LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ்

சப்பாணிப்பருவம்

 

421 வீங்குஞ் சுவைச்செங் கழைச்சிலை குழைத்தளி விராயநா ணம்பொருத்தி -
      விரைமலர்க் கோலைந்து கொண்டொரு மலர்க்கோல் விரைந்துவிட் டவனுடம்பு,
தேங்குந் தழற்குணவு செய்துபண் டைப்படி திருந்தியோ கத்திருந்த -
      செஞ்சடைக் கருமிடற் றுத்தவள நீற்றுத் திருப்பெரும் பரமயோகி,
வாங்குத் திரைக்கடற் புடவிமுத லெத்தலமும் வாழ்வெனும் புணரிமூழ்க -
      வணங்கா முடித்தலை வணங்கிட வணக்குகழை வண்சிலையு மலர்வாளியுந்,
தாங்குந் திருக்கைத் தலத்தொளி துளும்பவொரு சப்பாணி கொட்டியருளே -
      தண்டமிழ் வளம்பொலி குடந்தைமங் களவல்லி சப்பாணி கொட்டியருளே. (1)
422 ஆக்குந் தொழிற்றமரு கம்புரக் குந்தொழி லமைந்தவப யஞ்சாம்பரா -
      வழிக்குந் தொழிற்றீ மறைக்குந் தொழிற்றலை யமைந்தூன்று தாண்மறைப்புப்,
போக்குந் தொழிற்குஞ் சிதத்தா ளிவைந்தும் பொலிந்திடச் சுருதிவாழ்த்தப் -
      புன்மையின் றுய்ந்தன மெனச்சகல புவனமும் போற்றெடுத் தேத்தமடமை,
நீக்கும் புலிப்பத முனித்தலைவ னும்பணி நெடுந்தவ முனித்தலைவனு -
      நிறைமகிழ் திளைப்பமா தேவன்மன் றிடைநவி னிருத்தக் கியைந்ததாளந்,
தாக்குந் திருக்கைத் தலத்தொளி துளும்பவொரு சப்பாணி கொட்டியருளே
      தண்டமிழ் வளம்பொலி குடந்தைமங் களவல்லி சப்பாணி கொட்டியருளே. (2)
423 ஓங்கிய கொடைத்தலைமை பூண்டமை யிரும்புவன முணரவறி குறியமைந்தாங் -
      குத்தமோத் தமநீர் பொழிந்துதெய் வப்பசுவி னொண்முலையின் விரல்கள்வாய்ந்து,
தூங்கிய மதுப்பொழி மலர்க்கற் பகத்திற் றுறுந்தளிரி னியல்புபூண்டு -
      துங்கமிகு சங்கமும் பதுமமு மிரேகையிற் றோற்றப் புனைந்துகொண்டு,
வீங்கிய கடர்ப்பிழம் பாற்றுணங் கறன்முழுதும் வெய்துவாய்ப் பெய்துதோன்றும் -
      வெய்யோன் சமழ்க்குமணி யாழிகள் புனைந்துமழை மேகமுத லாயபலவுந்,
தாங்கிய திருக்கைத் தலத்தொளி துளும்பவொரு சப்பாணி கொட்டியருளே
      தண்டமிழ் வளம்பொலி குடந்தைமங் களவல்லி சப்பாணி கொட்டியருளே. (3)
424 புண்ணிய மலிந்தவ ரகக்கணு முகக்கணும் பொங்குகளி தங்குமாறு -
      பொன்னஞ் சிலம்புபுனை தாமரை யியங்குகாற் புண்டரிக மலரகத்துங்,
கண்ணிய செழுங்கோக நகமல ரகத்துங் கலந்துமர் நலந்தண்மடவார் -
      கைக்கமல மிசைவசிக் குங்கமல மலராய்க் கடற்றானை சுற்றுபுடவி,
யண்ணிய பிலம்புக் கழுந்தப் பரந்தநீர்க் காயநற் றாயாய்ப்பல -
      வறங்களுக் குஞ்செவிலி யாய்ப்பொலிந் தச்சமற வபயவர தங்கொடுக்குந்,
தண்ணிய திருக்கைத் தலத்தொளி துளும்பவொரு சப்பாணி கொட்டியருளே
      தண்டமிழ் வளம்பொலி குடந்தைமங் களவல்லி சப்பாணி கொட்டியருளே. (4)
425 மையற் றுறைப்படியு மெங்களை யெடுத்தாள வல்லநின் றிருவடிக்கு -
      வந்தனம் பற்பல புரிந்தன மினஞ்செயவு வந்தன மதான்றுபோற்று,
கையற் றிருக்குமடர் கூட்டத் துறாதுநிற் கருதுநரை யும்பரசுவோங் -
