LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

சேலம் ஆடிட்டர் ரமேஸ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கைது !!!

சேலம் ஆடிட்டரும், பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலருமான ரமேஷ் மற்றும் வேலூர் இந்து முன்னணி பிரமுகர் வெள்ளையன் கொலை வழக்குகளில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி 'போலீஸ்' பக்ருதீன், சென்னை அருகே, ஆந்திர மாநில எல்லைப் பகுதியில் நேற்று மாலை, காவல்துறையினரிடம் பிடிபட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.


வேலூரில் கடந்த ஜூலை மாதம், 1ம் தேதி, இந்து முன்னணி பிரமுகர், வெள்ளையப்பன் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து, அதே மாதம், 19ம் தேதி, சேலத்தில் பா.ஜ., அலுவலகம் முன் அக்கட்சியின் மாநில பொதுச் செயலர், ஆடிட்டர் ரமேஷை மூவர் கும்பல் வெட்டிச் சாய்த்தது. இந்த வழக்குகளில் விரைந்து விசாரணை நடத்த, சிறப்பு புலனாய்வு குழு அமைக்க, முதல்வர் ஜெயலலிதா, உத்தரவு பிறப்பித்தார். இதனை தொடர்ந்து, எஸ்.ஐ.டி., - ஐ.ஜி., மஞ்சுநாதா தலைமையில், 30  பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு,அந்த குழு, சேலம் வந்து விசாரணையை துவக்கியது.இக்கொலை  தொடர்பாக, மதுரை திருமங்கலத்தில் 2011ல், பைப் வெடிகுண்டு வைத்த வழக்கு மற்றும் கோவை குண்டுவெடிப்பு உள்ளிட்ட வேறு சில வழக்குகளில் தலைமறைவாக இருந்த மதுரை, நெல்பேட்டையைச் சேர்ந்த, "போலீஸ்' பக்ருதீன், பிலால் மாலிக்,  திருநெல்வேலி, மேலப்பாளையத்தைச் சேர்ந்த பன்னா இஸ்மாயில், நாகூரைச் சேர்ந்த அபுபக்கர் சித்திக் ஆகியோரை, சிறப்பு புலனாய்வுக் குழுவினர் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்தனர். இவர்களை பற்றி தகவல் தருபவர்களுக்கு 20 லட்சம் சன்மானமாக வழங்கப்படும் என காவல்துறை அறிவித்தது.
இந்நிலையில், தமிழக காவல்துறை போலீஸ் பக்ருதீனை ஆந்திர மாநில எல்லைப் பகுதியில் நேற்று மாலை பிடித்துள்ளது. 

by Swathi   on 04 Oct 2013  0 Comments
Tags: சேலம் ஆடிட்டர்   ஆடிட்டர் ரமேஷ்   Auditor Ramesh              
 தொடர்புடையவை-Related Articles
சேலம் ஆடிட்டர் ரமேஸ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கைது !!! சேலம் ஆடிட்டர் ரமேஸ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கைது !!!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.