பாகிஸ்தானில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட இந்தியரான சரப்ஜித் சிங் நேற்று சக கைதிகளால் பயங்கரமாக தாக்கப்பட்டார். சரப்ஜித் சிங் கடந்த 1990ம் ஆண்டு சட்ட விரோதமாக உளவு பார்க்கும் நோக்கத்துடன் பாகிஸ்தானில் ஊடுருவியாதாக அந்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரை பைசலாபாத், முல்தான், லாகூர் பகுதிகளில் நிகழ்ந்த 4 குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு காரணமானவர் எனக்கூறி பாகிஸ்தான் நீதி மன்றம் அவருக்கு தூக்கு தண்டனை வித்ததது. இந்நிலையில் லாகூரில் காட் லக்பத் சிறையில் தனி அறையில் சரப்ஜித் அடைத்து வைக்கப்பட்டு இருந்தார். நேற்று அதே சிறையில் உள்ள ஐந்து சிறைகைதிகளுக்கும், சரப்ஜித்துக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கனமான பொருட்களால் அவர்கள் சரப்ஜித்தை தாக்கினர். தலையில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக பாகிஸ்தான் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சரப்ஜித் சிங் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரிடம் மத்திய அரசு விவரம் கேட்டுள்ளது.
|