தமிழகத்தில் கனிம மணல் அள்ள தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், தூத்துக்குடி துறைமுகத்தில், சுமார், 13 ஆயிரம் டன் கனிம மணலை கப்பலில் ஏற்றும் பணி நடைபெற்று வருகிறது.
தமிழக கடற்கரையோரங்களில் தாது மணல் அள்ளப்படுவதாகவும் அது வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதாகவும் எழுந்த புகாரை அடுத்து, தமிழக அரசு, தமிழக வருவாய் துறை செயலாளர் ககன் தீப் தலைமையிலான குழு அமைத்து இந்த புகாரை ஆய்வு செய்ய உத்தரவிட்டது. இந்த ஆய்வு குழு தனது விசாரணை அறிக்கையை, தமிழக முதல்வரிடம் சமீபத்தில் சமர்பித்தது.இதனை அடுத்து தமிழகத்தில் கனிம மணல் அள்ள, தமிழக அரசு தடைவிதித்திருந்தது.
இந்நிலையில், தூத்துக்குடி துறைமுகத்தில் கனிம மணல் ஏற்றும் பணி நடைபெற்று வருகிறது. இது குறித்த துறைமுக அதிகாரிகளை கேட்ட போது, தமிழக அரசு விதித்துள்ள தடை குறித்த தகவல்கள் தங்களுக்கு கிடைக்கவில்லை என்று கூறினர்.
|