|
||||||||
சமதர்மம் விரும்பிய சான்றாளர் |
||||||||
உனது அடுத்த வீட்டுக்காரன் பசித்திருக்க நீ மட்டும் உண்ணாதே என்ற வாக்கை நான் கடைபிடிக்கத் தொடங்கி விட்டேன் என்றார் ஒருவர் . அப்படியா ? “ அடுத்த வீட்டுக்காரரின் அரும்பசியைப்போக்க உதவி செய்யத் தொடங்கி விட்டீர்களா ? ” என்று கேட்டார் மற்றவர் . “ அதுதான் இல்லை . ஏழைகள் இல்லாத பகுதியில் பங்களா வாங்கிவிட்டேன் . அங்கே அடுத்த வீட்டுக்காரர்கள் யாரும் பசித்திருக்க மாட்டார்களே “ என்றார் அவர் . சமத்துவத்தை இப்படிக் கடைப்பிடிப்பவர்கள் உண்டு . சமதர்மத்தின் மூலம் எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்று விரும்பியவர் பெருந்தலைவர் காமராசர் . ஜனநாயக சோஷியலிசம் என்ற கொள்கையை புவனேஸ்வர காங்கிரஸ் மாநாட்டில் முழங்கியவர் காமராசர் . இந்த சித்தாந்தத்தை நடைமுறைப்படுத்துவதில் இரண்டு முறை இருந்தது . ஒன்று தார்மீக முறை . மற்றொன்று கட்டாய முறை . இதனை விளக்க பெருந்தலைவர் அருமையான உதாரணம் ஒன்றைச் சொன்னார் . தரையில் உறங்குகிறான் ஒருவன் . பாயில் படுத்திருக்கிறான் மற்றொருவன் . இதில் சமத்துவம் இல்லை . இந்த ஏற்றத்தாழ்வை இரண்டு விதங்களில் போக்கலாம் . பாய் விரித்து உறங்குபவனிடமிருந்து பாயைப் பிடுங்கிக்கொண்டு அவனையும்தரையில் படுக்க வைப்பது . இது ஒரு முறை . புதிதாக ஒரு பாயை உருவாக்கி தரையில் படுத்திருப்பவனும் அதைப் பயன்படுத்திக்கொள்ளும் சூழ்நிலையை ஏற்படுத்துதல் . இந்த முறையே சிறப்பானது . சமவாழ்வு சமுதாயத்தை அமைக்கும் பணியை கட்டாயத்தின் மூலம் செய்ய விரும்பவில்லை . போதனை முறைகளையே கையாண்டு உடைமை வர்க்கத்தின் உள்ளத்தில் மனித நேயத்தை வளர்ப்பதே முக்கியம் என்றார் . இதற்கு ஏற்ற வகையில் தன்னுடைய வாழ்க்கையையும் அமைத்துக் கொண்டார் காமராசர் . ஒரு தடவை ஒரு மன்றத்தில் பேசப்போனார் . குடிசை வாழ் மக்கள் சங்கம்அது . தொடக்கத்திலேயே பெயர்ப் பலகையைச் சுட்டிக் காட்டி “ குடிசை வாழ் மக்கள் என்று போட்டிருக்கிறிர்கள் . நீங்கள் எங்கே வாழ்கிறீர்கள் , எப்படி இருக்கிறீர்கள் என்று சொல்ல வேண்டும் . எல்லா வசதிகளும் கிடைத்தால் தான் நீங்கள் வாழ்வதாக அர்த்தம் ” என்று பேசினார் . அதனால்தான் அரசுக் கவிஞர் எஸ் . டி . சுந்தரம் . “ ஏழை எளியேரின் ஏகப்பிரதிநிதி எங்கள் தலைவர் என்றும் வாழியவே ஏழேழ் பிறப்பிற்கும் இந்திய நாட்டின் இமயம் போல் புகழ் வாழியவே “ என்று வாழ்த்துகிறார் . |
||||||||
by Swathi on 02 Sep 2015 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|