|
|||||
சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் பொது அறிமுக விழா சென்னையில் வரும் 14 ஆம் தேதி நடைபெறுகிறது !! |
|||||
சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் பொது அறிமுக விழா சென்னையில் வரும் 14 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த விழாவிற்கு திரு சகாயம் IAS அவர்கள் தலைமை தாங்குகிறார்கள். இது குறித்து சட்ட பஞ்சாயத்து இயக்கம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,
தமிழகம் இதுவரை பல்வேறு சமூக இயக்கங்களை கண்டுள்ளது. அரசியலுக்கு அப்பால் சமூகப் பிரச்சினைகளை தீர்க்க, எவ்வித சாதி, மத, கட்சி சார்பில்லாத மக்கள் இயக்கங்கள் தோன்றி பல்வேறு பங்களிப்பை செய்துள்ளது. அதன் தொடர்ச்சியாக டாக்டர். எம்.எஸ். உதயமூர்த்தி அவர்கள் விதைத்த வீரியமான சில விதைகள் மீண்டும் அந்த சமூக மாற்றத்திற்கான பணியை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார்கள். இவர்கள் மக்கள் சக்தி இயக்கத்தில் இருந்து பாடம் கற்றவர்கள். படித்து அமெரிக்காவில் வேலை பார்த்துவிட்டு, வீட்டிற்கு ஒருவர் நாட்டுக்கு ஒருவர் என்ற சிந்தனையில் தன்னை முழுநேர சமூகப் பணிகளில் இணைத்துக்கொண்டு கடந்த 12 ஆண்டுகளுக்கு மேல் களப்பணி செய்துவருபவர்கள். சுயநலம் இல்லாத படித்த இளைஞர்கள் சமூக மாற்றம் செய்தால் எப்படி இருக்கும் என்பதற்கு உதாரணமாகத் திகழ்பவர்கள். தற்போது இருக்கும் கட்டப் பஞ்சாயத்துக்களுக்கு மாற்றாக “சட்ட பஞ்சாயத்து இயக்கம்” என்ற ஒரு சமூக இயக்கத்தை கட்டியமைத்து வரும் டிசம்பர் 14-ல் (14/12/2013) தமிழகத்திற்கு அர்ப்பணிக்கிறார்கள். இவர்களை கவனித்துக் கொண்டிருங்கள்... இவர்கள் செயல்பாடுகள் நீங்கள் எதிர்பார்க்கும் மாற்றமாக இருந்தால் இவர்களுக்கு தோள்கொடுங்கள். வசதி வாய்ப்புகளை புறக்கணித்துவிட்டு தன்னை சமூகத்திற்கு அர்ப்பணிக்கும் இதுபோன்ற முயற்சிகளை நாம் கவனத்தில் கொண்டு அவர்களை தட்டிக்கொடுப்பதும், கரம் கோர்ப்பதும்தான் தமிழகத்தின் வளர்ச்சிக்கு நாம் செய்யும் மிகப்பெரிய பங்களிப்பாகும்.
தமிழகம் வாழ்வதற்கு ஒரு உன்னதமான இடம். வளமாக வாழ்வதற்கு இயற்கையின் ஆசிர்வாதத்தை பெற்ற இடமாக இருந்தும், அறிவு சார்ந்த மக்களாக நாம் இருந்தும், நம் அறிவுக்கும், திறமைக்கும் ஏற்ற இடமாக தமிழத்தை ஏன் இத்தனை ஆண்டுகளாக மாற்றமுடியவில்லை? இன்றைய அவல நிலைகளுக்கு என்னதான் தீர்வு என்று எதிர்பார்ப்பவர்களுக்கு இன்னும் பத்து ஆண்டுகளில் ஒரு நம்பிக்கையான திசையை இந்த அமைப்பினர் வழங்குவார்கள் என்று நம்பலாம்.
இதுவரை மக்களிடம் உள்ள எந்த சமூகப் பிரச்சினைகளுக்கும் இலவச தொலைபேசி சேவை மையம் அமைத்து இயங்கியதில்லை இது ஒரு புது முயற்சி இவர்கள் தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தி மக்களுக்கான தீர்வினை காண முயன்றிருக்கிறார்கள். தமிழகத்தில் உங்களுக்கு எந்த பிரச்சினையானாலும் 7667 100 100 என்ற எண்ணிற்கு அழைத்தால் சட்டப் பஞ்சாயத்து இயக்கம் பிரச்சினைகளுக்கு உரிய சட்டப்படியான தீர்வினை, வழிகாட்டுதலை வழங்கும்...
