ஜில்லா படத்தை தொடர்ந்து நடிகர் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
மேலும் விஜயும், அனிருத்தும் இணைந்து படத்தில் படத்தில் பாடல் ஒன்றை பாட இருக்கிறார்களாம். அடுத்த வருடம் மார்ச் மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என தெரிகிறது. இதில் கதாநாயகியாக சமந்தா நடிக்க இருக்கிறார். தற்போது, சூர்யாவுடன் நடித்துவரும் சமந்தா, விஜய் படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதால் மகிழ்ச்சியில் உள்ளார். இந்த படத்தில் இன்னொரு நாயகியாக நஸ்ரியா நடிப்பதாக இருந்ததாம். தொப்புள் விவகாரப் பிரச்னையால் நஸ்ரியாவை நீக்கிவிட்டதாக தெரிகிறது. இப்போது வேறொருவரை நடிக்க வைக்கப் போவதால், அதிர்ச்சியில் இருக்கிறாராம் நஸ்ரியா.
|