வெளிநாட்டு தொழிலாளர்கள், சவுதி அரேபியாவில் எட்டு ஆண்டுகளுக்கு மேல் தங்க முடியாத வகையில் சட்டம் கொண்டுவர அந்நாட்டு அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.
கடந்த ஆண்டு சவுதி அரசு 'நிதாகத்' என்ற புதிய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்தியது. இதனால், அங்குள்ள நிறுவனங்களில், வெளிநாடுகளைச் சேர்ந்த, 10 தொழிலாளர்கள் வேலை செய்தால், உள்நாட்டை சேர்ந்த ஒருவருக்கு, வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டது. இந்த நடைமுறையால், ஏராளமான நிறுவனங்கள் மூடப்பட்டன. லட்சக்கணக்கான வெளிநாட்டு தொழிலாளர்கள் வேலை இழந்தனர். இதில், 5 லட்சம் இந்திய தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டனர்.
இதற்கிடையே, பல்வேறு நிறுவனங்களில், தங்கள் நாட்டு மக்களை, அதிக சம்பளத்துக்கு அமர்த்தும் வகையில், சவுதி அரசு புதிய நடைமுறையை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த நடைமுறைப்படி, வெளிநாட்டு தொழிலாளர்கள், எட்டு ஆண்டுகளுக்கு மேல், அந்நாட்டில் தங்கியிருக்க முடியாது. அதுமட்டுமல்லாது, இரண்டு குழந்தைகளுடன் உள்ள, வெளிநாட்டு தம்பதியர், நான்கு ஆண்டுகளுக்கு மேல் தங்கியிருக்க முடியாது. இந்த வகையில், இந்த புதிய சட்ட நடைமுறை விரைவில் அமலாக உள்ளது.
|