|
|||||||||
சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் மதுவிலக்கு செயல்திட்டம் -2016 – மதுவிலக்கு ஆண்டு |
|||||||||
2016 – மதுவிலக்கு ஆண்டு
உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள: சட்ட பஞ்சாயத்து இயக்கம் 87545 – 80274 www.sattapanchayat.org sattapanchayat@gmail.com ஜீன் 2014 – மே 2015 செயல்திட்டம்
1. பிரச்சாரம் – மக்கள் கருத்தாக்குதல் கள்ளச்சாராயம் பெருகும், அரசிற்கு வருவாய் குறைந்துவிடும் என்பது போன்ற சொத்தை வாதங்களை உடைத்தெறிந்து மதுவிலக்கை மக்கள் கருத்தாக மாற்றுதல். செயல்பாடுகள்:
2. களப்போராட்டங்கள் ஆங்காங்கே மதுக்கடை மூடப்படும்போது / இடமாற்றம் செய்யப்படும்போது மக்களுக்கு அரசை எதிர்த்துப் போராடி வெற்றிபெறலாம் என்ற நம்பிக்கை அதிகரிக்கும். அடுத்தடுத்த போராட்டங்களில் கலந்து கொள்வர். ஆதரவு தருவார்கள். மதுவால் கணவனை இழந்த பெண்கள், தினந்தோறும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பெண்களை ஒருங்கிணைத்தல். பள்ளி,கல்லூரிகள்,வழிபாட்டுத் தலங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் முக்கியப் பொதுஇடங்களில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள மதுக்கடைகளை கண்டறிந்து அதனை அகற்ற உள்ளூர் மக்களுடன் இணைந்து போராடுதல்; நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தல்
3. நீதிமன்றத்தின் மூலமாக… மதுவிலக்கு குறித்து அரசிற்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான பொதுநல வழக்குகள்; பாதிக்கப்பட்ட பெண்களின் சார்பாக வழக்குகள். சட்ட பஞ்சாயத்து இயக்கம் , 87545-80274 , www.sattapanchayat.org
மதிப்பிற்குரிய சமூக ஆர்வலர்களுக்கு, 16 – 03 - 2014 தனிமனித உடல்நலம், குடும்பப் பொருளாதாரம், குழந்தைகளின் எதிர்காலம், சமூக அமைதி என அத்தனையும் நாசமானாலும் பரவாயில்லை, மதுவிற்பனை மூலம் வரும் வருவாய்தான் முக்கியம் என்கிறது அரசு. மாற்று வழி யோசிக்க எங்களுக்கு நேரமுமில்லை, விருப்பமுமில்லை என்பதுதான் ஆண்ட, ஆள்கிற அரசுகளின் நிலைப்பாடு. இத்தகைய இக்கட்டான தருணத்தில்தான், நாம் இங்கு கூடியுள்ளோம். செயல்திட்டம் குறித்து சிந்திக்க, முடிவெடுக்க, களமிறங்க… நம்மைப் போன்ற சமூக ஆர்வலர்கள் பலர் மதுவிற்கு எதிராகத் தொடர்ந்து போராடி வருகின்றனர். ஆனால், ஒத்த உணர்வுள்ள நம்மிடையே முறையான ஒருங்கிணைப்பு, ஒத்துழைப்பு இல்லாததால் நம் போராட்டங்கள், தமிழகம் தழுவியதொரு மாபெரும் மக்கள் கிளர்ச்சியாக மாற்றமடையவில்லை. அரசும், நம் உணர்வுமிக்க போராட்டங்களை தொடர்ந்து அலட்சியப்படுத்திவருகிறது. ஒருங்கிணைந்து போராடாவிட்டால் இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் மதுவை ஒழிக்க முடியாது என்பதை நீங்கள் அனைவரும் ஏற்றுக்கொள்வீர்கள் என நம்புகிறோம். இந்தப் பின்னணியில், இக்கூட்டம் மூன்று காரணங்களுக்காக நடத்தப்படுகிறது. 2 . சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் மதுஒழிப்பு செயல்திட்டத்தை பகிர்ந்துகொள்ள 3. சமூக ஆர்வலர்கள், ஓய்வுபெற்ற நீதிபதி.சந்துரு அவர்களிடம் “சட்டப்படி மதுக்கடைகளை ஒழிப்பது” என்பது குறித்த பயிற்சி பெற மதுவை ஒழித்து, மக்களைக் காப்பதும் ; இலவசங்களை அள்ளித்தெளிப்பதற்காக, மனசாட்சி இல்லாமல் குடும்பங்களை சீரழிக்கும் ஆட்சியாளர்களின் சுயநலப்போக்கைத் தோலுரிப்பதும்தான் நம் நோக்கம் என்றால் நாம் ,ஒருங்கிணைந்து செயல்படவேண்டும். சிறு, சிறு கருத்து மாறுபாடுகளைப் புறந்தள்ளிவிட்டு, கைகோர்ப்போம் வாருங்கள். நேரெதிர் கொள்கைகள் கொண்டோர் எல்லாம் கூட்டணி அமைத்துக்கொள்ளும்போது, ஒத்த கருத்துள்ள நாம் மட்டும் ஏன் தனித்து செயல்பட வேண்டும்..? “ ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு ; நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே ” |
|||||||||
by Swathi on 17 Mar 2014 9 Comments | |||||||||
Tags: Satta Panchayat Org Satta Panchayat Iyakkam Satta Panchayat Iyakkam Action சட்ட பஞ்சாயத்து இயக்கம் மதுவிலக்கு செயல்திட்டம் மதுவிலக்கு | |||||||||
கருத்துகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|