|
||||||||
செங்கீரைப்பருவம் |
||||||||
401 வானமுத லாயவொரு மூன்றனுக் கும்பொதுவின் மன்னியெ?ளிர் கின்றவபய -
வரததா மரைகணில மட்டுமுற லென்னையென மற்றவை யழுக்கறுக்கு,
மானவது கொளினவைய தன்பயனை யுறுகமல ராளொருகை தாங்குவேமென் -
றகஞ்செருக் கினளச் செருக்கொழிய வனையண்மாற் றவளெனும ணுவகையெய்த,
வீனமக லனையதா மரைபதித் தொருதர ளிருத்தியரு தாளெடுத்தே -
யெழினனி கனிந்தமுக தாமரை மலர்ந்தசைய விருமணிக் குழைவில் வீசத்,
தேனமர் நறுங்குதலை சீர்ப்பமங் களவல்லி செங்கீரை யாடியருளே -
தெய்வக் குடந்தைவளர் சைவச் செழுங்குமரி செங்கீரை யாடியருளே.
(1)
402 முறியனைய நின்கரத் தாமரை சுமக்குமிரு முற்றிழைய ரைச்சுமக்கு -
முளரிக ணினைச்சுமக் கப்பெறுந் தவமின்மை முன்னுபு துயர்க்கண்முழுக,
மறுவிலுயர் பனிவரைச் சாரற் சுனைக்கணினை மாண்பிற் சுமக்கப்பெறும் -
வனவம்பு யம்பொலிவு பெற்றுமீ ளவுநின் மணாளனொடு தாங்கப்பெறு,
மறிவுபெற லின்மையு ணினைந்ததுவு மற்றாக வன்பினெக் குருகுமடியர் -
அமலவிரு தயகோக நகமலர் களிப்புமிக் கடையவதின் மறையந்தமுஞ்,
செறிவரு மணாளரொடு மமருமங் களவல்லி செங்கீரை யாடியருளே -
தெய்வக் குடந்தைவளர் சைவச் செழுங்குமரி செங்கீரை யாடியருளே. (2)
403 பரமன் றிருக்கண்ட நாளமு மிசைச்சென்னி பற்றிய வடிப்பரப்பும் -
பரவுமத னுச்சிப் பொகுட்டுமறு கொடுசூழ் படுஞ்சடைப் பைம்புலிதழு,
முரமன் புயங்கங்கள் பைத்தபை யகவிதழு முவைவா னரம்புநறுநீ -
ரொண்சுவைத் தேனுமொளிர் வெண்பொடித் தாதுமிக் கோங்குகண் மணிவண்டரும்,
வரமன் சிறப்பினொளி ரக்கொண்டு நாடொறும் வயங்குமொரு தாமரைப்பூ -
வண்கரத் தாமரைப் பூக்களொடு மதியொடும் வணங்கமுனி வொழிசிலம்பு,
திரமனிரு தாமரைத் துங்கமங் களவல்லி செங்கீரை யாடியருளே -
தெய்வக் குடந்தைவளர் சைவச் செழுங்குமரி செங்கீரை யாடியருளே. (3)
404 அந்தையுற வந்துவரை பேர்த்தெடுத் தான்சிர மனைத்துநெரி தாமடங்க -
லாருயிர் குடித்தவொரு தாளொரு விரற்றுதியி னானடர்த் திடலுமனையா,
னிந்தைதபு துதிபுரிந் தழுதலு மிரங்கிவடி நெடியவா ளாதிநல்கி -
நீபோ வெனச்செலுத் தியபின்பி ராகவ னிகழ்ச்சியுரை செய்துபோற்ற,
முந்தைவிழை வாலவன் காயவேற் றஞ்செய்த முதல்வர்போ லாதுதிருமுன் -
முற்றுபே ரன்புபுரி சொன்னரோ மற்குவசி முனையவா ளாதிநல்கிச்,
சிந்தைமகி ழச்செய்து மகிழுமங் களவல்லி செங்கீரை யாடியருளே -
தெய்வக் குடந்தைவளர் சைவச் செழுங்குமரி செங்கீரை யாடியருளே. (4)
405 பிருகுமுனி வன்பெரிய முனிவனாய்ப் பின்புநவில் பேச்சுநிலை நிற்கவற்கும் -
பேர்பல வெடுத்தோதி யுருவுபல வற்றையும் பெட்டொருசி லோரிறைஞ்ச,
வருகுதலின் மாதவப்பெருமையான் மாதவ னவாவுமக வாகச்செய்தா -
மவிர்நா மெனுங்கலைக் கோட்டுமுனி காசிபனை யாதியர் செருக்குநீங்கக்,
