தேர்தலில் வாக்களித்தவுடன், வாக்குப்பதிவை உறுதி செய்யும் ரசீதை வாக்காளர்களுக்கு வழங்க தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்பதற்கு ரசீது வழங்ககோரி, கலைக்கப்பட்ட ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசுவாமி உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தேர்தலில் வாக்குப்பதிவை உறுதி செய்யும் ரசீதை வாக்காளர்களுக்கு வழங்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டனர். மேலும், ரசீதுக்காக தேர்தல் ஆணையத்துக்கு உரிய நிதியை மத்திய அரசு தர வேண்டும் எனவும், ரசீது வழங்குவதை எந்தத் தேர்தலில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை தேர்தல் ஆணையமே முடிவு செய்து கொள்ளலாம் என்றும் நீதிபதிகள் ஆணை பிறப்பித்தனர்.
|