LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- திருமந்திரம்

செத்திலாப் பத்து

 

எண் சீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்) 
பொய்யனேன் அகம்நெகப் புகுந்தமுதூறும் 
புகுமலர்க்கழலிணையடி பிரிந்தும் 
கையனேன் இன்னுஞ் செத்திலேன் அந்தோ 
விழித்திருந் துள்ளக் கருத்தினை இழந்தேன் 
ஐயனே அரனே அருப்பெருங் கடலே 
அத்தனே அயன் மாற்கறி யொண்ணாச் 
செய்யமே னியனே செய்வகை அறியேன் 
திருப்பெருந்துறையுறை மேவிய சிவனே. 398 
புற்று மாய்மர மாய்ப்புனல் காலே 
உண்டி யாய் அண்ட வாணரும் பிறரும் 
மற்றியாரும் நின்மலரடி காணா 
மன்ன என்னையோர் வார்த்தையுட் படுத்துப் 
பற்றினாய் பதையேன் மனமிக உருகேன் 
பரிகிலேன் பரியாவுடல் தன்னைச் 
செற்றிலேன் இன்னுந் திரிதருகின்றேன் 
திருப்பெருந்துறையுறை மேவிய சிவனே. 399 
புலைய னேனையும் பொருளென நினைந்துன் 
அருள்புரிந்தனை புரிதலுங் களித்துத் 
தலையினால் நடந்தேன் விடைப்பாகா 
சங்கரா எண்ணில் வானவர்க்கெல்லாம் 
நிலையனே அலைநீர்விடமுண்ட நித்தனே 
அடையார்புர மெரிந்த 
சிலையனே யெனைச் செத்திடப் பணிவாய் 
திருப்பெருந்துறையுறை மேவிய சிவனே. 400 
அன்பராகிமற் றருந்தவம் முயல்வார் 
அயனும் மாலுமற் றழலுறு மெழுகாம் 
என்பராய் நினைவார் எனைப்பலர் 
நிற்க இங்கெனை எற்றினுக் கண்டாய் 
வன்பராய் முருடொக்கும் என்சிந்தை 
மரக்கண் என்செவி இரும்பினும் வலிது 
தென்பராய்த் துறை யாய் சிவலோகா 
திருப்பெருந்துறையுறை மேவிய சிவனே. 401 
ஆட்டுத்தேவர் தம் விதியொழிந் தன்பால் 
ஐயனே என்றுன் அருள்வழி யிருப்பேன் 
நாட்டுத்தேவரும் நாடரும் பொருளே 
நாதனே உனைப் பிரிவறா அருளைப் 
காட்டித்தேவநின் கழலிணை காட்டிக் 
காயமாயத்தைக் கழிந்தருள் செய்யாய் 
சேட்டைத்தேவர்தந் தேவர்பிரானே 
திருப்பெருந்துறையுறை மேவிய சிவனே. 402 
அறுக்கிலேன் உடல்துணிபடத்தீப்புக் 
கார்கிலேன் திருவருள் வகையறியேன் 
பொறுக்கிலேன்உடல் போக்கிடங் காணேன் 
போற்றி போற்றியென் போர்விடைப் பாகா 
இறக்கிலேன் உனைப்பிரிந்தினிதிருக்க 
எனசெய்கேன்இது செய்க என்றருளாய் 
சிறக்கணே புனல் நிலவிய வயல்சூழ் 
திருப்பெருந்துறையுறை மேவிய சிவனே. 403 
மாயனேமறிகடல்விடம் உண்ட 
வானவாமணி கண்டந்தெம் அமுதே 
நாயினேன் உனைநினையவும் மாட்டேன் 
நமச்சிவாய என் றுன்னடி பணியாய் 
பேயன் ஆகிலும் பெருநெறி காட்டாய் 
பிறைகுலாஞ்சடைப் பிஞ்ஞகனேயோ 
சேயனாகிநின்றலறுவ தழகோ 
திருப்பெருந்துறையுறை மேவிய சிவனே. 404 
போது சேரயன் பொருகடற் கிடந்தோன் 
புரந்த ராதிகள் நிற்கமற்றென்னைக் 
கோதுமாட்டிநின் குரைகழல் காட்டிக் 
குறிக்கொள் கென்றுநின்தொண்டரிற் கூட்டாய் 
யாது செய்வதென் றிருந்தனன் மருந்தே 
அடியனேன் இடர்ப்படுவதும் இனிதோ 
சீதவார்புனல் நிலவிய வயல்சூழ் 
திருப்பெருந்துறையுறை மேவிய சிவனே. 405 
ஞாலம் இந்திரன் நான்முகன் வானவர் 
நிற்க மற்றெனை நயந்தினி தாண்டாய் 
காலன் ஆர்உயிர்கொண்ட பூங்கழலாய் 
கங்கை யாய் அங்கி தங்கிய கையாய் 
மாலும் ஓலமிட்டலறும் அம்மலர்க்கே 
மரக்க ணேனேயும் வந்திடப் பணியாய் 
சேலும் நீலமும் நிலவிய வயல்சூழ் 
திருப்பெருந்துறையுறை மேவிய சிவனே. 406 
அளித்துவந்தெனக் காவஎன்றருளி 
அச்சந்தீர்த்தநின் அருட்பெருங்கடலில் 
திளைத்துந்தேக்கியும் பருகியும் உருகேன் 
திருப்பெருந்துறையுறை சிவனே 
வளைக்கை யானொடு மலரவன் அறியா 
வான வாமலை மாதொரு பாகா 
களிப்பெலாம் மிகக் கலங்கிடு கின்றேன் 
கயிலை மாமலை மேவிய கடலே. 407 

 