கருகுதலி லாதபடை கொண்டுபொரு பண்டனெதிர் கைவிரல்கள் சிறிதுவிதிராக் -
கரியமாலுரியவுரு வொருபதும் வெளிப்படக் காட்டிநெடு வான்புரந்து,
திருகுதலிர் பவருளத் தமருமங் களவல்லி செங்கீரை யாடியருளே -
தெய்வக் குடந்தைவளர் சைவச் செழுங்குமரி செங்கீரை யாடியருளே. (5)
வேறு
406 மணிகெழு ப•றலை மாசுண நாளமு மன்னு புறஞ்சூழும்
வாரிப் புறவித ழுந்திகி ரிக்குல மால்வரை யகவிதழுங்
கணிகெழு தோள்வரு ணன்புர வாற்று கடற்சுவை கூர்மதுவுங்
காசினி யாகிய மகரந் தமுமுயிர் கள்ளெனும் வண்டுகளுந்
திணிகெழு பொன்வரை யாய பொகுட்டுஞ் செறிதர வதுசூழுந்
திகழ்வரை யாகிய தாதுவும் வாய்ந்தொளி செய்யுமொர் கோகநக
மணிகெழு தன்மையி னலர வெழுங்கதி ராடுக செங்கீரை
யங்கண் மலர்க்குழன் மங்கள நாயகி யாடுக செங்கீரை. (6)
407 புவிபுகழ் மறையின் சார மெனப்பொலி புண்ணிய வெண்ணீறும்
பூண்பல மணியின் சார மெனப்பலர் போற்றுங் கண்மணியுஞ்
செவிகவர் மந்திர சார மெனப்பொருள் செறியும் பதமைந்துந்
தெள்ளிய மாதவ சார மெனக்கொடு திகழு முதுக்குறையோர்
குவிகைய ராகவெண் ணில்லாத் தீர்த்தக் குலமலி சாரமெனக்
கூறு மகப்புனல் வதிதல சாரக் குடமூக் கிடமாக
வலிரொளி சார விமான மிருப்பவ ளாடுக செங்கீரை
யங்கண் மலர்க்குழன் மங்கள நாயகி யாடுக செங்கீரை. (7)
408 நிலையுய ரெண்ணில்ப லண்ட முயிர்த்து நிலாவுவெ ளோதிமமே
நினைபவர் வினையர வங்கள் விலங்கிட நிகழும் பசுமயிலே
கலைதலில் வஞ்ச ரெனும்புயன் முன்குறு காத கருங்குயிலே
ககன மளாய விலங்க லுதித்தருள் கான்ற செழுங்கிளியே
மலைவற வோர்கழை யோர்கரம் வாங்கி வயங்கு கொழுங்கழையே
மாண்ட குடத்துறை செந்தேன் வாமம் வயங்கு பசுந்தேனே
யலையமு தொடுகலை யமுது மிறைஞ்சமு தாடுக செங்கீரை
யங்கண் மலர்க்குழன் மங்கள நாயகி யாடுக செங்கீரை. (8)
வேறு
409 தருமவெ ளேற்றகன் முதுகமர் வார்க்கிட மேவிய பைங்கோதை
சதுமுக மூர்த்திமு தலியர்ப ராய்த்தொழ வாழுமி ளம்பேதை
கருமமு றாத்தவ வெளியமு நீற்றிட நாளுந லங்கூடுங்
கருணைக டாய்ப்பர சுகவடி வேற்றுகு மாரிம ணங்கூரு
மருமலர் போர்த்திய குழலுடை யாட்டிந றாவொழு குந்தாமம்
வனமென வாக்கிய புயலைமு னாப்புரி பூரணி பொங்கோதை
யருமுறை யாற்புக றுதிமுழு தேற்பவ ளாடுக செங்கீரை
யவிர்குட மூக்கமர் தருமொரு பார்ப்பனி யாடுக செங்கீரை.
(9)
வேறு
410 பொறிவழி நுழைபுல னறமிளிர் பருவணி றைந்தா யன்பாளர்
புகனின சரணென வடைதொறு மினிதுபு ரந்தா ணங்காய்மெய்
யறிமுது தவர்சுவை யமுதென நுகரும றங்கூர் கண்டேசொல்
லமுதமு முதுதிரை யமுதமு முறுகண ணங்கே சங்கோதை
மறிதலில் கடலினு மிகவெழு கருணைம ருந்தே சந்தானம்
வளர்தல முதலிய பலவுமுண் மகிழும டந்தாய் பண்பாடல்
செறிமறை முதனடு விறுதியு நிறைபவள் செங்கோ செங்கீரை
திடநவில் குடமுத லிடமமர் மடமயில் செங்கோ செங்கீரை.
