|
||||||||
சகர உகர வருக்கம் |
||||||||
சுந்தரி யெனும்பெயர் உமையுந் துர்க்கையும்
சூரனு மெனவே சொல்லுவர் புலவர். ....723
சுக்கை யெனும்பெ யர்வான் மீனொடு
மாலையு மெனவே வகுத்தனர் புலவர். ....724
சுசியெனும் பெயரே கோடைக் காலமும்
சுத்தமுங் கனலின் பெயருஞ் சொல்லுவர். ....725
சுதையெனும் பெயரே சுண்ணச் சாந்தும்
மறிகட லமுதமும் புதல்வியும் வழங்குவர். ....726
சுடரெனும் பெயரே சூரியன் மதிகனல்
விளக்கு மொளியும் விளம்பப் பெறுமே. ....727
சுவவெனும் பெயர்சுவர்க் கத்தின் பெயரும்
புள்ளின் மூக்குஞ் சுண்டனும் புகலுவர். ....728
சுண்ட னெனும்பெயர் சூரனுஞ் சதையமும். ....729
சும்மை யெனும்பெயர் ஊர்ப்பொதுப் பெயரும்
நென்முதற் போரும் நிறைந்த நீர்நாடுஞ்
சுமையோடு சத்த வொலியுஞ் சொல்லுவர். ....730
சுவலெனும் பெயரே தோளின் மேலும்
மேடுங் குரகதக் குசையின் மயிரும்
பிடர்த்தலைப் பெயரும் பேசப் பெறுமே. ....731
சுருங்கை யெனும்பெயர் கரந்த கற்படையும்
நுழைவாய் தலுமென நுவலப் பெறுமே. ....732
சுரிய லெனும்பெயர் ஆண்பான் மயிரும்
பெண்பால் மயிரும் பேசுவர் புலவர். ....733
சுரையெனும் பெயரே யுட்டுளை வடிவும்
ஆவின் முலையும் நறவும் அலாபுமாம். ....734
சுடிகை யெனும்பெயர் சுட்டியு மகுடமும்
உச்சியு மெனவே மொழியப் பெறுமே. ....735
சுரிகை யெனும்பெய ருடைவா ளுடனே
மெய்புகு கருவியும் விளம்புவர் புலவர். ....736
சுகமெனும் பெயரே யின்பமுங் கிளியுமாம். ....737
சுரர்குரு வெனும்பெயர் தேவர் மந்திரியும்
இந்திரன் பெயரும் இயம்பப் பெறுமே. ....738
சுவேத மெனும்பெயர் வெண்மையும் வெயர்வுமாம். ....739
சுவாமி யெனும்பெயர் முருகனும் வியாழமும்
குருவுந் தலைவனுங் கூறுவர் புலவர். ....740
சுருதி யெனும்பெயர் வேதமும் ஒலியுமாம். ....741
சுரமெனும் பெயரே வழியுங் காடும்
அருநெறிப் பெயரும் பாலை நிலமுமாம். ....742
சுந்தரி யெனும்பெயர் உமையுந் துர்க்கையும் சூரனு மெனவே சொல்லுவர் புலவர். ....723
சுக்கை யெனும்பெ யர்வான் மீனொடு மாலையு மெனவே வகுத்தனர் புலவர். ....724
சுசியெனும் பெயரே கோடைக் காலமும் சுத்தமுங் கனலின் பெயருஞ் சொல்லுவர். ....725
சுதையெனும் பெயரே சுண்ணச் சாந்தும் மறிகட லமுதமும் புதல்வியும் வழங்குவர். ....726
சுடரெனும் பெயரே சூரியன் மதிகனல் விளக்கு மொளியும் விளம்பப் பெறுமே. ....727
சுவவெனும் பெயர்சுவர்க் கத்தின் பெயரும் புள்ளின் மூக்குஞ் சுண்டனும் புகலுவர். ....728
சுண்ட னெனும்பெயர் சூரனுஞ் சதையமும். ....729
சும்மை யெனும்பெயர் ஊர்ப்பொதுப் பெயரும் நென்முதற் போரும் நிறைந்த நீர்நாடுஞ் சுமையோடு சத்த வொலியுஞ் சொல்லுவர். ....730
சுவலெனும் பெயரே தோளின் மேலும் மேடுங் குரகதக் குசையின் மயிரும் பிடர்த்தலைப் பெயரும் பேசப் பெறுமே. ....731
சுருங்கை யெனும்பெயர் கரந்த கற்படையும் நுழைவாய் தலுமென நுவலப் பெறுமே. ....732
சுரிய லெனும்பெயர் ஆண்பான் மயிரும் பெண்பால் மயிரும் பேசுவர் புலவர். ....733
சுரையெனும் பெயரே யுட்டுளை வடிவும் ஆவின் முலையும் நறவும் அலாபுமாம். ....734
சுடிகை யெனும்பெயர் சுட்டியு மகுடமும் உச்சியு மெனவே மொழியப் பெறுமே. ....735
சுரிகை யெனும்பெய ருடைவா ளுடனே மெய்புகு கருவியும் விளம்புவர் புலவர். ....736
சுகமெனும் பெயரே யின்பமுங் கிளியுமாம். ....737
சுரர்குரு வெனும்பெயர் தேவர் மந்திரியும் இந்திரன் பெயரும் இயம்பப் பெறுமே. ....738
சுவேத மெனும்பெயர் வெண்மையும் வெயர்வுமாம். ....739
சுவாமி யெனும்பெயர் முருகனும் வியாழமும் குருவுந் தலைவனுங் கூறுவர் புலவர். ....740
சுருதி யெனும்பெயர் வேதமும் ஒலியுமாம். ....741
சுரமெனும் பெயரே வழியுங் காடும் அருநெறிப் பெயரும் பாலை நிலமுமாம். ....742
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|