LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மகுடேசுவரன்

செய்திகளின் நாயகன் யார் ? - கவிஞர் மகுடேசுவரன்

முதலில்
அவன் ஓர் அரசியல்வாதி.
அவனைச் சுற்றி
செய்திகள் தோன்றுகின்றன
அல்லது
செய்திகள்
தன்பெயரில் தோன்றும்படி
அவன் ஆக்குகிறான்.

அடுத்தவன்
ஒரு குற்றவாளி.
அவன்
செய்தியானது
ஒரு தற்செயல்
அல்லது ஒரு தவறு.
முகத்தை மூடிச் செல்வதால்
தண்டனை பெறுவதால்
தன்னைப்பற்றிய செய்தியை
அவன் விரும்பவில்லை என்று
கருதலாம்.

அவன்பின்
திரைப்படக்காரன்.
அவன்
தன் செய்திகளுக்கு
விலை கொடுக்கிறான்.
செய்யும் செய்திகளால்
ஆவது ஒன்றுமில்லை என்பது
தெரியும்போது அவன்
செய்திகளால் கைவிடப்படுகிறான்.

எளிய மக்கள்
செய்தியின் நாயகராவதில்லை.

பேருந்து ஓட்டி விபத்தற்றவனாகத்
தன் நெடும்பணியை நிறைவு செய்வது
செய்தியாவதில்லை.

தற்கொலையின் பின்னுள்ள
மனவீழ்ச்சி
செய்திக்குத் தெரியாது.

வெற்றியை ஈட்டிய
வினைநிரல் செய்திபோல்
சொல்லப்படுவதில்லை.

எதற்காம் இவை ?
யாருக்குத் துணைபோகின்றன ?

ஒன்றுக்கும் உதவாத
படிப்பினை நல்காத
அதே புளித்த செய்திகள்.
நாள்கிழமைகளால் மட்டும் மாறுபடும்
கண்ணாடித் தழைகள்.

ஆக்குவதுமில்லாமல்
அழிப்பதுமில்லாமல்
உணர்வுகள் மரத்துப்போகும்படி
புகட்டப்படும்
வெற்றுச் செய்திகள் !

 

- கவிஞர் மகுடேசுவரன்

by Swathi   on 20 Dec 2014  0 Comments
Tags: செய்திகளின் நாயகன்   அரசியல் கவிதைகள்   அரசியல்வாதி கவிதை   Seithigalin Nayagan   Arasiyal Kavithaigal        
 தொடர்புடையவை-Related Articles
அரசியலில் நுழைவது - கவிஞர் மகுடேசுவரன் அரசியலில் நுழைவது - கவிஞர் மகுடேசுவரன்
செய்திகளின் நாயகன் யார் ? - கவிஞர் மகுடேசுவரன் செய்திகளின் நாயகன் யார் ? - கவிஞர் மகுடேசுவரன்
அரசியல்வாதிகளை அரசியல்வாதிகளை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.