|
|||||
சவுதியில் சட்ட விரோதமாக பணியாற்றும் தொழிலாளர்களுக்கு சவூதி அரசு மூன்று மாதம் கெடு ! |
|||||
முறையான ஆவணங்கள் இல்லாமல் பணியாற்றும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு, உரிய ஆவணங்களை பெற சவூதி அரசு மூன்று மாத கால அவகாசம் அளித்துள்ளது. சவூதி அரேபியாவில்
இந்தியர்கள் உட்பட 90 லட்சம் வெளிநாட்டினர் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றுகின்றனர். இவர்களில் உரிய ஆவணங்கள் இல்லாமல், காலாவதியான விசாக்களுடன் தங்கியிருந்த சுமார் இரண்டு
லட்சத்துக்கும் அதிகமான வெளிநாட்டினரை, சவுதி அரசு சமீபத்தில் வெளியேற்றியது. இதனை அடுத்து பல நாட்டு அதிகாரிகளும் சவூதி அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இதன் விளைவாக
உரிய விசா இல்லாமல், தங்கியுள்ள வெளிநாட்டு தொழிலாளர்கள், உரிய ஏற்பாடுகளை செய்து கொள்வதற்கு வசதியாக, மூன்று மாதம் கால அவகாசம் வழங்கி, அந்நாட்டு மன்னர் அப்துல் அஜிஸ்
உத்தர விட்டுள்ளார்."மூன்று மாதம் கழித்தும், உரிய ஆவணங்களை பெறாத தொழிலாளர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும்' என, சவுதி தொழிலாளர் துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
முறையான ஆவணங்கள் இல்லாமல் பணியாற்றும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு, உரிய ஆவணங்களை பெற சவூதி அரசு மூன்று மாத கால அவகாசம் அளித்துள்ளது. சவூதி அரேபியாவில் இந்தியர்கள் உட்பட 90 லட்சம் வெளிநாட்டினர் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றுகின்றனர். இவர்களில் உரிய ஆவணங்கள் இல்லாமல், காலாவதியான விசாக்களுடன் தங்கியிருந்த சுமார் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான வெளிநாட்டினரை, சவுதி அரசு சமீபத்தில் வெளியேற்றியது. இதனை அடுத்து பல நாட்டு அதிகாரிகளும் சவூதி அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இதன் விளைவாக உரிய விசா இல்லாமல், தங்கியுள்ள வெளிநாட்டு தொழிலாளர்கள், உரிய ஏற்பாடுகளை செய்து கொள்வதற்கு வசதியாக, மூன்று மாதம் கால அவகாசம் வழங்கி, அந்நாட்டு மன்னர் அப்துல் அஜிஸ் உத்தர விட்டுள்ளார்."மூன்று மாதம் கழித்தும், உரிய ஆவணங்களை பெறாத தொழிலாளர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும்' என, சவுதி தொழிலாளர் துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
|
|||||
by Swathi on 08 Apr 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|