LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- தமிழச்சியின் கத்தி

சேரிக்குள் சென்றாள்

எண்சீர் விருத்தம்

எட்டிஇருந் திட்டபல சேரி மக்கள்
    இல்லங்கள் நோக்கிஅவள் மெல்லச் சென்றே
    இட்டகனல் வெப்பத்தால் தோழி மாரே
    என்நெஞ்சு வெந்ததுண்டு தோழி மாரே
    மட்டற்ற நாவறட்சி தோழி மாரே
    வாட்டுவதால் நீர்கொடுப்பீர் தோழி மாரே
    எட்டுணையும் மறுப்பீரோ தோழி மாரே
    என்றுநடு வீதியிலே கூவி நின்றாள்.

    சேரியிலே வீடுதொறும் விழித்தி ருந்து
    சேதிதெரிந் திடநினைத்த சேரி மக்கள்
    ஓரொருவ ராய்வந்தார் வௌியில்; 'அம்மா
    உற்றதென்ன உன்றனுக்கே? உரைக்க வேண்டும்.
    நீர்குடிப்பீர்; நில்லாதீர்; அமைதி கொள்வீர்;
    நிலவில்லை; இந்தஇருள் தன்னில் வந்தே
    கூரைகொளுத் தியதீயர் எவர்? உமக்குக்
    கொடுமைஇழைத் தவர்யாவர்? உரைப்பீர்!' என்றார்.

    'திரிநெருடி நெய்யூற்றி விளக்கை ஏற்றிச்
    சிறுதடுக்கும் இட்டுநீர் குடிக்கத் தந்த
    பெரியீரே! என்அருமைத் தோழி மாரே!
    பெருந்தீயால் சிறுவீடு வேகும் கோலம்
    தெருவினிலே கண்டீரே இரங்கி னீரோ?
    செயும்உதவி செய்தீரோ? மக்கள் கூட்டம்
    ஒருமுனையிற் பெற்றதீ முழுதும் தீர்க்கும்
    என்னுமோர் உண்மையினை மறக்க லாமோ?

    குளக்கரையின் சிறிதசைவு குளத்த சைவே!
    கொல்புலியால் ஒருவன்இடர் பலர்க்கும் அன்றோ?
    இளக்காரம் தாராமல் தீமை ஒன்றை
    இயற்றியோ ரைஊரார் எதிர்க்க வேண்டும்.
    களாப்புதரும் தன்னகத்தே இடங் கொடுத்தால்
    கவ்விவிடும் வேரினையே காட்டுப் பன்றி!
    விளாஓடும் பழமும்போல் பிரிதல் தீமை;
    வௌியானைக் கொட்டும்தே னீக்கள் வாழும்!

    சுதரிசனாம் சுபேதாராம் தோழி மாரே
    துணைவருக்குச் சிப்பாயின் உத்தி யோகம்
    உதவுவதாய் அழைத்துவந்தான்; கோட்டைக் குள்ளே
    ஒளித்துவைத்தான்; எனைவிட்டுப் பிரித்து வைத்தான்.
    இதன்நடுவில் குடிசையிலே இருக்கும் என்னை
    எடுத்தாள எண்ணமிட்டான். சூழ்ச்சி யெல்லாம்
    புதிதுபுதி தாய்ச்செய்தான்; கூரை தன்னைப்
    பொசுக்கினான் நான்கலங்கிப் போவே னென்று.

    தீஎரியும் நேரத்தில் தீமை வந்து
    சீறுகின்ற நேரத்தில் எனைஇ ழுத்துப்
    போய்அழிக்க எண்ணமிட்டான் எனது கற்பை!
    புதைத்திருந்தேன் என்இடையில் குத்துக் கத்தி
    தோயுமடா உன்மார்பில் என்று காட்டித்
    'தொலையில்போ' என்றேன்நான்! சென்றான் அன்னோன்.
    நாய்குலைக்க நத்தம்பா ழாமோ சொல்வீர்
    நான்அடைந்த தீமைகளைச் சுருக்கிச் சொன்னேன்.

    உயிர்போன்ற என்கணவர் இருக்கும் கோட்டை
    உட்புறத்தை நான் அடைய வேண்டும். அங்கே
    துயரத்தில் ஆழ்த்தப்பட்டிருக்கின் றாரா?
    துயரின்றி இருக்கின் றாரா துணைவர்?
    முயல்வதே என்கடமை; உளவு தன்னை
    மொழிவதுதான் நீங்கள்செய்யும் உதவி' என்றாள்.
    'துயரோடு வந்திட்ட எம்பி ராட்டி
    தூங்கிடுக விடியட்டும்' என்றார் அன்னோர்.

    'கண்மூட வழியிலையே! விடியு மட்டும்
    காத்திருக்க உயிரேது? தோழி மாரே
    விண்மூடும் இருட்டென்றும் பகல்தா னென்றும்
    வேறுபா டுளதேயோ வினைசெய் வார்க்கே?
    மண்மூடி வைத்துள்ள புதுமை யைப்போல்
    மனமூடி வைத்திருப்பார் சூழ்ச்சி! இந்தப்
    பெண்மூடி வைத்திடவோ என்உ ணர்வை?
    பெயர்கின்றேன் வழியுரைப்பீர் பெரியீர்' என்றாள்.

    'கையோடு கூட்டிப்போய்க் காட்டு கின்றோம்
    காலையிலே ஆகட்டும்; இரவில் போனால்
    செய்வதொன்றும் தோன்றாது; தெருத்தோன் றாது;
    சிப்பாய்கள் நம்மீதில் ஐயம் கொள்வார்.
    மெய்யாலும் சொல்கின்றோம் கணவர் உள்ள
    வீட்டையோ கோட்டையையோ அறிவ தெங்கே?
    ஐயாவைக் காணுவதும் முடியா' தென்றார்
    அரிதான மாண்புடையாள் 'சரிதான்' என்றாள்.

by Swathi   on 21 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.