LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- வித்யாசாகர்

செத்துமடியாதே செய்யத் துணி.. வித்யாசாகர்

பறவைகள் பறக்கின்றன
தூரத்தை உடைக்கின்றன..
பூக்கள் மலர்கின்றன
முட்களையும் சகிக்கின்றன..

மரங்கள் துளிர்க்கின்றன
மலர்களையே உதிர்க்கின்றன..
மணல்வெளி விரிகிறது
மனிதத்தையும் கொடுக்கிறது..

மனிதன் பிறக்கிறான்
மாண்டப்பின்பும் தவிக்கிறான்
உலகை அழிக்கிறான்
ஒரு சாதியில் பிரிக்கிறான்

ஐயோ சாமி என்கிறான்
சாமியின் சூழ்ச்சுமம் மறக்கிறான்
அந்தோ பாவம் என்கிறான்
அத்தனைப் பாவமும் அவனே செய்கிறான்..

எல்லாம் நானே என்கிறான்
எங்கும் இல்லாமல் போகிறான்
இது தான் உலகம் என்கிறான்
அதுவாகவே ஆகிப்போகிறான்..

அணுவிலும் ஆயிரம் பிரிக்கிறான்
அலைகடல் ஆழம் அளக்கிறான்..
அகிலமிதோ ஒரு புள்ளி என்கிறான்
புள்ளிப் புள்ளியாய் கோள்கள் கடக்கிறான்..

எதெல்லாம் செய்தானோ
அதனாலேயே அழிகிறான் மனிதன்,
செய்யமறந்ததை துளி எண்ணவே
மறுக்கிறான்..

இனி –

மாற்றத்தில் மார்பு விரிய
மாறும் உலகை கண்டு ரசிப்போம்
நல்லதே எங்கும் உண்டென்று
தீயதையும் மெல்ல ஒழிப்போம்..

உழைப்பதில் கண்ணியம் காட்டி
உறவிலே உண்மையை விதைப்போம்
நல்லதை எண்ணிக் கடப்பின்
நானிலமும் நமதே யாகும்!!
-------------------------------------------------------------------------
வித்யாசாகர்

by Swathi   on 22 Apr 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
காதலா காமமா? காதலா காமமா?
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.