(10)
401 வானமுத லாயவொரு மூன்றனுக் கும்பொதுவின் மன்னியெ?ளிர் கின்றவபய - வரததா மரைகணில மட்டுமுற லென்னையென மற்றவை யழுக்கறுக்கு, மானவது கொளினவைய தன்பயனை யுறுகமல ராளொருகை தாங்குவேமென் - றகஞ்செருக் கினளச் செருக்கொழிய வனையண்மாற் றவளெனும ணுவகையெய்த, வீனமக லனையதா மரைபதித் தொருதர ளிருத்தியரு தாளெடுத்தே - யெழினனி கனிந்தமுக தாமரை மலர்ந்தசைய விருமணிக் குழைவில் வீசத், தேனமர் நறுங்குதலை சீர்ப்பமங் களவல்லி செங்கீரை யாடியருளே - தெய்வக் குடந்தைவளர் சைவச் செழுங்குமரி செங்கீரை யாடியருளே. (1)
402 முறியனைய நின்கரத் தாமரை சுமக்குமிரு முற்றிழைய ரைச்சுமக்கு - முளரிக ணினைச்சுமக் கப்பெறுந் தவமின்மை முன்னுபு துயர்க்கண்முழுக, மறுவிலுயர் பனிவரைச் சாரற் சுனைக்கணினை மாண்பிற் சுமக்கப்பெறும் - வனவம்பு யம்பொலிவு பெற்றுமீ ளவுநின் மணாளனொடு தாங்கப்பெறு, மறிவுபெற லின்மையு ணினைந்ததுவு மற்றாக வன்பினெக் குருகுமடியர் - அமலவிரு தயகோக நகமலர் களிப்புமிக் கடையவதின் மறையந்தமுஞ், செறிவரு மணாளரொடு மமருமங் களவல்லி செங்கீரை யாடியருளே - தெய்வக் குடந்தைவளர் சைவச் செழுங்குமரி செங்கீரை யாடியருளே. (2)
403 பரமன் றிருக்கண்ட நாளமு மிசைச்சென்னி பற்றிய வடிப்பரப்பும் - பரவுமத னுச்சிப் பொகுட்டுமறு கொடுசூழ் படுஞ்சடைப் பைம்புலிதழு, முரமன் புயங்கங்கள் பைத்தபை யகவிதழு முவைவா னரம்புநறுநீ - ரொண்சுவைத் தேனுமொளிர் வெண்பொடித் தாதுமிக் கோங்குகண் மணிவண்டரும், வரமன் சிறப்பினொளி ரக்கொண்டு நாடொறும் வயங்குமொரு தாமரைப்பூ - வண்கரத் தாமரைப் பூக்களொடு மதியொடும் வணங்கமுனி வொழிசிலம்பு, திரமனிரு தாமரைத் துங்கமங் களவல்லி செங்கீரை யாடியருளே - தெய்வக் குடந்தைவளர் சைவச் செழுங்குமரி செங்கீரை யாடியருளே. (3)
404 அந்தையுற வந்துவரை பேர்த்தெடுத் தான்சிர மனைத்துநெரி தாமடங்க - லாருயிர் குடித்தவொரு தாளொரு விரற்றுதியி னானடர்த் திடலுமனையா, னிந்தைதபு துதிபுரிந் தழுதலு மிரங்கிவடி நெடியவா ளாதிநல்கி - நீபோ வெனச்செலுத் தியபின்பி ராகவ னிகழ்ச்சியுரை செய்துபோற்ற, முந்தைவிழை வாலவன் காயவேற் றஞ்செய்த முதல்வர்போ லாதுதிருமுன் - முற்றுபே ரன்புபுரி சொன்னரோ மற்குவசி முனையவா ளாதிநல்கிச், சிந்தைமகி ழச்செய்து மகிழுமங் களவல்லி செங்கீரை யாடியருளே - தெய்வக் குடந்தைவளர் சைவச் செழுங்குமரி செங்கீரை யாடியருளே. (4)
405 பிருகுமுனி வன்பெரிய முனிவனாய்ப் பின்புநவில் பேச்சுநிலை நிற்கவற்கும் - பேர்பல வெடுத்தோதி யுருவுபல வற்றையும் பெட்டொருசி லோரிறைஞ்ச, வருகுதலின் மாதவப்பெருமையான் மாதவ னவாவுமக வாகச்செய்தா - மவிர்நா மெனுங்கலைக் கோட்டுமுனி காசிபனை யாதியர் செருக்குநீங்கக், கருகுதலி லாதபடை கொண்டுபொரு பண்டனெதிர் கைவிரல்கள் சிறிதுவிதிராக் - கரியமாலுரியவுரு வொருபதும் வெளிப்படக் காட்டிநெடு வான்புரந்து, திருகுதலிர் பவருளத் தமருமங் களவல்லி செங்கீரை யாடியருளே - தெய்வக் குடந்தைவளர் சைவச் செழுங்குமரி செங்கீரை யாடியருளே. (5)
