LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ்

செங்கீரைப்பருவம்

 

401 வானமுத லாயவொரு மூன்றனுக் கும்பொதுவின் மன்னியெ?ளிர் கின்றவபய - 
      வரததா மரைகணில மட்டுமுற லென்னையென மற்றவை யழுக்கறுக்கு, 
மானவது கொளினவைய தன்பயனை யுறுகமல ராளொருகை தாங்குவேமென் - 
      றகஞ்செருக் கினளச் செருக்கொழிய வனையண்மாற் றவளெனும ணுவகையெய்த, 
வீனமக லனையதா மரைபதித் தொருதர ளிருத்தியரு தாளெடுத்தே - 
      யெழினனி கனிந்தமுக தாமரை மலர்ந்தசைய விருமணிக் குழைவில் வீசத், 
தேனமர் நறுங்குதலை சீர்ப்பமங் களவல்லி செங்கீரை யாடியருளே - 
      தெய்வக் குடந்தைவளர் சைவச் செழுங்குமரி செங்கீரை யாடியருளே. 
(1)
402 முறியனைய நின்கரத் தாமரை சுமக்குமிரு முற்றிழைய ரைச்சுமக்கு -
      முளரிக ணினைச்சுமக் கப்பெறுந் தவமின்மை முன்னுபு துயர்க்கண்முழுக,
மறுவிலுயர் பனிவரைச் சாரற் சுனைக்கணினை மாண்பிற் சுமக்கப்பெறும் -
      வனவம்பு யம்பொலிவு பெற்றுமீ ளவுநின் மணாளனொடு தாங்கப்பெறு,
மறிவுபெற லின்மையு ணினைந்ததுவு மற்றாக வன்பினெக் குருகுமடியர் -
      அமலவிரு தயகோக நகமலர் களிப்புமிக் கடையவதின் மறையந்தமுஞ்,
செறிவரு மணாளரொடு மமருமங் களவல்லி செங்கீரை யாடியருளே -
      தெய்வக் குடந்தைவளர் சைவச் செழுங்குமரி செங்கீரை யாடியருளே. (2)
403 பரமன் றிருக்கண்ட நாளமு மிசைச்சென்னி பற்றிய வடிப்பரப்பும் -
      பரவுமத னுச்சிப் பொகுட்டுமறு கொடுசூழ் படுஞ்சடைப் பைம்புலிதழு,
முரமன் புயங்கங்கள் பைத்தபை யகவிதழு முவைவா னரம்புநறுநீ -
      ரொண்சுவைத் தேனுமொளிர் வெண்பொடித் தாதுமிக் கோங்குகண் மணிவண்டரும்,
வரமன் சிறப்பினொளி ரக்கொண்டு நாடொறும் வயங்குமொரு தாமரைப்பூ -
      வண்கரத் தாமரைப் பூக்களொடு மதியொடும் வணங்கமுனி வொழிசிலம்பு,
திரமனிரு தாமரைத் துங்கமங் களவல்லி செங்கீரை யாடியருளே -
      தெய்வக் குடந்தைவளர் சைவச் செழுங்குமரி செங்கீரை யாடியருளே. (3)
404 அந்தையுற வந்துவரை பேர்த்தெடுத் தான்சிர மனைத்துநெரி தாமடங்க -
      லாருயிர் குடித்தவொரு தாளொரு விரற்றுதியி னானடர்த் திடலுமனையா,
னிந்தைதபு துதிபுரிந் தழுதலு மிரங்கிவடி நெடியவா ளாதிநல்கி -
      நீபோ வெனச்செலுத் தியபின்பி ராகவ னிகழ்ச்சியுரை செய்துபோற்ற,
முந்தைவிழை வாலவன் காயவேற் றஞ்செய்த முதல்வர்போ லாதுதிருமுன் - 
      முற்றுபே ரன்புபுரி சொன்னரோ மற்குவசி முனையவா ளாதிநல்கிச்,
சிந்தைமகி ழச்செய்து மகிழுமங் களவல்லி செங்கீரை யாடியருளே -
      தெய்வக் குடந்தைவளர் சைவச் செழுங்குமரி செங்கீரை யாடியருளே. (4)
405 பிருகுமுனி வன்பெரிய முனிவனாய்ப் பின்புநவில் பேச்சுநிலை நிற்கவற்கும் -
      பேர்பல வெடுத்தோதி யுருவுபல வற்றையும் பெட்டொருசி லோரிறைஞ்ச,
வருகுதலின் மாதவப்பெருமையான் மாதவ னவாவுமக வாகச்செய்தா -
      மவிர்நா மெனுங்கலைக் கோட்டுமுனி காசிபனை யாதியர் செருக்குநீங்கக்,
