ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள துறைமுகங்களை பள்ளிக் குழந்தைகள் வாரத்தில் ஒரு நாள் இலவசமாக பார்க்க அனுமதிக்கப்படுவார்கள் என மத்திய கப்பல் போக்குவரத்துறை அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோடை விடுமுறை வருவதையொட்டி ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நாடு முழுவதும் துறைமுகத்தை இலவசமாக பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும், வாரத்தில் ஒருமுறை பள்ளிக் குழந்தைகள் துறைமுகத்தை இலவசமாக பார்வையிடலாம் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் இலங்கை கடற்படையினரின் தாக்குதல் மீண்டும் நடக்காமல் இருக்க வரும் 27ஆம் தேதியில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் தீர்வு காணப்படும் என்றும். பொறுப்பை உணர்ந்து செயல்படாமல் சுய விளம்பரத்திற்காக அரவிந்த் கெஜ்ரிவால் நாடகமாடுகிறார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
|