LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    கட்டுரை Print Friendly and PDF
- ஜோதிடம்

சனி மகா பிரதோஷம்

 

சனி மகா பிரதோஷம்                                                                       
ஜோதிடர் பலராமன் 
சாகா வரம் கிடைக்க அமிர்தம் பெற வேண்டி தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்தபோது முதலில் தோன்றிய ஆலகால விஷத்தை அதன் வீரியத்தை தாங்க முடியாத தேவர்களும் அசுரர்களும் சிவனை வேண்டியபோது அந்த விஷத்தை உண்டு அனைவரையும் காத்த நேரம் பிரதோஷ நேரம். நீல நிற விஷத்தை உண்டு கழுத்து கண்டத்தில் நிறுத்தியதால் "திருநீலகண்டன்" என்று அழைக்கப் படுகிறார் சிவபெருமான். சிவனை வணங்கும் பக்தர்களுக்கு இது மிகப் புனிதமான நேரமாகப் போற்றி புகழப்படுகிறது.  
பிரதோஷம் என்பது ஒவ்வொரு மாதமும் திரயோதசி திதி (இது அமாவாசைக்கும் பௌர்ணமிக்கும் பிறகு வரும் 13-ஆம் நாள் ஆகும். சமஸ்கிருதத்தில் திரயோதசி என்பதற்கு 13 என்று பொருளாகும்) வரும் நாளில் மாலை சூரிய அஸ்தமனத்திற்கு 2 நாழிகைகள் முன்பும் சூரிய அஸ்தமனத்திற்கு 2 நாழிகைகள் பின்பும் உள்ள நேரம் ஆகும். ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்கள் ஆகும். ஆக பிரதோஷ நேரம் 4 நாழிகைகள் என்பது 96 நிமிடங்கள் அல்லது சுமார் ஒன்றரை மணி நேரமாகும். பிரதோஷம் வாரத்தின் எந்த நாளிலும் வரும். சனிக்கிழமை வரும் பிரதோஷம் சனி மகா பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. ஜூன் மாதம் 2-ஆம் தேதியும் 16 - ஆம் தேதியும்   இவை இரண்டு நாட்களுமே சனிக்கிழமையில் வருவதால்  சனிப்பிரதோஷ நாட்கள் ஆகும். 
இந்த நேரத்தில் சிவன் கோவிலில் பார்வதி சமேத பரமேஸ்வர தரிசனம் மிகச் சிறந்த புண்ணிய பலனைத் தர வல்லது. பிரதோஷ பூஜையில் பங்கு பெறுவது, பூஜைக்குப் பொருட்கள் அளிப்பது, பிரதோஷ பூஜை செய்வது, சிவபுராணம் படிப்பது ஆகிய தெய்வீக ஈடுபாடுகள் மூவுலகுக்கும் இறைவனான எம்பெருமான் சிவபெருமானின் பூரணமான அருளைப் பெற்றுத்தரும். இந்த பிரதோஷ நாட்களில் வலம் வரும்போது முதலில் கொடி மரம் அருகே நின்று நந்தி தேவரின் இரு கொம்புகளுக்கிடையே பார்த்து சிவலிங்க தரிசனம் செய்து விட்டு சண்டிகேஸ்வரர் சந்நிதி வரை வலம் வந்து அவரைத் தரிசனம் செய்து விட்டு அப்பிரதட்சிணமாக திரும்பி வந்து சண்டிகேஸ்வர சந்நிதிக்கு முன் உள்ள அபிஷேகத் தீர்த்தம் வரும் கோமுகத்தை தாண்டாமல் அப்படியே திரும்பி வந்த வழியே வந்து நந்தி தேவரின் பின் நின்று சிவலிங்க தரிசனம் செய்யவேண்டும். இவ்வாறு பிரதோஷ நேரத்தில் மூன்று முறை வலம் வருவது பல பிறவிகளில் நாம் செய்த பாவங்களைப் போக்கும். நம் வாழ்வில் வறுமை நீங்கி வளம் பெருகும். 
நமசிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!  
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!
                                         மாணிக்க வாசகரின் திருவாசகம் 
நமச்சிவாயவே ஞானமும் கல்வியும் 
நமச்சிவாயவே நானறிவிச்சையும்
நமச்சிவாயவே நானவின்றேத்துமே 
நமச்சிவாயவே நன்னெறி காட்டுமே! 
                                திருஞான சம்பந்தர் அருளிய தேவாரம் 