கருகுதலி லாதபடை கொண்டுபொரு பண்டனெதிர் கைவிரல்கள் சிறிதுவிதிராக் -
      கரியமாலுரியவுரு வொருபதும் வெளிப்படக் காட்டிநெடு வான்புரந்து,
திருகுதலிர் பவருளத் தமருமங் களவல்லி செங்கீரை யாடியருளே -
      தெய்வக் குடந்தைவளர் சைவச் செழுங்குமரி செங்கீரை யாடியருளே. (5)
வேறு
406 மணிகெழு ப•றலை மாசுண நாளமு மன்னு புறஞ்சூழும்
      வாரிப் புறவித ழுந்திகி ரிக்குல மால்வரை யகவிதழுங்
கணிகெழு தோள்வரு ணன்புர வாற்று கடற்சுவை கூர்மதுவுங்
      காசினி யாகிய மகரந் தமுமுயிர் கள்ளெனும் வண்டுகளுந்
திணிகெழு பொன்வரை யாய பொகுட்டுஞ் செறிதர வதுசூழுந்
      திகழ்வரை யாகிய தாதுவும் வாய்ந்தொளி செய்யுமொர் கோகநக
மணிகெழு தன்மையி னலர வெழுங்கதி ராடுக செங்கீரை
      யங்கண் மலர்க்குழன் மங்கள நாயகி யாடுக செங்கீரை. (6)
407 புவிபுகழ் மறையின் சார மெனப்பொலி புண்ணிய வெண்ணீறும்
      பூண்பல மணியின் சார மெனப்பலர் போற்றுங் கண்மணியுஞ்
செவிகவர் மந்திர சார மெனப்பொருள் செறியும் பதமைந்துந்
      தெள்ளிய மாதவ சார மெனக்கொடு திகழு முதுக்குறையோர்
குவிகைய ராகவெண் ணில்லாத் தீர்த்தக் குலமலி சாரமெனக்
      கூறு மகப்புனல் வதிதல சாரக் குடமூக் கிடமாக
வலிரொளி சார விமான மிருப்பவ ளாடுக செங்கீரை
      யங்கண் மலர்க்குழன் மங்கள நாயகி யாடுக செங்கீரை. (7)
408 நிலையுய ரெண்ணில்ப லண்ட முயிர்த்து நிலாவுவெ ளோதிமமே
      நினைபவர் வினையர வங்கள் விலங்கிட நிகழும் பசுமயிலே
கலைதலில் வஞ்ச ரெனும்புயன் முன்குறு காத கருங்குயிலே
      ககன மளாய விலங்க லுதித்தருள் கான்ற செழுங்கிளியே
மலைவற வோர்கழை யோர்கரம் வாங்கி வயங்கு கொழுங்கழையே
      மாண்ட குடத்துறை செந்தேன் வாமம் வயங்கு பசுந்தேனே
யலையமு தொடுகலை யமுது மிறைஞ்சமு தாடுக செங்கீரை
      யங்கண் மலர்க்குழன் மங்கள நாயகி யாடுக செங்கீரை. (8)
வேறு
409 தருமவெ ளேற்றகன் முதுகமர் வார்க்கிட மேவிய பைங்கோதை
      சதுமுக மூர்த்திமு தலியர்ப ராய்த்தொழ வாழுமி ளம்பேதை
கருமமு றாத்தவ வெளியமு நீற்றிட நாளுந லங்கூடுங்
      கருணைக டாய்ப்பர சுகவடி வேற்றுகு மாரிம ணங்கூரு
மருமலர் போர்த்திய குழலுடை யாட்டிந றாவொழு குந்தாமம்
      வனமென வாக்கிய புயலைமு னாப்புரி பூரணி பொங்கோதை
யருமுறை யாற்புக றுதிமுழு தேற்பவ ளாடுக செங்கீரை
      யவிர்குட மூக்கமர் தருமொரு பார்ப்பனி யாடுக செங்கீரை. 
(9)
வேறு
410 பொறிவழி நுழைபுல னறமிளிர் பருவணி றைந்தா யன்பாளர்
      புகனின சரணென வடைதொறு மினிதுபு ரந்தா ணங்காய்மெய்
யறிமுது தவர்சுவை யமுதென நுகரும றங்கூர் கண்டேசொல்
      லமுதமு முதுதிரை யமுதமு முறுகண ணங்கே சங்கோதை
மறிதலில் கடலினு மிகவெழு கருணைம ருந்தே சந்தானம்
      வளர்தல முதலிய பலவுமுண் மகிழும டந்தாய் பண்பாடல்
செறிமறை முதனடு விறுதியு நிறைபவள் செங்கோ செங்கீரை
      திடநவில் குடமுத லிடமமர் மடமயில் செங்கோ செங்கீரை. 
(10)

 