      கங்கையை நினக்கடிமை யென்றுசா தித்தளவில் கலியெடுத் துப்புகலுவோம்,
பையற் றொடுங்குமொரு பாம்பினெம் பொறியறப் பாவைநினை யேகருதுவோம் -
      பாடித்துதித்திடுவ மெங்கட்கு நீயினிப் பண்ணுவது நிற்கவின்றுன்,
றையற் றிருக்கை தலத்தொளி துளும்பவொரு சப்பாணி கொட்டியருளே
      தண்டமிழ் வளம்பொலி குடந்தைமங் களவல்லி சப்பாணி கொட்டியருளே. (5)
வேறு
426 வழிவழி யடிமை யெமைக்கொண் டாளு மறாக்கரு ணைத்திருவே
      மாயா மயகும் பத்து முளைத்தவர் வாமத் தருமையே
கழிமகிழ் சால நினைப்பவ ருள்ளக் கமலத் துறையனமே
      கல்லா மூடர் மதிக்கு மினித்துக் கமழும் பைந்தேனே
பழிதபு மறைமுறை யிடவு மதற்கப் பாலா கியகொடியே
      பனிவரை யாற்று தவத்தின் முளைத்த பசுங்கிளி யேமயிலே
கொழியருள் வடிவுடை மங்கள நாயகி கொட்டுக சப்பாணி
      குடைந்தையுண் மேய மடந்தை பராபரை கொட்டுக சப்பாணி. (6)
427 ஆலம் பொலிதரு கண்டத் தெண்டோ ளாண்டகை யெம்பெருமாற்
      கந்தொழி லும்முடன் மேவி யிருந்தினி தாக முடித்திடுவோய்
ஞாலம் பொலிதரு மாருயி ராய நலங்கெழு பைங்கூழ்க
      ணன்று விழைந்து தழைந்து பொலிந்திட நக்கெழு பசுமுகிலே
சீலம் பொலிதரு செய்கையி னுள்ளத் திருகற் றுருகிடுவார்
      செறிதரு சனனப் பரவை சுவற்றுஞ் செங்கதி ரேயளவாக்
கோலம் பொலிதரு மங்கள நாயகி கொட்டுக சப்பாணி
      குடைந்தையுண் மேய மடந்தை பராபரை கொட்டுக சப்பாணி. (7)
428 கரையில தாகிய பரமா னந்தக் கடல்வரு தெள்ளமுதே 
      கருதிக் கருதி மிகக்குக்ழை வாருட் கழனி யெழுங்கழையே
வரையி னுதித்தொர் மருப்புக் கன்றை யைக்கு மடப்பிடியே
      மாறி லவித்தை யிருட்டற வன்பருண் மாமலை யெழுகதிரே
தரைமுதல் பூத்தரு ணன்று பழுத்துத் தழையும் பொற்கொடியே
      தானே யாகிய தோன்றாத் துணைமகிழ் தக்க பெருந்துணையே
குரைமறை யோலிடு மங்கள நாயகி கொட்டுக சப்பாணி
      குடைந்தையுண் மேய மடந்தை பராபரை கொட்டுக சப்பாணி. (8)
வேறு
429 மடமற நினைபவ ருளமெனு மொருதளி யுற்றவிளக்கேசொன்
      மறைமுடி வினுமுணர் வருமொரு முதல்விய ருட்பெருமைத்தேவி
தடநெடு முடியுயர் பனிவரை யிமயமு யிர்த்தமடப்பாவை
      தளர்வற வளவில்ப லுயிர்களு மெளிதின ளித்ததிறற்கோதை
படவர வமுமதி யமும்வர நதியுமு டித்தசடைத்தேவர்
      படுமத சலவிற லடுகளி றுதவுரி பெற்றபுகழ்த்தூயர்
குடநடு வமர்பவ ரிடமமர் மடமயில் கொட்டுகசப்பாணி
      குவலயம் விழைவன விழைவகை யருள்பரை கொட்டுகசப்பாணி. (85)
430 பொன்பொலி பாத மறந்தலை யாவொரு புக்கில மைத்தறியாப்
      புன்புலை யேமும் விரும்பிடு மாறருள் புத்தமு தப்பாகே
மின்பொலி வேணியர் பங்கமர் வாய்திரு மெய்த்த வருட்பேறே
      வின்பொலி யாவர்க ளுந்தொழ வாழ்வருள் விச்சை யனப்பேடே
தென்பொலி சீதரன் முன்பிற வாதசெ ழித்தசு வைத்தேனே
      திங்களை நேர்முக மங்கதின் மானிகர் செப்புவி ழித்தாயே
கொன்பொலி ஞால மலர்ந்த பராபரை கொட்டுக சப்பாணி
      கொங்களை வார்குழன் மங்கள நாயகி கொட்டுக சப்பாணி. (10)

 

