விஜய் நடித்த காதலுக்கு மரியாதை என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சரண்யா மோகன். இதன் பின்னர் இவர், யாரடி நீ மோகினி, அ ஆ இ ஈ, பஞ்சாமிர்தம், வெண்ணிலா கபடி குழு, ஈரம் , அழகர்சாமியின் குதிரை, வேலாயுதம், ஒஸ்தி, காதலை தவிர வேறொன்றும் இல்லை ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
கடந்த 2009-ம் ஆண்டு, சுசீந்திரன் இயக்கத்தில், வெளியான வெண்ணிலா கபடிக் குழு இவருக்கு ஒரு நல்ல பெயரை ரசிகர் மனதில் பெற்று தந்தது. இந்நிலையில், இந்த படத்தை பட்லாபூர் பாய்ஸ் என்ற பெயரில் இந்தியில் ரீமேக் செய்துவருகிறார்களாம். இந்த படத்தில் நிஷான் நாயகனாகவும், சரண்யா மோகன் நாயகியாகவும் நடித்துள்ளார்கள். இப்படத்தை ஷைலேஷ் வர்மா இயக்கியுள்ளார். இப்படத்தின் மூலம் சரண்யா மோகன் இந்தியில் அறிமுகமாகவுள்ளார்.
தனது இந்தி படம் குறித்து, சரண்யா மோகன் கூறும்போது, நான் இந்தியில் அறிமுகமாவது சந்தோஷமாக இருக்கிறது. தமிழில் வெளியான ‘வெண்ணிலா கபடிக் குழு’ படத்தின் திரைக்கதையில் சிறு மாற்றம் கூட இல்லாமல் இப்படம் உருவாகியிருக்கிறது. இப்படத்தில் நான் சாதாரண டெல்லி பெண்ணாக நடிக்கிறேன். சில காட்சிகள் மட்டும் சேர்த்திருக்கிறார்கள் என்று கூறினார்.
பட்லாபூர் பாய்ஸ் திரைப்படம் வரும் 7ம் தேதி வெளியாக உள்ளது.
|