401 வானமுத லாயவொரு மூன்றனுக் கும்பொதுவின் மன்னியெ?ளிர் கின்றவபய - 

      வரததா மரைகணில மட்டுமுற லென்னையென மற்றவை யழுக்கறுக்கு, 

மானவது கொளினவைய தன்பயனை யுறுகமல ராளொருகை தாங்குவேமென் - 

      றகஞ்செருக் கினளச் செருக்கொழிய வனையண்மாற் றவளெனும ணுவகையெய்த, 

வீனமக லனையதா மரைபதித் தொருதர ளிருத்தியரு தாளெடுத்தே - 

      யெழினனி கனிந்தமுக தாமரை மலர்ந்தசைய விருமணிக் குழைவில் வீசத், 

தேனமர் நறுங்குதலை சீர்ப்பமங் களவல்லி செங்கீரை யாடியருளே - 

      தெய்வக் குடந்தைவளர் சைவச் செழுங்குமரி செங்கீரை யாடியருளே. 

(1)

 

402 முறியனைய நின்கரத் தாமரை சுமக்குமிரு முற்றிழைய ரைச்சுமக்கு -

      முளரிக ணினைச்சுமக் கப்பெறுந் தவமின்மை முன்னுபு துயர்க்கண்முழுக,

மறுவிலுயர் பனிவரைச் சாரற் சுனைக்கணினை மாண்பிற் சுமக்கப்பெறும் -

      வனவம்பு யம்பொலிவு பெற்றுமீ ளவுநின் மணாளனொடு தாங்கப்பெறு,

மறிவுபெற லின்மையு ணினைந்ததுவு மற்றாக வன்பினெக் குருகுமடியர் -

      அமலவிரு தயகோக நகமலர் களிப்புமிக் கடையவதின் மறையந்தமுஞ்,

செறிவரு மணாளரொடு மமருமங் களவல்லி செங்கீரை யாடியருளே -

      தெய்வக் குடந்தைவளர் சைவச் செழுங்குமரி செங்கீரை யாடியருளே. (2)

 

403 பரமன் றிருக்கண்ட நாளமு மிசைச்சென்னி பற்றிய வடிப்பரப்பும் -

      பரவுமத னுச்சிப் பொகுட்டுமறு கொடுசூழ் படுஞ்சடைப் பைம்புலிதழு,

முரமன் புயங்கங்கள் பைத்தபை யகவிதழு முவைவா னரம்புநறுநீ -

      ரொண்சுவைத் தேனுமொளிர் வெண்பொடித் தாதுமிக் கோங்குகண் மணிவண்டரும்,

வரமன் சிறப்பினொளி ரக்கொண்டு நாடொறும் வயங்குமொரு தாமரைப்பூ -

      வண்கரத் தாமரைப் பூக்களொடு மதியொடும் வணங்கமுனி வொழிசிலம்பு,

திரமனிரு தாமரைத் துங்கமங் களவல்லி செங்கீரை யாடியருளே -

      தெய்வக் குடந்தைவளர் சைவச் செழுங்குமரி செங்கீரை யாடியருளே. (3)

 

404 அந்தையுற வந்துவரை பேர்த்தெடுத் தான்சிர மனைத்துநெரி தாமடங்க -

      லாருயிர் குடித்தவொரு தாளொரு விரற்றுதியி னானடர்த் திடலுமனையா,

னிந்தைதபு துதிபுரிந் தழுதலு மிரங்கிவடி நெடியவா ளாதிநல்கி -

      நீபோ வெனச்செலுத் தியபின்பி ராகவ னிகழ்ச்சியுரை செய்துபோற்ற,

முந்தைவிழை வாலவன் காயவேற் றஞ்செய்த முதல்வர்போ லாதுதிருமுன் - 

      முற்றுபே ரன்புபுரி சொன்னரோ மற்குவசி முனையவா ளாதிநல்கிச்,

சிந்தைமகி ழச்செய்து மகிழுமங் களவல்லி செங்கீரை யாடியருளே -

      தெய்வக் குடந்தைவளர் சைவச் செழுங்குமரி செங்கீரை யாடியருளே. (4)

 

405 பிருகுமுனி வன்பெரிய முனிவனாய்ப் பின்புநவில் பேச்சுநிலை நிற்கவற்கும் -

      பேர்பல வெடுத்தோதி யுருவுபல வற்றையும் பெட்டொருசி லோரிறைஞ்ச,

வருகுதலின் மாதவப்பெருமையான் மாதவ னவாவுமக வாகச்செய்தா -

      மவிர்நா மெனுங்கலைக் கோட்டுமுனி காசிபனை யாதியர் செருக்குநீங்கக்,

கருகுதலி லாதபடை கொண்டுபொரு பண்டனெதிர் கைவிரல்கள் சிறிதுவிதிராக் -

      கரியமாலுரியவுரு வொருபதும் வெளிப்படக் காட்டிநெடு வான்புரந்து,

திருகுதலிர் பவருளத் தமருமங் களவல்லி செங்கீரை யாடியருளே -

      தெய்வக் குடந்தைவளர் சைவச் செழுங்குமரி செங்கீரை யாடியருளே. (5)