421 வீங்குஞ் சுவைச்செங் கழைச்சிலை குழைத்தளி விராயநா ணம்பொருத்தி -

      விரைமலர்க் கோலைந்து கொண்டொரு மலர்க்கோல் விரைந்துவிட் டவனுடம்பு,

தேங்குந் தழற்குணவு செய்துபண் டைப்படி திருந்தியோ கத்திருந்த -

      செஞ்சடைக் கருமிடற் றுத்தவள நீற்றுத் திருப்பெரும் பரமயோகி,

வாங்குத் திரைக்கடற் புடவிமுத லெத்தலமும் வாழ்வெனும் புணரிமூழ்க -

      வணங்கா முடித்தலை வணங்கிட வணக்குகழை வண்சிலையு மலர்வாளியுந்,

தாங்குந் திருக்கைத் தலத்தொளி துளும்பவொரு சப்பாணி கொட்டியருளே -

      தண்டமிழ் வளம்பொலி குடந்தைமங் களவல்லி சப்பாணி கொட்டியருளே. (1)

 

422 ஆக்குந் தொழிற்றமரு கம்புரக் குந்தொழி லமைந்தவப யஞ்சாம்பரா -

      வழிக்குந் தொழிற்றீ மறைக்குந் தொழிற்றலை யமைந்தூன்று தாண்மறைப்புப்,

போக்குந் தொழிற்குஞ் சிதத்தா ளிவைந்தும் பொலிந்திடச் சுருதிவாழ்த்தப் -

      புன்மையின் றுய்ந்தன மெனச்சகல புவனமும் போற்றெடுத் தேத்தமடமை,

நீக்கும் புலிப்பத முனித்தலைவ னும்பணி நெடுந்தவ முனித்தலைவனு -

      நிறைமகிழ் திளைப்பமா தேவன்மன் றிடைநவி னிருத்தக் கியைந்ததாளந்,

தாக்குந் திருக்கைத் தலத்தொளி துளும்பவொரு சப்பாணி கொட்டியருளே

      தண்டமிழ் வளம்பொலி குடந்தைமங் களவல்லி சப்பாணி கொட்டியருளே. (2)

 

423 ஓங்கிய கொடைத்தலைமை பூண்டமை யிரும்புவன முணரவறி குறியமைந்தாங் -

      குத்தமோத் தமநீர் பொழிந்துதெய் வப்பசுவி னொண்முலையின் விரல்கள்வாய்ந்து,

தூங்கிய மதுப்பொழி மலர்க்கற் பகத்திற் றுறுந்தளிரி னியல்புபூண்டு -

      துங்கமிகு சங்கமும் பதுமமு மிரேகையிற் றோற்றப் புனைந்துகொண்டு,

வீங்கிய கடர்ப்பிழம் பாற்றுணங் கறன்முழுதும் வெய்துவாய்ப் பெய்துதோன்றும் -

      வெய்யோன் சமழ்க்குமணி யாழிகள் புனைந்துமழை மேகமுத லாயபலவுந்,

தாங்கிய திருக்கைத் தலத்தொளி துளும்பவொரு சப்பாணி கொட்டியருளே

      தண்டமிழ் வளம்பொலி குடந்தைமங் களவல்லி சப்பாணி கொட்டியருளே. (3)

 

424 புண்ணிய மலிந்தவ ரகக்கணு முகக்கணும் பொங்குகளி தங்குமாறு -

      பொன்னஞ் சிலம்புபுனை தாமரை யியங்குகாற் புண்டரிக மலரகத்துங்,

கண்ணிய செழுங்கோக நகமல ரகத்துங் கலந்துமர் நலந்தண்மடவார் -

      கைக்கமல மிசைவசிக் குங்கமல மலராய்க் கடற்றானை சுற்றுபுடவி,

யண்ணிய பிலம்புக் கழுந்தப் பரந்தநீர்க் காயநற் றாயாய்ப்பல -

      வறங்களுக் குஞ்செவிலி யாய்ப்பொலிந் தச்சமற வபயவர தங்கொடுக்குந்,

தண்ணிய திருக்கைத் தலத்தொளி துளும்பவொரு சப்பாணி கொட்டியருளே

      தண்டமிழ் வளம்பொலி குடந்தைமங் களவல்லி சப்பாணி கொட்டியருளே. (4)

 

