LOGO
  முதல் பக்கம்    சினிமா    திரைவிமர்சனம் Print Friendly and PDF

சண்டி வீரன் திரை விமர்சனம் !!

நெடுங்காடு மற்றும் வயல்பாடி என்னும் இரண்டு கிராமங்களுக்கிடையேயான தண்ணீர் பிரச்சனைத் தான் படத்தின் கதை கரு.

மன்னார்குடி அருகே உள்ள இரண்டு கிராமங்கள் தான் நெடுங்காடும், வயல்பாடியும். நெடுகாட்டில் நல்ல தண்ணீரும், வயல்பாடியில் உப்பு தண்ணீருமே கிடைப்பதால், நல்ல தண்ணீர் கிடைக்கும் கிராமம் வளமாகவும், உப்புத் தண்ணீர் கிடைக்கும் கிராமம் பஞ்சம் பட்டினியாகவும் இருக்கிறது. இதனால் வயல்பாடி மக்கள் நெடுங்காடு மக்களை நம்பி இருக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகிறது.

இதில் நெடுங்காடு கிராமத்தில் வாழ்ந்து வருகிறார் போஸ் வெங்கட். இவருடைய மகன் அதர்வா(பாரி). நெடுங்காடு கிராமத்திற்கும் அருகே உள்ள வயல்பாடி கிராமத்திற்கும் தண்ணீர்
பிரச்சனை ஏற்படுகிறது.

நெடுங்காடு கிராமத்தின் பஞ்சாயத்துத் தலைவரும், கவுன்சிலரும் சேர்ந்து கொண்டு வயல்பாடி கிராமத்திற்கு தண்ணீர் விடாமல் தடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். தண்ணீர் பிரச்சனை பெரிதாகி பிரச்சனை கலவரமாக வெடிக்கிறது. இதில் அதர்வாவின் அப்பா இறக்கிறார்.

வளர்ந்து ஆளான அதர்வா சிங்கப்பூர் சென்று ஊர் திரும்புகிறார். அப்போது கவுன்சிலரின் மகளான ஆனந்தியைக் காதலிக்கிறார். இவர்களின் காதல் விவகாரம் கவுன்சிலர் வீட்டுக்கு தெரிய வர, உடனே அதர்வாவை கூப்பிட்டு மிரட்டுகிறார். ஆனால் அதர்வாவோ ஆனந்தியைதான் திருமணம் செய்வேன் என்று சபதம் போட்டு செல்கிறார்.

இந்நிலையில் தன்னுடன் சிங்கப்பூரில் வேலை பார்த்த நண்பனை சந்திக்க வயல்பாடி கிராமத்திற்கு செல்கிறார். அங்கு உப்புத் தண்ணியை குடித்து வரும் ஊர் மக்களை பார்த்து அதிர்ச்சியாகிறார். இந்த ஊருக்கு தனது சொந்த ஊரில் இருந்து தண்ணீர் கிடைக்க திட்டமிடுகிறார். எப்படியாவது தண்ணீரை பக்கத்து ஊருக்கு பெற்றுத் தர நினைக்கிறார். இதனால் ஊர் தலைவர்களின் பகையையும் சம்பாரிக்கிறார் அதர்வா.

இறுதியில் அதர்வாவின் உதவியால் வயல்பாடி மக்களுக்கு நல்ல தண்ணீர் கிடைத்ததா. அதர்வா, ஆனந்தியின் காதல் என்ன ஆனது என்பதே படத்தின் மீதி கதை.

கிராமத்து இளைஞராக பக்காவாக நடித்திருக்கிறார் நாயகன் அதர்வா. நாயகி ஆனந்தி, பாவாடை தாவணியுடன் வந்து கிராமத்து பெண்ணிற்கான வேடத்திற்குக் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்.

ஊர் கவுன்சிலராகவும், நாயகியின் அப்பாவாகவும் வரும் லால், வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். அவரது நண்பராகவும், ஊர் தலைவராகவும் வரும் ரவிச்சந்திரன் தனது நேர்த்தியான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்துள்ளார்.

அதர்வாவின் நண்பராக வரும் இளம்பரிதி, அப்பாவாக வரும் போஸ் வெங்கட், அம்மாவாக வரும் ராஜ ஸ்ரீ ஆகியோர் தனது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர்.

அருணகிரி இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். மொத்தத்தில் சண்டி வீரன் நல்ல குடும்ப படம்.

by CinemaNews   on 07 Aug 2015  0 Comments
Tags: Sandi Veeran   Sandi Veeran Vimarsanam   Sandi Veeran Thirai Vimarsanam   Sandi Veeran Cinema Vimarsanam   Sandi Veeran Story   சண்டி வீரன்   சண்டி வீரன் திரை விமர்சனம்  
 தொடர்புடையவை-Related Articles
சண்டி வீரன் திரை விமர்சனம் !! சண்டி வீரன் திரை விமர்சனம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.