தூத்துக்குடியில் கனிம மணல் அள்ளப்படுவதை ஆய்வு செய்ய ஆறு குழுக்களை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இன்று முதல் 14 ஆம் தேதி வரையிலும், 19 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரையிலும் இக்குழுக்கள் ஆய்வு நடத்த உள்ளன. இக்குழுக்களில் மூத்த துணை ஆட்சியர், நில அளவைத்துறையின் உதவி இயக்குநர், கனிம அல்லது மண்ணியல் துறையைச் சேர்ந்த உதவி இயக்குநர், தமிழக மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் சுரங்க மற்றும் மண்டல சுற்றுச்சூழல்துறை பொறியாளர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்இந்த ஆய்விற்கு பிறகு வருவாய்துறை செயலாளர் மீண்டும் 22 முதல் 24 ஆம் தேதிகளில் அந்த இடத்திற்கு சென்று ஆய்வு செய்யவுள்ளார்.
|