமுங் கனலின் பெயருஞ் சொல்லுவர். ....725
சுதையெனும் பெயரே சுண்ணச் சாந்தும்
மறிகட லமுதமும் புதல்வியும் வழங்குவர். ....726
சுடரெனும் பெயரே சூரியன் மதிகனல்
விளக்கு மொளியும் விளம்பப் பெறுமே. ....727
சுவவெனும் பெயர்சுவர்க் கத்தின் பெயரும்
புள்ளின் மூக்குஞ் சுண்டனும் புகலுவர். ....728
சுண்ட னெனும்பெயர் சூரனுஞ் சதையமும். ....729
சும்மை யெனும்பெயர் ஊர்ப்பொதுப் பெயரும்
நென்முதற் போரும் நிறைந்த நீர்நாடுஞ்
சுமையோடு சத்த வொலியுஞ் சொல்லுவர். ....730
சுவலெனும் பெயரே தோளின் மேலும்
மேடுங் குரகதக் குசையின் மயிரும்
பிடர்த்தலைப் பெயரும் பேசப் பெறுமே. ....731
சுருங்கை யெனும்பெயர் கரந்த கற்படையும்
நுழைவாய் தலுமென நுவலப் பெறுமே. ....732
சுரிய லெனும்பெயர் ஆண்பான் மயிரும்
பெண்பால் மயிரும் பேசுவர் புலவர். ....733
சுரையெனும் பெயரே யுட்டுளை வடிவும்
ஆவின் முலையும் நறவும் அலாபுமாம். ....734
சுடிகை யெனும்பெயர் சுட்டியு மகுடமும்
உச்சியு மெனவே மொழியப் பெறுமே. ....735
சுரிகை யெனும்பெய ருடைவா ளுடனே
மெய்புகு கருவியும் விளம்புவர் புலவர். ....736
சுகமெனும் பெயரே யின்பமுங் கிளியுமாம். ....737
சுரர்குரு வெனும்பெயர் தேவர் மந்திரியும்
இந்திரன் பெயரும் இயம்பப் பெறுமே. ....738
சுவேத மெனும்பெயர் வெண்மையும் வெயர்வுமாம். ....739
சுவாமி யெனும்பெயர் முருகனும் வியாழமும்
குருவுந் தலைவனுங் கூறுவர் புலவர். ....740
சுருதி யெனும்பெயர் வேதமும் ஒலியுமாம். ....741
சுரமெனும் பெயரே வழியுங் காடும்
அருநெறிப் பெயரும் பாலை நிலமுமாம். ....742

 

சுந்தரி யெனும்பெயர் உமையுந் துர்க்கையும்

சூரனு மெனவே சொல்லுவர் புலவர். ....723

 

சுக்கை யெனும்பெ யர்வான் மீனொடு

மாலையு மெனவே வகுத்தனர் புலவர். ....724

 

சுசியெனும் பெயரே கோடைக் காலமும்

சுத்தமுங் கனலின் பெயருஞ் சொல்லுவர். ....725

 

சுதையெனும் பெயரே சுண்ணச் சாந்தும்

மறிகட லமுதமும் புதல்வியும் வழங்குவர். ....726

 

சுடரெனும் பெயரே சூரியன் மதிகனல்

விளக்கு மொளியும் விளம்பப் பெறுமே. ....727

 

சுவவெனும் பெயர்சுவர்க் கத்தின் பெயரும்

புள்ளின் மூக்குஞ் சுண்டனும் புகலுவர். ....728

 

சுண்ட னெனும்பெயர் சூரனுஞ் சதையமும். ....729

 

சும்மை யெனும்பெயர் ஊர்ப்பொதுப் பெயரும்

நென்முதற் போரும் நிறைந்த நீர்நாடுஞ்

சுமையோடு சத்த வொலியுஞ் சொல்லுவர். ....730

 

சுவலெனும் பெயரே தோளின் மேலும்

மேடுங் குரகதக் குசையின் மயிரும்

பிடர்த்தலைப் பெயரும் பேசப் பெறுமே. ....731

 

சுருங்கை யெனும்பெயர் கரந்த கற்படையும்

நுழைவாய் தலுமென நுவலப் பெறுமே. ....732

 

சுரிய லெனும்பெயர் ஆண்பான் மயிரும்

பெண்பால் மயிரும் பேசுவர் புலவர். ....733

 

சுரையெனும் பெயரே யுட்டுளை வடிவும்

ஆவின் முலையும் நறவும் அலாபுமாம். ....734

 

சுடிகை யெனும்பெயர் சுட்டியு மகுடமும்

உச்சியு மெனவே மொழியப் பெறுமே. ....735

 

சுரிகை யெனும்பெய ருடைவா ளுடனே

மெய்புகு கருவியும் விளம்புவர் புலவர். ....736

 

சுகமெனும் பெயரே யின்பமுங் கிளியுமாம். ....737

 

சுரர்குரு வெனும்பெயர் தேவர் மந்திரியும்

இந்திரன் பெயரும் இயம்பப் பெறுமே. ....738

 

சுவேத மெனும்பெயர் வெண்மையும் வெயர்வுமாம். ....739

 

சுவாமி யெனும்பெயர் முருகனும் வியாழமும்

குருவுந் தலைவனுங் கூறுவர் புலவர். ....740

 

சுருதி யெனும்பெயர் வேதமும் ஒலியுமாம். ....741

 

சுரமெனும் பெயரே வழியுங் காடும்

அருநெறிப் பெயரும் பாலை நிலமுமாம். ....742

 

by Swathi   on 20 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.