ஒரு சில மாதங்களுக்கு முன்பெல்லாம் பிஸியான காமெடியனாக திரையுலகில் கலக்கி வந்த சந்தானம் தற்போது.. பட வாய்ப்ப்புகள் அதிகம் இல்லாமல் இருந்து வருகிறார்.
இந்நிலையில், ரஜினியின் லிங்கா படத்தில் வாய்ப்பு கிடைத்ததால், மீண்டும் தனது மார்கெட் சூடு பிடிக்கும் என எதிர்ப்பார்க்கிறார் சந்தானம். மேலும், ஆர்யா, உதயநிதி, விஷால், ஜீவா, கார்த்தி போன்ற ஹீரோக்களின் படங்களில் காமெடி தர்பார் நடத்திக்கொண்டிருந்த சந்தானம், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் ஹீரோ பிரவேசம் காரணமாக தற்போது அவர்களால் ஓரங்கட்டப்பட்டும் வந்தார்.
ஆனால், பல முன்னணி ஹீரோக்களும் அவரை நிராகரித்து வந்த நேரத்தில், ஆர்யா மட்டும் ராஜேஷ் இயக்கத்தில் தான் நடிக்கும் படத்துக்கு சந்தானத்தை தற்போது புக் பண்ணியிருக்கிறார்.
இதனால், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மற்ற தனது நட்பு வட்டார ஹீரோக்களுடனும் இணைந்து விட வேணடும் என்று நேரம் பார்த்துககொண்டிருந்த சந்தானம், தற்போது நடிகர் சங்க கட்டடத்துக்கு நிதி திரட்டும் வகையில் விஷால், ஆர்யா, ஜீவா, ஜெயம்ரவி, கார்ததிக், சிவகார்த்திகேயன், விஜயசேதுபி ஆகியோர் இணைந்து நடிக்கும் படத்தில் தனக்கும் வாய்ப்பு தருமாறு சமந்தப்பட்டவர்களை கேட்டுள்ளாராம்.
இன்றைய நிலையில், ஒரு நாளைக்கே 10 லட்சம் சம்பளம் வாங்கி நடிக்கும் சந்தானம், எனக்கு ஒரு பைசாகூட சம்பளமாக வேண்டாம். உங்களை மாதிரியே நானும் காசு வாங்காமல் நடித்துத்தருகிறேன் என்று கூறி நடிகர் சங்கத்திற்கு ஒரு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறாராம்.
|