LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    தமிழ்க்கல்வி - Tamil Learning Print Friendly and PDF
- மழலை பாடல்கள்

இந்த குட்டி பாப்பாக்களை பாருங்கள்

கண் விழித்து எழுந்ததும்,

பாந்தமாய் குளித்து வந்ததும்,

காலை உணவை உண்ட பின்,

பள்ளி செல்ல கிளம்புவர்.

கட்டு கட்டாய் புத்தகம்,

பெரிய பெரிய பையிலே,

முதுகில் போட்டு செல்லுவர்.

சுத்தமான உடையிலே,

கண்ணை பறிக்கும் சீருடை,

கருமை நிறம் பளிச்சிடும்,

காலணியை போட்டுத்தான்,

மழலை குரலில் பேசியே,

மகிழ்வாய் பள்ளி செல்வோரே.

பள்ளி முடிந்து வந்த பின்,

முகத்தில் களைப்பு தெரிந்தாலும்,

புன் சிரிப்பு மாறாது,

புத்தக பையை வைக்குமுன்,

அம்மாவை தேடி தேடியே,

கண்கள் மட்டும் அலையுதே,

அம்மா கொடுப்பாள் பாலையே.

அருந்தி விட்டு ஓடுவர்

நண்பர்களை பார்க்கவும்

ஒன்றாய் ஓடி ஆடவும்.

ஆறு மணி ஆனதும்,

அம்மா அழைப்பாள் அவர்களை,

திரும்பி வீடு வந்ததும்

கை கால்களை கழுவியே

படிக்க அமர்வர் பாந்தமாய்.

இரவு மணி எட்டுக்குள்

அப்பா வருவார் வீட்டுக்குள்

படிப்பு முடிந்த இவர்களும்

அப்பாவுடன் அரட்டை அடிப்பரே !

குடும்ப மக்கள் அனைவரும்

ஒன்றாய் உட்கார்ந்து உண்பரே

உறங்க போகு முன்னரே

அவரவர் கடவுளை வணங்கியே

ஆழ்ந்த நித்திரை செய்வரே.

See this childrens
by Dhamotharan.S   on 29 Nov 2016  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பறவைகள் சரணாலயம் பறவைகள் சரணாலயம்
முதன் முதலில் கடலை பார்க்கும் சிறார்கள் முதன் முதலில் கடலை பார்க்கும் சிறார்கள்
உயர பறந்திடுவோம் உயர பறந்திடுவோம்
ஒன்றாய் இருப்போம் ஒற்றுமையுடனே ஒன்றாய் இருப்போம் ஒற்றுமையுடனே
சூரிய அண்ணனின் கோபம் சூரிய அண்ணனின் கோபம்
எப்பொழுது பள்ளி செல்வோம் ? எப்பொழுது பள்ளி செல்வோம் ?
அயலக சூழலில் தமிழ்க்கல்வி -லெட்சுமிபிரியா அயலக சூழலில் தமிழ்க்கல்வி -லெட்சுமிபிரியா
பயணம் செய்தால் பயணம் செய்தால்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.