425 மையற் றுறைப்படியு மெங்களை யெடுத்தாள வல்லநின் றிருவடிக்கு -

      வந்தனம் பற்பல புரிந்தன மினஞ்செயவு வந்தன மதான்றுபோற்று,

கையற் றிருக்குமடர் கூட்டத் துறாதுநிற் கருதுநரை யும்பரசுவோங் -

      கங்கையை நினக்கடிமை யென்றுசா தித்தளவில் கலியெடுத் துப்புகலுவோம்,

பையற் றொடுங்குமொரு பாம்பினெம் பொறியறப் பாவைநினை யேகருதுவோம் -

      பாடித்துதித்திடுவ மெங்கட்கு நீயினிப் பண்ணுவது நிற்கவின்றுன்,

றையற் றிருக்கை தலத்தொளி துளும்பவொரு சப்பாணி கொட்டியருளே

      தண்டமிழ் வளம்பொலி குடந்தைமங் களவல்லி சப்பாணி கொட்டியருளே. (5)

 

வேறு

426 வழிவழி யடிமை யெமைக்கொண் டாளு மறாக்கரு ணைத்திருவே

      மாயா மயகும் பத்து முளைத்தவர் வாமத் தருமையே

கழிமகிழ் சால நினைப்பவ ருள்ளக் கமலத் துறையனமே

      கல்லா மூடர் மதிக்கு மினித்துக் கமழும் பைந்தேனே

பழிதபு மறைமுறை யிடவு மதற்கப் பாலா கியகொடியே

      பனிவரை யாற்று தவத்தின் முளைத்த பசுங்கிளி யேமயிலே

கொழியருள் வடிவுடை மங்கள நாயகி கொட்டுக சப்பாணி

      குடைந்தையுண் மேய மடந்தை பராபரை கொட்டுக சப்பாணி. (6)

 

427 ஆலம் பொலிதரு கண்டத் தெண்டோ ளாண்டகை யெம்பெருமாற்

      கந்தொழி லும்முடன் மேவி யிருந்தினி தாக முடித்திடுவோய்

ஞாலம் பொலிதரு மாருயி ராய நலங்கெழு பைங்கூழ்க

      ணன்று விழைந்து தழைந்து பொலிந்திட நக்கெழு பசுமுகிலே

சீலம் பொலிதரு செய்கையி னுள்ளத் திருகற் றுருகிடுவார்

      செறிதரு சனனப் பரவை சுவற்றுஞ் செங்கதி ரேயளவாக்

கோலம் பொலிதரு மங்கள நாயகி கொட்டுக சப்பாணி

      குடைந்தையுண் மேய மடந்தை பராபரை கொட்டுக சப்பாணி. (7)

 

428 கரையில தாகிய பரமா னந்தக் கடல்வரு தெள்ளமுதே 

      கருதிக் கருதி மிகக்குக்ழை வாருட் கழனி யெழுங்கழையே

வரையி னுதித்தொர் மருப்புக் கன்றை யைக்கு மடப்பிடியே

      மாறி லவித்தை யிருட்டற வன்பருண் மாமலை யெழுகதிரே

தரைமுதல் பூத்தரு ணன்று பழுத்துத் தழையும் பொற்கொடியே

      தானே யாகிய தோன்றாத் துணைமகிழ் தக்க பெருந்துணையே

குரைமறை யோலிடு மங்கள நாயகி கொட்டுக சப்பாணி

      குடைந்தையுண் மேய மடந்தை பராபரை கொட்டுக சப்பாணி. (8)

 

வேறு

429 மடமற நினைபவ ருளமெனு மொருதளி யுற்றவிளக்கேசொன்

      மறைமுடி வினுமுணர் வருமொரு முதல்விய ருட்பெருமைத்தேவி

தடநெடு முடியுயர் பனிவரை யிமயமு யிர்த்தமடப்பாவை

      தளர்வற வளவில்ப லுயிர்களு மெளிதின ளித்ததிறற்கோதை

படவர வமுமதி யமும்வர நதியுமு டித்தசடைத்தேவர்

      படுமத சலவிற லடுகளி றுதவுரி பெற்றபுகழ்த்தூயர்

குடநடு வமர்பவ ரிடமமர் மடமயில் கொட்டுகசப்பாணி

      குவலயம் விழைவன விழைவகை யருள்பரை கொட்டுகசப்பாணி. (85)

 

430 பொன்பொலி பாத மறந்தலை யாவொரு புக்கில மைத்தறியாப்

      புன்புலை யேமும் விரும்பிடு மாறருள் புத்தமு தப்பாகே

மின்பொலி வேணியர் பங்கமர் வாய்திரு மெய்த்த வருட்பேறே

      வின்பொலி யாவர்க ளுந்தொழ வாழ்வருள் விச்சை யனப்பேடே

தென்பொலி சீதரன் முன்பிற வாதசெ ழித்தசு வைத்தேனே

      திங்களை நேர்முக மங்கதின் மானிகர் செப்புவி ழித்தாயே

கொன்பொலி ஞால மலர்ந்த பராபரை கொட்டுக சப்பாணி

      கொங்களை வார்குழன் மங்கள நாயகி கொட்டுக சப்பாணி. (10)

 

by Swathi   on 20 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.