LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

உச்சநீதி மன்றம் மீண்டும் ஒரு அதிரடி தீர்ப்பு !! 49ஓ பட்டனை வாக்குபதிவு இயந்திரத்தில் சேர்க்க உத்தரவு !!!

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை, நிராகரிக்க வாக்காளர்களுக்கு உரிமை உண்டு என்பதை உறுதிபடுத்தும் விதமாக, '49ஓ' பட்டனை வாக்குப் பதிவு இயந்திரத்தில் பொருத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

பியூசில் என்ற மக்கள் சிவில் உரிமைக் கழகத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிபதி சச்சார் உச்ச நீதிமன்றத்தில், தேர்தலில் யாருக்கும் வாக்களிக்காமல் நிராகரிக்கும் உரிமையும் வாக்காளருக்கு உள்ளது என கோரி பொதுநலன் மனுவை தாக்கல் செய்தார். இம்மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான பெஞ்ச் இன்று விசாரித்து அதிரடித் தீர்ப்பை வழங்கியது. தீர்ப்பு விபரங்கள் பின்வருமாறு,

 

வாக்களிக்க விருப்பமில்லை என்ற எண்ணத்தை பிரதிபலிக்கவும், வேட்பாளரை வேண்டாம் என அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நிராகரிப்பதற்கான வாய்ப்பை வாக்காளர்களுக்கு வழங்க வேண்டும். இதற்கென வாக்குபதிவு இயத்திரத்தில் ஒரு பட்டனை ஏற்படுத்த வேண்டும். யாருக்கும் வாக்களிக்காதவர்கள் எண்ணிக்கையையும், நிராகரிப்போர் எண்ணிக்கையும் வெளியிட வேண்டும். இது ஜனநாயகத்தின் பிரதிபலிப்பின் ஒரு பகுதியாக பார்க்க வேண்டும். 

 

வாக்களிப்பது எவ்வளவு முக்கியம் என அரசு பிரசாரம் செய்வது போல் நிராகரிக்கும் எண்ணத்தை வெளிப்படுத்தவும் பிரச்சாரம் செய்யவேண்டும். இந்த விஷயத்தில் மத்திய அரசு தேர்தல் ஆணையத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இதன் மூலம் அரசியல்வாதிகளுக்கு ஒரு பலமான செய்தியை வாக்காளர்கள் சொல்ல முடியும். 

 

நிராகரிப்பு வசதியால் நேர்மையானவர்களை நிறுத்த கட்சிகளுக்கு நெருக்கடி ஏற்படும், வேட்பாளரை நிராகரிப்பது என்பது குடிமகனின் அடிப்படை உரிமைகளில் ஒன்றும் என்றும் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

by Swathi   on 27 Sep 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.