|
||||||||
கடலே ... |
||||||||
கடலே கடலே .... நான் கண்ணைக் கசக்கிய நேரத்திலெல்லாம் ஈரக்காற்றை அனுப்பி என்னை நீ நலம் விசரித்திருக்கிறாய் ... நான் சந்தோசப்பட்ட போதெல்லாம் உயரமாய் அலையடித்து என்னோடு சிரித்து மகிழ்ந்திருக்கிறாய் ... என் நம்பிக்கைகள் தீர்ந்தபோதெல்லாம் தூரத்தே தெரியும் கப்பல் விளக்குகளைக் காட்டிக் காட்டி எனக்குள் நம்பிக்கை ஒளி வளர்த்திருக்கிறாய் ..... உன்னை ஆழமாய் ரசித்தபோது நுரைகளை அனுப்பி வாழ்க்கையின் சூத்திரம் புரிய வைத்திருக்கிறாய் ... உன்னோடுமட்டுமே நான் அதிகமாய் பகிர்ந்து கொண்டிருக்கிறேன் ... அழுது அரற்றியிருக்கிறேன்... உறக்கப் பேசியிருக்கிறேன் ... ஆங்காங்கே ஒன்றிரண்டு மனிதர்களைத்தவிற யாருமில்லாத அந்த இரவு வேளைகளில் நிலவுத் துணையோடு உன் அழகு கண்டு மயங்கிப் கிடந்திருக்கிறேன் ... மொத்தமாய் உன்னோடு நான் வாழ்ந்திருக்கிறேன் ... ஊரிலிருந்து யாரேனும் என்னைப் பார்க்க வந்தால் அழைத்து வந்து என்னை உயிர்ப்பிக்கிற நண்பனென்று உன்னை அறிமுகம் செய்துவைத்திருக்கிறேன் ... எப்போதாவது சோகச் சுமைகளோடு உன்னைக் காண வந்தால் நீ ஓடிவந்து என் கால் நனைத்து என்னை நீ ஆ சுவாசப்படுத்தியிருக்கிறாய் ..... இப்போது பிரிவு வந்து என் கதவு தட்டுகிறது ... நான் விரும்பியோ விரும்பாமலோ என் காரம் பற்றி இழுக்கிறது ... வாழும் பொருட்டும் காலத்தின் பொருட்டும் இந்தப் பிரிவு நிகழ்கிறது ... பிரிகிற நேரத்தில் உனக்கொரு வேண்டுகோள் வைக்கிறேன் என் பிரியமுடியாத் தோழனே .... காலமாற்றத்தில் என்னை நீ மறந்துபோய் விடாதே ... நான் மாறிப்போனாலும் நீ மாறிப்போய் விடாதே ... என் பக்கம் வருகிற காற்றைஎல்லாம் உன்னைபற்றி நலம் விசாரித்து அனுப்பிவைக்கிறேன் பதில் அனுப்ப மறந்துவிடாதே .... - குகன் |
||||||||
by Guhan on 06 Dec 2011 5 Comments | ||||||||
கருத்துகள் | |||||||||||||||||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|