LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

கடும் பனிப்பிரதேசமான அண்டார்டிகாவில் சர்வ தேச அளவில் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி!

கடும் பனிப்பிரதேசமான அண்டார்டிகாவில் சர்வதேச அளவில் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

அண்டார்டிகா, மனிதர்கள் வாழ முடியாத அளவுக்கு கடும் பனி நிறைந்த பிரதேசமாகும். இங்கு சர்வதேச அளவில் ஆராய்ச்சி யாளர்கள் மட்டும் முகாம் அமைத்து தங்கியிருந்து பல்வேறு ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில்  உலகின் பல லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய கால நிலை மாற்றங்களின் ரகசியங்களை அறிய, அண்டார்டிகாவில்  மிக பழமையான பனிக்கட்டிகளைக் கண்டுபிடித்து ஆய்வு  செய்ய தேவையான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ள பரந்து விரிந்த அண்டார்டிகாவில்  குறிப்பிட்ட அளவிலான பகுதியை தேர்ந்தெடுத்து உள்ளனர். இதில் மேற்பரப்பிலிருந்து ஊடுருவி செல்லும்  நவீன ரேடார் கருவி மூலம் பனிக்கட்டிகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. 2.7 கிமீ அளவில்  துளையிட திட்டமிட்டு  பணிகள் செயல்படுத்தப்படுகிறது.

இந்த ஆய்வில் 15 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய பனிக்கட்டிகளைக் கண்டெடுக்கும் நோக்கத்தோடு ஆராய்ச்சியாளர்கள் குழு களமிறங்கி பணியாற்றுகிறது. இந்த ஆராய்ச்சி மூலம் பழங்கால கால நிலைகள் குறித்த ரகசியங்கள் மற்றும் முக்கிய தகவல்களைப் பெற முடியும் என ஆராய்ச்சியளர்கள் நம்புகின்றனர். 

உலகளவில் பனிப்பிரதேசங்களில் மிக வேகமாக பனிக்கட்டிகள் உருகி வருவதால், அதைக் காப்பாற்ற வேண்டிய அவசர நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் இதுபோன்ற ஆராய்ச்சிகளை விஞ்ஞானிகள் தீவிரப்படுத்தி உள்ளனர்.

by   on 15 Apr 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு. 5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு.
உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள். உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள்.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள். சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள்.
சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்? சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்?
சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா. சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா.
நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்! நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!
செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை. செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை.
70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம். 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.