வேறு 406 மணிகெழு ப•றலை மாசுண நாளமு மன்னு புறஞ்சூழும் வாரிப் புறவித ழுந்திகி ரிக்குல மால்வரை யகவிதழுங் கணிகெழு தோள்வரு ணன்புர வாற்று கடற்சுவை கூர்மதுவுங் காசினி யாகிய மகரந் தமுமுயிர் கள்ளெனும் வண்டுகளுந் திணிகெழு பொன்வரை யாய பொகுட்டுஞ் செறிதர வதுசூழுந் திகழ்வரை யாகிய தாதுவும் வாய்ந்தொளி செய்யுமொர் கோகநக மணிகெழு தன்மையி னலர வெழுங்கதி ராடுக செங்கீரை யங்கண் மலர்க்குழன் மங்கள நாயகி யாடுக செங்கீரை. (6)
407 புவிபுகழ் மறையின் சார மெனப்பொலி புண்ணிய வெண்ணீறும் பூண்பல மணியின் சார மெனப்பலர் போற்றுங் கண்மணியுஞ் செவிகவர் மந்திர சார மெனப்பொருள் செறியும் பதமைந்துந் தெள்ளிய மாதவ சார மெனக்கொடு திகழு முதுக்குறையோர் குவிகைய ராகவெண் ணில்லாத் தீர்த்தக் குலமலி சாரமெனக் கூறு மகப்புனல் வதிதல சாரக் குடமூக் கிடமாக வலிரொளி சார விமான மிருப்பவ ளாடுக செங்கீரை யங்கண் மலர்க்குழன் மங்கள நாயகி யாடுக செங்கீரை. (7)
408 நிலையுய ரெண்ணில்ப லண்ட முயிர்த்து நிலாவுவெ ளோதிமமே நினைபவர் வினையர வங்கள் விலங்கிட நிகழும் பசுமயிலே கலைதலில் வஞ்ச ரெனும்புயன் முன்குறு காத கருங்குயிலே ககன மளாய விலங்க லுதித்தருள் கான்ற செழுங்கிளியே மலைவற வோர்கழை யோர்கரம் வாங்கி வயங்கு கொழுங்கழையே மாண்ட குடத்துறை செந்தேன் வாமம் வயங்கு பசுந்தேனே யலையமு தொடுகலை யமுது மிறைஞ்சமு தாடுக செங்கீரை யங்கண் மலர்க்குழன் மங்கள நாயகி யாடுக செங்கீரை. (8)
வேறு 409 தருமவெ ளேற்றகன் முதுகமர் வார்க்கிட மேவிய பைங்கோதை சதுமுக மூர்த்திமு தலியர்ப ராய்த்தொழ வாழுமி ளம்பேதை கருமமு றாத்தவ வெளியமு நீற்றிட நாளுந லங்கூடுங் கருணைக டாய்ப்பர சுகவடி வேற்றுகு மாரிம ணங்கூரு மருமலர் போர்த்திய குழலுடை யாட்டிந றாவொழு குந்தாமம் வனமென வாக்கிய புயலைமு னாப்புரி பூரணி பொங்கோதை யருமுறை யாற்புக றுதிமுழு தேற்பவ ளாடுக செங்கீரை யவிர்குட மூக்கமர் தருமொரு பார்ப்பனி யாடுக செங்கீரை. (9)
வேறு 410 பொறிவழி நுழைபுல னறமிளிர் பருவணி றைந்தா யன்பாளர் புகனின சரணென வடைதொறு மினிதுபு ரந்தா ணங்காய்மெய் யறிமுது தவர்சுவை யமுதென நுகரும றங்கூர் கண்டேசொல் லமுதமு முதுதிரை யமுதமு முறுகண ணங்கே சங்கோதை மறிதலில் கடலினு மிகவெழு கருணைம ருந்தே சந்தானம் வளர்தல முதலிய பலவுமுண் மகிழும டந்தாய் பண்பாடல் செறிமறை முதனடு விறுதியு நிறைபவள் செங்கோ செங்கீரை திடநவில் குடமுத லிடமமர் மடமயில் செங்கோ செங்கீரை. (10)
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|