தமிழகம் இதுவரை பல்வேறு சமூக இயக்கங்களை கண்டுள்ளது. அரசியலுக்கு அப்பால் சமூகப் பிரச்சினைகளை தீர்க்க, எவ்வித சாதி, மத, கட்சி சார்பில்லாத மக்கள் இயக்கங்கள் தோன்றி பல்வேறு பங்களிப்பை செய்துள்ளது. அதன் தொடர்ச்சியாக டாக்டர். எம்.எஸ். உதயமூர்த்தி அவர்கள் விதைத்த வீரியமான சில விதைகள் மீண்டும் அந்த சமூக மாற்றத்திற்கான பணியை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார்கள். இவர்கள் மக்கள் சக்தி இயக்கத்தில் இருந்து பாடம் கற்றவர்கள். படித்து அமெரிக்காவில் வேலை பார்த்துவிட்டு, வீட்டிற்கு ஒருவர் நாட்டுக்கு ஒருவர் என்ற சிந்தனையில் தன்னை முழுநேர சமூகப் பணிகளில் இணைத்துக்கொண்டு கடந்த 12 ஆண்டுகளுக்கு மேல் களப்பணி செய்துவருபவர்கள். சுயநலம் இல்லாத படித்த இளைஞர்கள் சமூக மாற்றம் செய்தால் எப்படி இருக்கும் என்பதற்கு உதாரணமாகத் திகழ்பவர்கள். தற்போது இருக்கும் கட்டப் பஞ்சாயத்துக்களுக்கு மாற்றாக “சட்ட பஞ்சாயத்து இயக்கம்” என்ற ஒரு சமூக இயக்கத்தை கட்டியமைத்து வரும் டிசம்பர் 14-ல் (14/12/2013) தமிழகத்திற்கு அர்ப்பணிக்கிறார்கள். இவர்களை கவனித்துக் கொண்டிருங்கள்... இவர்கள் செயல்பாடுகள் நீங்கள் எதிர்பார்க்கும் மாற்றமாக இருந்தால் இவர்களுக்கு தோள்கொடுங்கள். வசதி வாய்ப்புகளை புறக்கணித்துவிட்டு தன்னை சமூகத்திற்கு அர்ப்பணிக்கும் இதுபோன்ற முயற்சிகளை நாம் கவனத்தில் கொண்டு அவர்களை தட்டிக்கொடுப்பதும், கரம் கோர்ப்பதும்தான் தமிழகத்தின் வளர்ச்சிக்கு நாம் செய்யும் மிகப்பெரிய பங்களிப்பாகும்.
தமிழகம் வாழ்வதற்கு ஒரு உன்னதமான இடம். வளமாக வாழ்வதற்கு இயற்கையின் ஆசிர்வாதத்தை பெற்ற இடமாக இருந்தும், அறிவு சார்ந்த மக்களாக நாம் இருந்தும், நம் அறிவுக்கும், திறமைக்கும் ஏற்ற இடமாக தமிழத்தை ஏன் இத்தனை ஆண்டுகளாக மாற்றமுடியவில்லை? இன்றைய அவல நிலைகளுக்கு என்னதான் தீர்வு என்று எதிர்பார்ப்பவர்களுக்கு இன்னும் பத்து ஆண்டுகளில் ஒரு நம்பிக்கையான திசையை இந்த அமைப்பினர் வழங்குவார்கள் என்று நம்பலாம்.
இதுவரை மக்களிடம் உள்ள எந்த சமூகப் பிரச்சினைகளுக்கும் இலவச தொலைபேசி சேவை மையம் அமைத்து இயங்கியதில்லை இது ஒரு புது முயற்சி இவர்கள் தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தி மக்களுக்கான தீர்வினை காண முயன்றிருக்கிறார்கள். தமிழகத்தில் உங்களுக்கு எந்த பிரச்சினையானாலும் 7667 100 100 என்ற எண்ணிற்கு அழைத்தால் சட்டப் பஞ்சாயத்து இயக்கம் பிரச்சினைகளுக்கு உரிய சட்டப்படியான தீர்வினை, வழிகாட்டுதலை வழங்கும்...
|
|||||
by Swathi on 05 Dec 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|