|
|||||
திருக்குறளின் பெருமையை உணர்த்தும் திருக்குறள் வீடு !! |
|||||
இன்றைய காலகட்டத்தில் தமிழர்களாகிய நாம், மேலை நாட்டு கலாச்சாரத்தாலும், ஆங்கில மொழியின் ஆதிகத்தாலும், நம் தாய் மொழியாம் தமிழை மறந்து, நம் மொழியின் கருவூலமாய் விளங்கும் பண்டைய இலக்கியங்களின் ருசி அறியாமல் அவற்றை புறம் தள்ளி வருகிறோம். இந்நிலையில், இன்றைய தலைமுறைக்கெல்லாம் முன்னுதாரணமாக, உலக பொதுமறையாம் திருக்குறளின் உன்னதக்கருத்துகளை மற்றவர்களின் மனதிலும் பதியவைக்கும் வேண்டும் என்று தன் வீட்டின் மதில் சுவரில் வர்ணமாக வடித்திருகிறார் திருக்குறள் நேசிப்பாளர் சிவகங்கை மாவட்டம் செம்பொன்மாரி கிராமத்தை சேர்ந்த முதியவர் முத்து. எத்தனை தமிழர்களுக்கு இது போன்ற வாய்ப்பிருந்தும் அதை செய்கிறார்கள்? மதக் கோட்பாடுகளுக்கு இணங்க வீட்டிற்கு பெயர் வைக்கும், நாம் சாதி மதம் இனம் கடந்து உலகப் பொதுமறையாம் திருக்குறளுக்கு நமது வீட்டில் இடமளித்தோமா ? உலகமே போற்றும் திருவள்ளுவருக்கு ஒரு சிலையாவது நம் வீட்டில் வைத்தோமா ? ஒரு திருக்குறளை வீட்டில் எழுதி வைத்துள்ளோமா ? ஒரு வள்ளுவர் படத்தையாவது வீட்டில் வைத்துள்ளோமா? இப்படி பல கேள்விகளை நம்மை நாமே கேட்க வைத்துள்ளார் இந்த முதியவர் முத்து. அவருக்கு நமது பாராட்டுகளை சொல்வதோடு மட்டுமல்லாமல், நாமும் அவரது வழியை பின்பற்றுவோம் என உறுதி கொள்வோமாக...
நன்றி : லோட்டஸ் செய்திகள் |
|||||
by Swathi on 30 Aug 2014 0 Comments | |||||
Tags: Thirukkural திருக்குறள் திருக்குறள் வீடு Thirukkural Veetu | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|