பாகிஸ்தான் சிறையில் தாக்கப்பட்டு மருத்துவ மனையில் உயிருக்கு போரடி வரும் இந்திய தூக்கு தண்டனை கைதி சரப்ஜித்சிங்கை அவரது குடும்பத்தினர் நீரில் பார்த்தனர். பாகிஸ்தானில் கோட் லக்பத் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த இந்தியாவைச் சேர்ந்த தூக்கு தண்டனை கைதி சரப்ஜித்சிங், கடந்த வெள்ளிக்கிழமை அன்று, சக கைதிகளால் கொடூரமாக தாக்கப்பட்டான்.இதில் படுகாயம் அடைந்த அவர், உயிருக்கு ஆபத்தான நிலையில், ஜின்னா ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். சரப்ஜித்சிங்கை பார்ப்பதற்காக, அவருடைய மனைவி சுக்பிரீத் கவுர், மகள்கள் ஸ்வபன்தீப், பூனம் மற்றும் சரப்ஜித்தின் சகோதரி தல்பீர் கவுர் ஆகிய 4 பேர், தரை வழியாக வாகா எல்லையைக் கடந்து நேற்று பாகிஸ்தான் போய்ச் சேர்ந்தனர்.லாகூர் ஜின்னா ஆஸ்பத்திரிக்குச் சென்ற அவர்களுக்கு சரப்ஜித்சிங்கைப் பார்ப்பதற்கு முதலில் அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் 15 நிமிடங்கள் மட்டும் சரப்ஜித்சிங்கைப் பார்க்க அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி, தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு சென்ற அவர்கள் சரப்ஜித்சிங்கை பார்த்தனர். பின்னர் நிருபர்களிடம் பேசிய சரப்ஜித்தின் குடும்பத்தினர் அவருடைய உடல் நிலையில் எந்தவித முன்னேற்றம் இல்லை என தெரிவித்தனர்.
|