இனி படங்களில், காமெடி என்கிற பெயரில் ’டபுள் மீனிங்’ டயலாக்குகளை பேசப்போவதில்லை என முடிவு செய்துள்ளாராம் சந்தானம்.
பல பஞ்ச் டயலாக்குகளைப் பேசி ரசிகர்களிடையே ஃபேமஸாகிய நடிகர்களுள் சந்தானமும் ஒருவர். தொடக்கத்தில் ஒழுங்காக டயலாக் பேசி நடித்து வந்த சந்தானம் சமீபகால படங்களில் வரம்பு மீறி டபுள் மீனிங் டயலாக்குகளை வாரி இரைத்து வருகிறார். இதனால் படத்தைப் பார்க்கும் ரசிகர்கள் முகம் சுழிப்பதோடு அவரின் இந்த டபுள் மீனிங் டயலாக்குகளுக்கு எதிர்ப்பும் தெரிவித்தனர். பல பெண்கள் அமைப்பினரும் சந்தானத்துக்கு எதிராக போராட்டம் செய்யப் போவதாக அறிவித்தனர்.
இதற்கிடையே சந்தானம் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். ஈ பட டைரக்டர் எஸ்.எஸ்.ராஜமெளலி தான் டைரக்ட் செய்கிறார். தெலுங்கு ஹிட் படமான மரியாத ராமண்ணாவின் ரீமேக் தான் இந்தப்படம். இந்தப்படத்திலிருந்து இனிமேல் டபுள் மீனிங் டயலாக்குகளை பேசுவதில்லை என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம் சந்தானம். அந்த முடிவுக்கு காரணமே சந்தானத்தின் அம்மா அவரை எச்சரித்தது தானாம்.
சந்தானம் வீட்டில் அம்மாவின் செல்லப்பிள்ளையாம். அம்மா என்ன சொன்னாலும் பேச்சை தட்டவே மாட்டாராம். தனது மகனைப் பற்றி வீட்டின் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களே திட்டித் தீர்ப்பதை பொறுக்க முடியாத சந்தானத்தின் அம்மா விஷயத்தை சந்தானத்திடம் சொல்லி வேதனைப் பட்டிருக்கிறார். இதனால் மனமுடைந்த அவர் அம்மாவின் ஆணைக்கிணங்க, இனி படங்களில் டபுள் மீனிங் டயலாக்குகள் பேசி நடிப்பதில்லை என்று முடிவுக்கு வந்திருக்கிறாராம்.
|