|
|||||
உச்சநீதி மன்றம் மீண்டும் ஒரு அதிரடி தீர்ப்பு !! 49ஓ பட்டனை வாக்குபதிவு இயந்திரத்தில் சேர்க்க உத்தரவு !!! |
|||||
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை, நிராகரிக்க வாக்காளர்களுக்கு உரிமை உண்டு என்பதை உறுதிபடுத்தும் விதமாக, '49ஓ' பட்டனை வாக்குப் பதிவு இயந்திரத்தில் பொருத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பியூசில் என்ற மக்கள் சிவில் உரிமைக் கழகத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிபதி சச்சார் உச்ச நீதிமன்றத்தில், தேர்தலில் யாருக்கும் வாக்களிக்காமல் நிராகரிக்கும் உரிமையும் வாக்காளருக்கு உள்ளது என கோரி பொதுநலன் மனுவை தாக்கல் செய்தார். இம்மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான பெஞ்ச் இன்று விசாரித்து அதிரடித் தீர்ப்பை வழங்கியது. தீர்ப்பு விபரங்கள் பின்வருமாறு,
வாக்களிக்க விருப்பமில்லை என்ற எண்ணத்தை பிரதிபலிக்கவும், வேட்பாளரை வேண்டாம் என அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நிராகரிப்பதற்கான வாய்ப்பை வாக்காளர்களுக்கு வழங்க வேண்டும். இதற்கென வாக்குபதிவு இயத்திரத்தில் ஒரு பட்டனை ஏற்படுத்த வேண்டும். யாருக்கும் வாக்களிக்காதவர்கள் எண்ணிக்கையையும், நிராகரிப்போர் எண்ணிக்கையும் வெளியிட வேண்டும். இது ஜனநாயகத்தின் பிரதிபலிப்பின் ஒரு பகுதியாக பார்க்க வேண்டும்.
வாக்களிப்பது எவ்வளவு முக்கியம் என அரசு பிரசாரம் செய்வது போல் நிராகரிக்கும் எண்ணத்தை வெளிப்படுத்தவும் பிரச்சாரம் செய்யவேண்டும். இந்த விஷயத்தில் மத்திய அரசு தேர்தல் ஆணையத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இதன் மூலம் அரசியல்வாதிகளுக்கு ஒரு பலமான செய்தியை வாக்காளர்கள் சொல்ல முடியும்.
நிராகரிப்பு வசதியால் நேர்மையானவர்களை நிறுத்த கட்சிகளுக்கு நெருக்கடி ஏற்படும், வேட்பாளரை நிராகரிப்பது என்பது குடிமகனின் அடிப்படை உரிமைகளில் ஒன்றும் என்றும் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. |
|||||
by Swathi on 27 Sep 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|