 

வேறு

406 மணிகெழு ப•றலை மாசுண நாளமு மன்னு புறஞ்சூழும்

      வாரிப் புறவித ழுந்திகி ரிக்குல மால்வரை யகவிதழுங்

கணிகெழு தோள்வரு ணன்புர வாற்று கடற்சுவை கூர்மதுவுங்

      காசினி யாகிய மகரந் தமுமுயிர் கள்ளெனும் வண்டுகளுந்

திணிகெழு பொன்வரை யாய பொகுட்டுஞ் செறிதர வதுசூழுந்

      திகழ்வரை யாகிய தாதுவும் வாய்ந்தொளி செய்யுமொர் கோகநக

மணிகெழு தன்மையி னலர வெழுங்கதி ராடுக செங்கீரை

      யங்கண் மலர்க்குழன் மங்கள நாயகி யாடுக செங்கீரை. (6)

 

407 புவிபுகழ் மறையின் சார மெனப்பொலி புண்ணிய வெண்ணீறும்

      பூண்பல மணியின் சார மெனப்பலர் போற்றுங் கண்மணியுஞ்

செவிகவர் மந்திர சார மெனப்பொருள் செறியும் பதமைந்துந்

      தெள்ளிய மாதவ சார மெனக்கொடு திகழு முதுக்குறையோர்

குவிகைய ராகவெண் ணில்லாத் தீர்த்தக் குலமலி சாரமெனக்

      கூறு மகப்புனல் வதிதல சாரக் குடமூக் கிடமாக

வலிரொளி சார விமான மிருப்பவ ளாடுக செங்கீரை

      யங்கண் மலர்க்குழன் மங்கள நாயகி யாடுக செங்கீரை. (7)

 

408 நிலையுய ரெண்ணில்ப லண்ட முயிர்த்து நிலாவுவெ ளோதிமமே

      நினைபவர் வினையர வங்கள் விலங்கிட நிகழும் பசுமயிலே

கலைதலில் வஞ்ச ரெனும்புயன் முன்குறு காத கருங்குயிலே

      ககன மளாய விலங்க லுதித்தருள் கான்ற செழுங்கிளியே

மலைவற வோர்கழை யோர்கரம் வாங்கி வயங்கு கொழுங்கழையே

      மாண்ட குடத்துறை செந்தேன் வாமம் வயங்கு பசுந்தேனே

யலையமு தொடுகலை யமுது மிறைஞ்சமு தாடுக செங்கீரை

      யங்கண் மலர்க்குழன் மங்கள நாயகி யாடுக செங்கீரை. (8)

 

வேறு

409 தருமவெ ளேற்றகன் முதுகமர் வார்க்கிட மேவிய பைங்கோதை

      சதுமுக மூர்த்திமு தலியர்ப ராய்த்தொழ வாழுமி ளம்பேதை

கருமமு றாத்தவ வெளியமு நீற்றிட நாளுந லங்கூடுங்

      கருணைக டாய்ப்பர சுகவடி வேற்றுகு மாரிம ணங்கூரு

மருமலர் போர்த்திய குழலுடை யாட்டிந றாவொழு குந்தாமம்

      வனமென வாக்கிய புயலைமு னாப்புரி பூரணி பொங்கோதை

யருமுறை யாற்புக றுதிமுழு தேற்பவ ளாடுக செங்கீரை

      யவிர்குட மூக்கமர் தருமொரு பார்ப்பனி யாடுக செங்கீரை. 

(9)

 

வேறு

410 பொறிவழி நுழைபுல னறமிளிர் பருவணி றைந்தா யன்பாளர்

      புகனின சரணென வடைதொறு மினிதுபு ரந்தா ணங்காய்மெய்

யறிமுது தவர்சுவை யமுதென நுகரும றங்கூர் கண்டேசொல்

      லமுதமு முதுதிரை யமுதமு முறுகண ணங்கே சங்கோதை

மறிதலில் கடலினு மிகவெழு கருணைம ருந்தே சந்தானம்

      வளர்தல முதலிய பலவுமுண் மகிழும டந்தாய் பண்பாடல்

செறிமறை முதனடு விறுதியு நிறைபவள் செங்கோ செங்கீரை

      திடநவில் குடமுத லிடமமர் மடமயில் செங்கோ செங்கீரை. 

(10)

 

by Swathi   on 20 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.