ஈராக்கில் தீவிரவாதிகள் அரங்கேற்றிய வெடிகுண்டு தாக்குதலில் 50-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 250-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். தெற்கு ஈராக்கில் உள்ள ஒரு மசூதி அருகே நடந்த மிக மோசமாக இரு கார் குண்டு வெடிப்பில் மட்டும் அதிகமானோர் இறந்துள்ளனர். மேசன் பகுதியில் நடந்த தாக்குதலில் 14 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். இந்த தாக்குதல்களில் ராணுவ வீரர்கள், அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் இறந்துள்ளனர். ஈராக்கில் இதுவரை நடந்த தாக்குதலில் மட்டும் மொத்தம் 82 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
|