|
||||||||
செத்தமரமும் சில மைனாக்களும் |
||||||||
சில மைனாக்கள் வரும்.
இந்த மரத்தில் உட்கார்ந்து பேனுதிர்த்த
இந்த மரத்தின் பூவை
கொத்த
கோத
கொண்டாடிப் பறக்க
சின்னதும் பெரிசுமாய்
மைனாக்கள் வந்துவந்து சேரும்.
மரம்
ஆணி வேரே அறுந்து நிற்பது
கொத்தவரும்
கோதவரும்
மைனாக்கள் பார்வைகளில் தெரியாது.
கட்டிய கன்னி பூக்காமல் உதிர்கின்ற
சாபக்கேட்டிற்கு இந்த மரம் ஆளாகி
சும்மா இலை சலசலத்து
காற்றுக்கும் கொஞ்சம் அசைந்து
போலிப் பச்சையினை முகமெல்லாம் பூசி
உயிருக்குள் பழுக்கும்
இந்த மரத்தின் துயரங்கள் தெரியாமல்,
"கீச்சென" மைனாக்கள் வரும்.
ஒன்றாகி
இரண்டாகி
ஒருகிளையாகிச் சிலவேளை
வரும்.
குந்தும்
பூக்களை மூக்காலே கோதும்.
மரம்
சோகத்தைப் புதைத்த சிரிப்புடனே
பூவுதிர்த்தும்.
மைனாக்கள் புறதானம் காட்டிக் களிக்கும்:
தொலையாது
மீண்டும்
நாளையும்
மைனாக்கள் வரும்.
ஆணி வேரே அறுந்து நிற்கின்ற
இந்த மரமோ
நிம்மதிக்காய் ஒருதடவை
சடசடவெனக் கிளைகளை உசுப்பும்
மைனாக்கள் வெருண்டு கலையும்.
சில மைனாக்கள் வரும். இந்த மரத்தில் உட்கார்ந்து பேனுதிர்த்த இந்த மரத்தின் பூவை கொத்த கோத கொண்டாடிப் பறக்க சின்னதும் பெரிசுமாய் மைனாக்கள் வந்துவந்து சேரும்.
மரம் ஆணி வேரே அறுந்து நிற்பது கொத்தவரும் கோதவரும் மைனாக்கள் பார்வைகளில் தெரியாது. கட்டிய கன்னி பூக்காமல் உதிர்கின்ற சாபக்கேட்டிற்கு இந்த மரம் ஆளாகி சும்மா இலை சலசலத்து காற்றுக்கும் கொஞ்சம் அசைந்து போலிப் பச்சையினை முகமெல்லாம் பூசி உயிருக்குள் பழுக்கும் இந்த மரத்தின் துயரங்கள் தெரியாமல், "கீச்சென" மைனாக்கள் வரும்.
ஒன்றாகி இரண்டாகி ஒருகிளையாகிச் சிலவேளை வரும். குந்தும் பூக்களை மூக்காலே கோதும். மரம் சோகத்தைப் புதைத்த சிரிப்புடனே பூவுதிர்த்தும். மைனாக்கள் புறதானம் காட்டிக் களிக்கும்:
தொலையாது மீண்டும் நாளையும் மைனாக்கள் வரும். ஆணி வேரே அறுந்து நிற்கின்ற இந்த மரமோ நிம்மதிக்காய் ஒருதடவை சடசடவெனக் கிளைகளை உசுப்பும் மைனாக்கள் வெருண்டு கலையும்.
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|