|
|||||
அம்மா நடிகைகளில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகை : சரண்யா தான் !! |
|||||
தற்போதைய தமிழ் சினிமாவில் அம்மா நடிகை என்றால் அது சரண்யா தான். கடந்த 1987ல் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்த நாயகன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமான சரண்யா, அதையடுத்து மனசுக்குள் மத்தாப்பு, சீவலப்பேரி பாண்டி, பசும்பொன் உள்பட ஏராளமான படங்களில் கதாநாயகியாக வலம் வந்தார். பிறகு நடிகர் பொன்வண்ணனை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு சில காலம் விலகியிருந்தார். பிறகு சிறுசிறு வேடங்களில் நடித்த சரண்யா, அதனை தொடர்ந்து, ஹீரோக்களுக்கு அம்மாவாக நடிக்கத் தொடங்கினார். அப்படி அவர் நடித்த எம்டன் மகன், களவாணி, முத்துக்கு முத்தாக, நீர்ப்பறவை, ஒரு கல் ஒரு கண்ணாடி, தென்மேற்கு பருவக்காற்று, வேலையில்லா பட்டதாரி போன்ற பல படங்கள் ரசிகர்களின் மத்தியில் சரண்யாவுக்கு ஒரு சிறப்பான இடத்தைப் பெற்றுத்தந்தது. இது மட்டுமல்லாமல், தென்மேற்கு பருவக்காற்று படம் சரண்யாவுக்கு தேசிய விருதை பெற்றுக்கொடுத்தது. பல முன்னாள் கதாநாயகிகள் அம்மா வேடங்களுக்காக போட்டி போட்ட போதும் சரண்யா போன்று அவர்களால் பிரகாசிக்க முடியவில்லை. அதனால் இப்போதைக்கு ஒரே அம்மா நடிகை சரண்யாதான் என்கிற நிலை உருவாகியிருக்கிறது. இதனால் அவரது சம்பளமும் படத்துக்குப்படம் எகிறிக்கொண்டே வருகிறது. தற்போதைய நிலவரப்படி ஒரு படத்துக்கு ரூ. 15 லட்சம் சம்பளம் வாங்குகிறாராம் சரண்யா. தமிழ் சினிமா வரலாற்றில், இதுவரை எந்த அம்மா நடிகையும் இவ்வளவு சம்பளம் வாங்கியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. |
|||||
by Swathi on 06 Sep 2014 0 Comments | |||||
Tags: Saranya Ponvannan Saranya Ponvannan Salary சரண்யா | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|