பொது இடங்களில் தரக்குறைவாக பேசும் அரசியல் தலைவர்களின் கட்சி அங்கீகாரத்தை ரத்து செய்யக்கோரி தன்னார்வ தொண்டு நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது, இதை விசாரித்த நீதிபதி பி.எஸ்.சவுகான் தலைமையில் பெஞ்ச், தரக்குறைவாக பேசும் அரசியல் தலைவர்களின் கட்சி அங்கீகாரத்தை ரத்து செய்து நடவடிக்கை எடுக்க சட்ட ஆணையத்திற்கு உத்தரவிட்டது. மேலும், இதற்கான வழிமுறைகளை உடனடியாக எடுத்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
|