சனி மகா பிரதோஷம் 


ஜோதிடர் பலராமன் 


சாகா வரம் கிடைக்க அமிர்தம் பெற வேண்டி தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்தபோது முதலில் தோன்றிய ஆலகால விஷத்தை அதன் வீரியத்தை தாங்க முடியாத தேவர்களும் அசுரர்களும் சிவனை வேண்டியபோது அந்த விஷத்தை உண்டு அனைவரையும் காத்த நேரம் பிரதோஷ நேரம். நீல நிற விஷத்தை உண்டு கழுத்து கண்டத்தில் நிறுத்தியதால் "திருநீலகண்டன்" என்று அழைக்கப் படுகிறார் சிவபெருமான். சிவனை வணங்கும் பக்தர்களுக்கு இது மிகப் புனிதமான நேரமாகப் போற்றி புகழப்படுகிறது.  
பிரதோஷம் என்பது ஒவ்வொரு மாதமும் திரயோதசி திதி (இது அமாவாசைக்கும் பௌர்ணமிக்கும் பிறகு வரும் 13-ஆம் நாள் ஆகும். சமஸ்கிருதத்தில் திரயோதசி என்பதற்கு 13 என்று பொருளாகும்) வரும் நாளில் மாலை சூரிய அஸ்தமனத்திற்கு 2 நாழிகைகள் முன்பும் சூரிய அஸ்தமனத்திற்கு 2 நாழிகைகள் பின்பும் உள்ள நேரம் ஆகும். ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்கள் ஆகும். ஆக பிரதோஷ நேரம் 4 நாழிகைகள் என்பது 96 நிமிடங்கள் அல்லது சுமார் ஒன்றரை மணி நேரமாகும். பிரதோஷம் வாரத்தின் எந்த நாளிலும் வரும். சனிக்கிழமை வரும் பிரதோஷம் சனி மகா பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. ஜூன் மாதம் 2-ஆம் தேதியும் 16 - ஆம் தேதியும்   இவை இரண்டு நாட்களுமே சனிக்கிழமையில் வருவதால்  சனிப்பிரதோஷ நாட்கள் ஆகும். 


இந்த நேரத்தில் சிவன் கோவிலில் பார்வதி சமேத பரமேஸ்வர தரிசனம் மிகச் சிறந்த புண்ணிய பலனைத் தர வல்லது. பிரதோஷ பூஜையில் பங்கு பெறுவது, பூஜைக்குப் பொருட்கள் அளிப்பது, பிரதோஷ பூஜை செய்வது, சிவபுராணம் படிப்பது ஆகிய தெய்வீக ஈடுபாடுகள் மூவுலகுக்கும் இறைவனான எம்பெருமான் சிவபெருமானின் பூரணமான அருளைப் பெற்றுத்தரும். இந்த பிரதோஷ நாட்களில் வலம் வரும்போது முதலில் கொடி மரம் அருகே நின்று நந்தி தேவரின் இரு கொம்புகளுக்கிடையே பார்த்து சிவலிங்க தரிசனம் செய்து விட்டு சண்டிகேஸ்வரர் சந்நிதி வரை வலம் வந்து அவரைத் தரிசனம் செய்து விட்டு அப்பிரதட்சிணமாக திரும்பி வந்து சண்டிகேஸ்வர சந்நிதிக்கு முன் உள்ள அபிஷேகத் தீர்த்தம் வரும் கோமுகத்தை தாண்டாமல் அப்படியே திரும்பி வந்த வழியே வந்து நந்தி தேவரின் பின் நின்று சிவலிங்க தரிசனம் செய்யவேண்டும். இவ்வாறு பிரதோஷ நேரத்தில் மூன்று முறை வலம் வருவது பல பிறவிகளில் நாம் செய்த பாவங்களைப் போக்கும். நம் வாழ்வில் வறுமை நீங்கி வளம் பெருகும். 


நமசிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!  

இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!         

                               மாணிக்க வாசகரின் திருவாசகம் 

 

நமச்சிவாயவே ஞானமும் கல்வியும் 

நமச்சிவாயவே நானறிவிச்சையும்

நமச்சிவாயவே நானவின்றேத்துமே 

நமச்சிவாயவே நன்னெறி காட்டுமே!                                

 

திருஞான சம்பந்தர் அருளிய தேவாரம் 

 

by Swathi   on 01 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மௌனமாக இருப்பதும் தனிமையாக இருப்பதும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டதா? மௌனமாக இருப்பதும் தனிமையாக இருப்பதும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டதா?
வள்ளலார் அவதரித்த 200ம் ஆண்டை கொண்டாட இன்று முதல்  அடுத்த 200 நாட்களுக்கு 200 வள்ளலார் தமிழிசைப் பாடல்களை வழங்குகிறார் வள்ளலார் அவதரித்த 200ம் ஆண்டை கொண்டாட இன்று முதல் அடுத்த 200 நாட்களுக்கு 200 வள்ளலார் தமிழிசைப் பாடல்களை வழங்குகிறார்
எங்கள் குல தெய்வம் -கட்டுரை, காணொளிப் போட்டி எங்கள் குல தெய்வம் -கட்டுரை, காணொளிப் போட்டி
வாழ்க்கை எனபது ஒரு பாதை வாழ்க்கை எனபது ஒரு பாதை
வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்! இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது. வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்! இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது.
அலகபாத்தில் உள்ள 128 வருடங்கள் பழமையான சத்திரம் அது. அலகபாத்தில் உள்ள 128 வருடங்கள் பழமையான சத்திரம் அது.
கோயிலா? கோவிலா? எது சரி? கோயிலா? கோவிலா? எது சரி?
உச்சியில் அஸ்திவாரம்- ''தஞ்சை பெரிய கோவில்''! உச்சியில் அஸ்திவாரம்- ''தஞ்சை பெரிய கோவில்''!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.