LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- ஸ்ரீதேசிகப் பிரபந்தம்

சரமசுலோகச்சுருக்கு

14.1:
கல்லா ரகலுங் கருமமு ஞானமுங் காதலுமற்
றெல்ல நிலைகளுக் கேற்ப விதித்த கிரிசைகளும்
வல்லார் முயல்க வலியிழந் தாரென் றனைத்தொழுகென்
றெல்லாத் தரும முரைத்தவ னின்னடி சேர்ந்தனமே.

14.2:
வெறுமை யுணர்ந்தது முன்னிட்டு வேறங்க மில்லையெனக்
குறியவ னின்னற வெட்டக் குறித்திடுங் கோணைதுறந்
துறுமய னத்திர மென்னப் பொறாநிலை யோர்ந்திடவோ
ரறநெறி யன்றுரைத் தானழி யாவற மாயினனே.

14.3:
வாரிதி விட்டு மலர்மக ளோடு மதுரைவந்து
பாரத வெஞ்சமர் பார்மகள் பாரஞ் செகவுகந்து
சாரதி யாய்முன்பு தூதனு மாய்த்தள ரும்விசயன்
றேரதி னின்றவ னைத்தேற்றி னான்றிற மாயினமே.

14.4:
தன்னரு ளாற்பெறுஞ் சாதனஞ் சாதக னென்றிவற்றைத்
தன்னுட னெண்ணுத னீங்கத் தனித்தொரு சாதனமாய்ப்
பொன்னரு ளோடுமப் பூமக ளோடும் புகழ்நின்ற
வின்னுரை யீசனை யேயேக மெண்ண விசைந்தனமே.

14.5:
ஊனி லிணைத்துழல் விக்கும் வினைக்கட லுள்விழுந்த
யானென தான குணங்க ளெனக்கிசை நல்வழியுந்
தானுத வித்தனைத் தந்திட நின்ற தனித்தரும
நானினி வேறோர் பரநணு காவகை நல்கியதே.

14.6:
கடுவினை நாம்பெறும் பேற்றைத் தகைந்தமை கண்டுநம்
மேற்றொடைவில காம லிசைந்தொரு காலந் துணிவுடனே
யுடைமை யடைக்கல மாக வடைக்கு முகப்பதனா
லடையென வன்றுரைத் தானடை வித்தனன் றன்னடியே.

14.7:
கானென்ற வேதங்கள் காக்கும் பரனென்று காட்டநின்றோன்
றானென் றறிய கிலார்க்கறி விக்குந் தனித்திறலோன்
வானொன்றி னாரொடு மானிட னெனன வவதரிப்பா
னானென்ற நந்திரு மானமை நற்பதஞ் சேர்த்திடுமே.

14.8:
தன்னிலை காட்டித் தனிமை யுகந்து தனித்தகவா
லன்னிலை தீர வடைக்கலங் கொண்டாடி சேர்த்திடவே
பன்னிலை மூல வெழுத்திலும் பாண்டவன் றேர்தனிலு
முன்னிலை கொண்ட பிரானெமை முன்னிலை கொண்டனனே.

14.9:
காடுக ளோநர கோகடி தாங்கர ளத்திரளோ
சூடு வெடாவன லோதொலை யாநிலை நள்ளிருளோ
சாடு படச்சர ணாலன்று சாடிய சாரதியார்
வீடுசெய் வித்து நமைவிடு விக்கின்ற பாவங்களே.

14.10:
சென்றுயர் வானமர்ந் தவ்வடி யாருடன் சேர்ந்திடவே
யின்றெனி லின்றுநா ளையெனி னாளை யினிச்செறிந்து
நின்ற நிலைநின் னனைத்து வினையுநின் விட்டகலக்
கன்றி விடுப்பனென் றாங்கருத் தானமைக் காத்திடுமே.

14.11:
அறிவு மனைத்து மிலாவடி யோமை யடைக்கலங்கொண்
டுறவென நின்ற வெலாமுற வேநின்ற தானெமக்காய்
மறுபிற வித்துயர் வாரா வகைமனங் கொண்டகலா
விறையவ னின்னரு ளாலெங்கள் சோகந் தவிர்த்தனனே.

ஸ்ரீமதே நிகமாந்தமஹாதேசிகாய நம:
சீரார்தூப்புல் திருவேங்கடமுடையான் திருவடிகளே சரணம்.

அடிவரவு: கல்லால், வெறுமை, வாரிதி, தன்னருளால்
ஊனில், கடுவினை, கானென்ற, தன்னிலை, காடுகளோ,
சென்று, அறிவு, கருமமும்.

by Swathi   on 21 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.