எண் சீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்) 

 

பொய்யனேன் அகம்நெகப் புகுந்தமுதூறும் 

புகுமலர்க்கழலிணையடி பிரிந்தும் 

கையனேன் இன்னுஞ் செத்திலேன் அந்தோ 

விழித்திருந் துள்ளக் கருத்தினை இழந்தேன் 

ஐயனே அரனே அருப்பெருங் கடலே 

அத்தனே அயன் மாற்கறி யொண்ணாச் 

செய்யமே னியனே செய்வகை அறியேன் 

திருப்பெருந்துறையுறை மேவிய சிவனே. 398 

 

புற்று மாய்மர மாய்ப்புனல் காலே 

உண்டி யாய் அண்ட வாணரும் பிறரும் 

மற்றியாரும் நின்மலரடி காணா 

மன்ன என்னையோர் வார்த்தையுட் படுத்துப் 

பற்றினாய் பதையேன் மனமிக உருகேன் 

பரிகிலேன் பரியாவுடல் தன்னைச் 

செற்றிலேன் இன்னுந் திரிதருகின்றேன் 

திருப்பெருந்துறையுறை மேவிய சிவனே. 399 

 

புலைய னேனையும் பொருளென நினைந்துன் 

அருள்புரிந்தனை புரிதலுங் களித்துத் 

தலையினால் நடந்தேன் விடைப்பாகா 

சங்கரா எண்ணில் வானவர்க்கெல்லாம் 

நிலையனே அலைநீர்விடமுண்ட நித்தனே 

அடையார்புர மெரிந்த 

சிலையனே யெனைச் செத்திடப் பணிவாய் 

திருப்பெருந்துறையுறை மேவிய சிவனே. 400 

 

அன்பராகிமற் றருந்தவம் முயல்வார் 

அயனும் மாலுமற் றழலுறு மெழுகாம் 

என்பராய் நினைவார் எனைப்பலர் 

நிற்க இங்கெனை எற்றினுக் கண்டாய் 

வன்பராய் முருடொக்கும் என்சிந்தை 

மரக்கண் என்செவி இரும்பினும் வலிது 

தென்பராய்த் துறை யாய் சிவலோகா 

திருப்பெருந்துறையுறை மேவிய சிவனே. 401 

 

ஆட்டுத்தேவர் தம் விதியொழிந் தன்பால் 

ஐயனே என்றுன் அருள்வழி யிருப்பேன் 

நாட்டுத்தேவரும் நாடரும் பொருளே 

நாதனே உனைப் பிரிவறா அருளைப் 

காட்டித்தேவநின் கழலிணை காட்டிக் 

காயமாயத்தைக் கழிந்தருள் செய்யாய் 

சேட்டைத்தேவர்தந் தேவர்பிரானே 

திருப்பெருந்துறையுறை மேவிய சிவனே. 402 

 

அறுக்கிலேன் உடல்துணிபடத்தீப்புக் 

கார்கிலேன் திருவருள் வகையறியேன் 

பொறுக்கிலேன்உடல் போக்கிடங் காணேன் 

போற்றி போற்றியென் போர்விடைப் பாகா 

இறக்கிலேன் உனைப்பிரிந்தினிதிருக்க 

எனசெய்கேன்இது செய்க என்றருளாய் 

சிறக்கணே புனல் நிலவிய வயல்சூழ் 

திருப்பெருந்துறையுறை மேவிய சிவனே. 403 

 

மாயனேமறிகடல்விடம் உண்ட 

வானவாமணி கண்டந்தெம் அமுதே 

நாயினேன் உனைநினையவும் மாட்டேன் 

நமச்சிவாய என் றுன்னடி பணியாய் 

பேயன் ஆகிலும் பெருநெறி காட்டாய் 

பிறைகுலாஞ்சடைப் பிஞ்ஞகனேயோ 

சேயனாகிநின்றலறுவ தழகோ 

திருப்பெருந்துறையுறை மேவிய சிவனே. 404 

 

போது சேரயன் பொருகடற் கிடந்தோன் 

புரந்த ராதிகள் நிற்கமற்றென்னைக் 

கோதுமாட்டிநின் குரைகழல் காட்டிக் 

குறிக்கொள் கென்றுநின்தொண்டரிற் கூட்டாய் 

யாது செய்வதென் றிருந்தனன் மருந்தே 

அடியனேன் இடர்ப்படுவதும் இனிதோ 

சீதவார்புனல் நிலவிய வயல்சூழ் 

திருப்பெருந்துறையுறை மேவிய சிவனே. 405 

 

ஞாலம் இந்திரன் நான்முகன் வானவர் 

நிற்க மற்றெனை நயந்தினி தாண்டாய் 

காலன் ஆர்உயிர்கொண்ட பூங்கழலாய் 

கங்கை யாய் அங்கி தங்கிய கையாய் 

மாலும் ஓலமிட்டலறும் அம்மலர்க்கே 

மரக்க ணேனேயும் வந்திடப் பணியாய் 

சேலும் நீலமும் நிலவிய வயல்சூழ் 

திருப்பெருந்துறையுறை மேவிய சிவனே. 406 

 

அளித்துவந்தெனக் காவஎன்றருளி 

அச்சந்தீர்த்தநின் அருட்பெருங்கடலில் 

திளைத்துந்தேக்கியும் பருகியும் உருகேன் 

திருப்பெருந்துறையுறை சிவனே 

வளைக்கை யானொடு மலரவன் அறியா 

வான வாமலை மாதொரு பாகா 

களிப்பெலாம் மிகக் கலங்கிடு கின்றேன் 

கயிலை மாமலை மேவிய கடலே. 407 

 

by Swathi   on 25 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.